ஊரடங்கு சட்டம் போட்டார்கள்பல ஏழை ஜனங்களின் பசி அடங்க எந்த சட்டதிட்டமோ போடவில்லை.உலையில் தண்ணீர் கொதிக்க வயிறு பற்றி எரியும்.கட்டுப்படியாகாத விலை இருந்தும்வயிற்றை கட்டுப்படுத்த வழியில்லை.விளைந்த நெல்லில் ஒரு நெல்லில் கூட ஏழையின் பெயர் எழுதப்படவில்லை.யார் குற்றம் ?இருக்கின்றவன் சேகரித்தால் சேமிப்பு.இல்லாதவனுக்கு ஏற்படும் பாதிப்பு.எவன் பணக்காரன் ? எவன் ஏழை ?அவனும் பதுக்குகின்றான் இவனும் பதுக்குகின்றான்.அவன் சேமிக்க என்கிறான் இவன் பசிக்கு என்கிறான்.நிவாரணம் என்பது வறுமை குடும்பத்திற்கு அல்ல.அது கூட்டுக் குடும்பத்திற்கு உரியதானது.மனித வர்க்கத்தை போலவேஅடிக்கின்ற காற்று > மழைக்கு கூட ஏழையின்வயிற்றில் அடித்து தான் பழக்கம் போல.நிவாரண பணி எல்லாம்எவன் எவன் வீட்டு நிர்மாணபணிக்கோ போய்விட்டது.ஏழை வைத்த வாழை இருபுறமும் குலை தள்ளும்அதில்; ஒரு பழம் கூட அவனுக்கு சொந்தமில்லை.பல பேரின் ஏழ்மை வாழ்க்கையில் கண்ணத்தில்வறுமை வரைந்த கோலமாய் கண்ணீர் உண்டு.பதுக்கப்படுகின்ற எதுவும் சமமாக கொடுக்கப்படுமானால்ஏழையின் வறுமை பகைவான் ஒழிவான்.byA. lakshika
வானரம் சூழ்ந்த வையகம் எங்கும் பரவி வரும் கொடூரமான கொரோனா வாழ வேண்டிய மனிதரை வைகுண்டம் சென்றிட வழியமைத்த கொரோனா கூடுமா இன்னும் இல்லையேல் கூலியின் வயிற்றில் அடிக்குமா ...! அலை அலையாய் மனிதர் கூட்டத்தை கொன்று குவித்ததென்ன... அநாதை பினமாய் அள்ளி அள்ளி குவிப்பதென்ன ... கல கல வென கலகலப்பு ஒலித்து கொண்டிருந்த ஓராயிரம் வீடுகளில் - இன்று கண்ணீரும் கம்பளையும் நிறைந்த காவியத் தோற்றத்தை கண்டீரோ..... காடு மேடெல்லாம் ஓடித்திரிந்தவரின் கால்கள் தரையில் பதித்து நின்றதென்ன... காணல் நீராய் போன எம் நாட்டு ஜனங்களின் கம்பீரமும் , கானகத்தையே சுற்றி வளைக்கும் கனாக்களும் கடை தெருவிலே நின்ற காட்சிகளை கண்குளிர கண்டீரோ கொலை கொலையாய் கொண்று தீர்த்து கொடுங்கோலனாக மாறியதென்ன கொரொனா என்ற கொடிய உயிரினம் கூட்டம் கூட்டமாய் கூடி ஆடித் திரிந்த குமரன் குமரியினம் இன்று கூட்டுக்குள் முடங்கிக் கிடப்பதென்ன... கூலியாட்களின் குமுறல்களையும் கூலிவீட்டு குழந்தைகளின் பசி அலறல்களையும் கேட்கிறது அந்த காதின் வழி கொடுங்கோலான கொரோனா என்ன...

Comments
Post a Comment