Skip to main content

Posts

Showing posts with the label Goal 15

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

56 | YS | மதிப்பு மிக்கதோர் சூழல்

அழகே ! பேரழகே.. ! - இயற்கை  அன்னையின்அரும்பெரும் கொடையே ! இறைவனே இயற்கை - இவ்வியற்கையே  இறைவன் ! நாமெல்லாம் இவர்களின் குழந்தைகள் ! பச்சை வண்ண சூழலே ஓவியம் ..! - இருளில்  மூழ்கிய இரவை வழியனுப்பி  வெளிச்சத்தை பரப்பி... - சாந்தமான  பல்வியல் தொடங்கி.... சங்கீதமாய் மலரும் காலைப் பொழுதினை  என்னவென்று வர்ணிப்பது  நதி என்னும் பெண் மகளின் சந்தோஷ புன்னகையை ! - இயற்கையின் கானம் ரீங்காரமிடும் வண்டுகளும்  பூக்களை தழுவும் தேனீ கூட்டமும்  இயற்கையின் வர்ணஜாலம்.. ! மண் வாசனை வீசும் அத்தருணம் - தென்றல் பூமி தாயை தழுவும் - அந்த  நொடிகளை வர்ணிக்க கவிதைகள்  போதவில்லை !  பறவைகளின் கீச்சொலியே - சங்கீத  ஸ்வரங்களாக மாறும் ! பூமி தாயின் சுற்றுகையே - நம்  பிறவியின் தத்ததுவம்  சூழலை பிரகாசிக்க வைக்கும் மின்னல் - மனதை  சிறை பிடிக்கும் இடி முழக்கம் ! மேகம் மழையாகப் பொழியும் பூமி தாய் மனம் குளிர்வாள்... இக்காட்சியே இயற்கையின் செய்யுள்  இவையெல்லாம் காணும் வரம் - மானிடனாய்  பிறந்து ஆறறிவு கொண்ட எமக்கு கிடைத்துள்ளது  நம் உணர்வ...

53 | SS | இயற்கையின் குமுறல்

இயற்கை அன்னை கருவிலே இன்புற்று வாழ்கின்ற நாம் இயற்கையின் இனிது மறந்து  இயமனாய் மாறியதேனோ! இயற்கை தந்த வளங்கள் பலவும்  இந்நிலம் முழுதும் பரவிக் கிடக்க  இங்கு மனிதனின் தேவை கூடவே இயற்கையை சீர்க்குழைப்பதேனோ! இருப்பதை கொண்டே சிறப்புடன் வாழும் காலம் மறந்து இயற்கையை அழித்து இன்னலடையும்  இவனோ மதி உள்ள மாமனிதன்? இவன் மரம் செடி கொடி மண்ணில் இருப்பதாலே இயற்கையை அழிக்க துடித்தானோ! இவள் கொண்ட வளத்தினையும் வீண் கொள்ள வைத்து நாளுக்கு நாளாய் நீ நாகரிகம் வளர்த்து இருக்கும் கனிம வளங்களையே  கண் அசைவில் சிதைத்து கண்ட வாயுவையே  காற்றினிலே விதைத்து இன்னினி கண் கண்ட நீரினையும் கானல் நீராக்கி இவன் புண் கொள்ள செய்தானோ! நல்மண் கொண்ட நிலத்தினையே இழைத்த கொடுமைதனில் ஈன்றெடுத்தேன் கொரோனாவை கொன்று போக துடிக்கின்றன – இக்கொடுமை இழைத்த பூச்சிகளை மாண்டு போகுமோ மனித இனம் இனியேனும் மனம் திரும்புமோ  இயற்கையிடம்.. இதம் தரும் குளிர் காற்று இருக்க  இம்சை தரும் ஏசி எதற்கு? இறைவனின் படைப்பு இருக்க  இக்கணம் மறையும் செயற்கை எதற்கு? இமைகள் திறந்து வைத்தாலே இதயத்தை நிறைக்கும் இயற்கை பரமச...

52 | YS | நான் உன்னை மறவேன்

நான் உன்னை மறவேன் ... கருவின்றி என்னை சுமக்கிறாய்.... கர்வமின்றி அழகாய் சிரிக்கிறாய்... கபடமின்றி அள்ளிக் கொடுக்கிறாய்... தாகம் தீர்க்க மழையாய் வந்தாய்... தேகம் கூச தென்றலாய் மிதந்தாய்... கண்கள் குளிர நிலவாய் வெளிச்சம் தந்தாய்... பறவைகளையும் சொந்தமாக்கினாய்... எண்ணிப்பார்தேன் விந்தையாகினாய்... எத்தனை அதிசயங்கள் உன்னில் நெளிந்தாய் நதியாக உயர்ந்தாய் மலையாக... படர்ந்தாய் புல்வெளியாக... விரிந்தாய் கடலாக... அத்தனைக்கும் உயிர் தந்தவள் நீயே... மறவேன் என்றும் உனை இயற்கை தாயே... by P. Nathiya 140

51 | YS | இயற்கை

அன்னையின்றி அமையாத அவனியிலே... யாம் பெற்ற அருட்கொடையாம்  இயற்கையே..... முகிலினங்கள் ஒன்றோடொன்று முட்டிமோத  முத்துத்துளியாய் மழை பொழிய  வானை முத்தமிடும் மலையைத் தொட்டு;...... நிலத்துடன் காதல் கொண்டு  சிறு அருவியாய் பொழிய  மழைச்சாரல் மண்ணை முத்தமிட்;டதுவே...... சலசலவென புனல் பெருக்கெடுக்க  சிலுசிலுவென பூங்காற்று மேனியை சிலிர்க்கவைக்க  பட்சி இனங்கள் ஆனந்த கீதம் இசைக்க  பூக்கள் பூத்து குளுங்கி மணம் வீச பசுமையின் உறைவிடமாகிய வண்ண சோலையிலே தேனீக்கள் ரீங்காரம் செய்ததுவே...... மண் வாசனையோடு ஓர் பனித்துளி என் கையை நனைத்திட  கடலலைகள் தாலாட்டி ஆதவனை உறங்கவைக்க சுடரொளிக்கும் வெண்மதி  பால் வெண்ணிறமாய் வானிலே பவனிவந்து விண்ணை ஒழிர்வித்ததுவே  ஈசன் அருளிய அவனியிலே  இரு கண் கொண்டு காண இயலா  இயற்கையின் அற்புத காட்சியிது    உள்ளம் உடைந்து மனம் நொந்து  வருத்திடும் மானிடா..... ! இயற்கை கொடையை ..... ஒரே ஒரு தடவை எட்டி பார்த்தாலே போதும்  உன் உள்ளம் தெளிவடைந்து  உத்வேகம் பெற்றிடலாம்  புது ஜனனமும் அடைந்திடலாம் . அதனுட...

43 | SS | காலநிலை மாற்றமும் எதிர்கால தோற்றமும்..!

எத்தனை எத்தனை  மாற்றங்கள் மண்ணுலகினிலே மாறிவரும் உலகிற்கேற்ப மானிடர்களும் மாறுவதே  சால சிறப்புடையது என்றிடலாம்...! அத்துனை மாற்றங்களையும்  ஏற்றுவரும் எம்மவர்களில் ஏனோ தெரியவில்லை - இந்த காலநிலை மாற்றங்கள் மாத்திரம் கோரத்தாண்டவம் ஆடுகின்றன...! இயற்கயை அல்லவா  இறைவனென எண்ணி வாழ்கின்றான்.. பிறகு ஏன் இந்த இறைவனால்  ஏற்படும் அனர்த்தங்களையும் பாதிப்புகளையும் ஏற்று தன்னை தயார்படுத்த தயங்குகிறான்..??? பள்ளிச் செல்லும் செல்வங்களும் பலம் கொண்ட மானிடர்களும் மட்டுமல்ல.. பறவைகளும் கூட - இந்த இயற்கை மாற்றங்களிற்கு தங்களை இயைபாக்கிக்கொள்ள வேண்டும்...! ஆக... எதிர்காலத்தில் ஒருபோதும்  இயற்கை அழிவுகளுக்கு நாங்கள் இடங்கொடுக்க போவதில்லை... மீறி அனர்த்தங்கள் ஏற்பட்டால் கல்வி எனும் புத்துணர்ச்சியால் துணிச்சலுடன் எழுந்து வீருநடை போட்டிடுவோம் என்பதிலும் ஐயமில்லை….!! by M. Sahana 69