Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

09 | YS | வறுமை


ஊரடங்கு சட்டம் போட்டார்கள் 
பல ஏழை ஜனங்களின் பசி அடங்க எந்த சட்டதிட்டமோ போடவில்லை. 
உலையில் தண்ணீர் கொதிக்க வயிறு பற்றி எரியும்.
கட்டுப்படியாகாத விலை இருந்தும் 
வயிற்றை கட்டுப்படுத்த வழியில்லை.
விளைந்த நெல்லில் ஒரு நெல்லில் கூட ஏழையின் பெயர் எழுதப்படவில்லை. 
யார் குற்றம் ?

இருக்கின்றவன் சேகரித்தால் சேமிப்பு.
இல்லாதவனுக்கு ஏற்படும் பாதிப்பு.
எவன் பணக்காரன் ? எவன் ஏழை ?
அவனும் பதுக்குகின்றான் இவனும் பதுக்குகின்றான். 
அவன் சேமிக்க என்கிறான் இவன் பசிக்கு  என்கிறான்.

நிவாரணம் என்பது வறுமை குடும்பத்திற்கு அல்ல.
அது கூட்டுக் குடும்பத்திற்கு உரியதானது.
மனித வர்க்கத்தை போலவே 
அடிக்கின்ற காற்று > மழைக்கு கூட ஏழையின் 
வயிற்றில் அடித்து தான் பழக்கம் போல.

நிவாரண பணி எல்லாம் 
எவன் எவன் வீட்டு நிர்மாணபணிக்கோ போய்விட்டது.
ஏழை வைத்த வாழை இருபுறமும் குலை தள்ளும்
அதில்; ஒரு பழம் கூட அவனுக்கு சொந்தமில்லை.
பல பேரின் ஏழ்மை வாழ்க்கையில் கண்ணத்தில்
வறுமை வரைந்த கோலமாய் கண்ணீர் உண்டு.

பதுக்கப்படுகின்ற எதுவும் சமமாக கொடுக்கப்படுமானால் 
ஏழையின் வறுமை பகைவான் ஒழிவான்.

by
A. lakshika







 

Comments

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

26 | YJ | தழைக்க ஏங்கும் செந்நெல்

உணவின் அருமை அறியாது உன்னதமான என்னை அன்று உதாசீனமாய் வீசி எறிந்தாயே சேற்றோடு போராடுபவனின் உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட செந்நெல் நான்- இன்று என் ஏளனப்பார்வைக்கு முன் நீ விழிகளும் உற்று நோக்கிட போராடும் சிறுமையை விஞ்சிய சிறுமை கொரோனா என்னும் பெயரால் காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை அன்று நீ என்னை வீசினாய் இன்று எனக்காக ஏங்குகின்றாய் இத்தனை யுகங்களாக என்னை இரைத்து எறிந்தது போதும் நாளைய உலகை நீ காண இக்கனமே என்னை பூமித்தாயோடு இணையச்செய்வாய் நாளை உன் பசிப்பிணிக்கு நானே மருந்தாக உதிப்பேன். by S. Shakthi

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana