Skip to main content

Posts

Showing posts with the label 04.Passara

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

55 | YJ | கல்வியின் அவசியம்

வாழ்வில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு நுண்ணாய்வு கல்வி ! கல்வி என்பது மூன்றெழுத்தில் தொடரும் - சொல் அல்ல  வாழ்வின் முடிவு வரை வாழும் செல்வம் கல்வி ! எமது எதிர்காலம் சிறந்த வழிகாட்டலில் அமைய - நாம் பயணிக்கும் முதல் பள்ளி - கல்வியே ! பள்ளி பருவம் அழிவில்லா இன்பம் பிரியும்  வழி பள்ளி மட்டுமே கல்வி - அல்ல  பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி - ஆற்றல் உண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் கடல் கடந்த உத்தியோகம் செய்தாலும் கல்வி அறிவு இன்றி எதுவும் இல்லை.  கடலின் ஆழம் எதுவரை இருக்கின்றதோ அவ்  ஆழத்தை விட கடல் கடந்த நூல் கல்வி தான் ! கண்களில் வண்ண மீன்கள் வரி வரி கோலம் - இட சின்னஞ் சிறு மழலையின் - இன்ப வாழ்வு இன்று புரியா புதிர் அன்று புகழைத் தரும் கல்வியே என்றும் பெரும் செல்வம் கண்ணின் நிலையான விம்பம் ! ஒவ்வொரு மனிதநேய ஆற்றலிலும் - ஒரு திறனாய்வு  கல்வி - கல்வியே சிறந்த வழிகாட்டல் !  நல்ல புத்தகத்தை திரட்டி பார்க்கும் - திறனாய்வு கடல் போன்று அறிவை வளரச் செய்யும் புத்தகம்  தோல்வி வெற்றி இவற்றை கடந்து - எதிர்கால  சந்ததி வர்ண பூக்களாய் - மலர ! கல்...

54 | YS | கொரோனாவும் எம் நாடும்

வானரம் சூழ்ந்த வையகம் எங்கும்  பரவி வரும் கொடூரமான கொரோனா வாழ வேண்டிய மனிதரை வைகுண்டம் சென்றிட  வழியமைத்த கொரோனா    கூடுமா இன்னும் இல்லையேல் கூலியின் வயிற்றில் அடிக்குமா ...! அலை அலையாய் மனிதர் கூட்டத்தை கொன்று குவித்ததென்ன... அநாதை பினமாய் அள்ளி அள்ளி குவிப்பதென்ன ... கல கல வென கலகலப்பு ஒலித்து கொண்டிருந்த ஓராயிரம் வீடுகளில்  - இன்று கண்ணீரும் கம்பளையும் நிறைந்த காவியத்  தோற்றத்தை கண்டீரோ..... காடு மேடெல்லாம் ஓடித்திரிந்தவரின் கால்கள்  தரையில் பதித்து நின்றதென்ன... காணல் நீராய் போன எம் நாட்டு ஜனங்களின் கம்பீரமும் , கானகத்தையே சுற்றி வளைக்கும்  கனாக்களும் கடை தெருவிலே நின்ற  காட்சிகளை கண்குளிர கண்டீரோ கொலை கொலையாய் கொண்று தீர்த்து  கொடுங்கோலனாக மாறியதென்ன  கொரொனா என்ற கொடிய உயிரினம்  கூட்டம் கூட்டமாய் கூடி ஆடித் திரிந்த  குமரன் குமரியினம் இன்று  கூட்டுக்குள் முடங்கிக் கிடப்பதென்ன... கூலியாட்களின் குமுறல்களையும்  கூலிவீட்டு குழந்தைகளின் பசி அலறல்களையும்  கேட்கிறது அந்த காதின் வழி  கொடுங்கோலான கொரோனா என்ன...

52 | YS | நான் உன்னை மறவேன்

நான் உன்னை மறவேன் ... கருவின்றி என்னை சுமக்கிறாய்.... கர்வமின்றி அழகாய் சிரிக்கிறாய்... கபடமின்றி அள்ளிக் கொடுக்கிறாய்... தாகம் தீர்க்க மழையாய் வந்தாய்... தேகம் கூச தென்றலாய் மிதந்தாய்... கண்கள் குளிர நிலவாய் வெளிச்சம் தந்தாய்... பறவைகளையும் சொந்தமாக்கினாய்... எண்ணிப்பார்தேன் விந்தையாகினாய்... எத்தனை அதிசயங்கள் உன்னில் நெளிந்தாய் நதியாக உயர்ந்தாய் மலையாக... படர்ந்தாய் புல்வெளியாக... விரிந்தாய் கடலாக... அத்தனைக்கும் உயிர் தந்தவள் நீயே... மறவேன் என்றும் உனை இயற்கை தாயே... by P. Nathiya 140

49 | CS | பொருளாதார கவிதை

நாம் வெற்றியடைவதை நம்மைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது என நம்ப வேண்டும். இதயம் இல்லா இணைய இயந்திரத்தில் நாம்  கண்டெடுக்கும் நல்ல இதயம் கொண்டது நட்பாக இருக்க வேண்டும் என நினைத்திட வேண்டும். வாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும்  என்றால் முதலில் நம்மை இழிவாக நினைப்பவர்களை நம்மிடம் என்றுமே குறை மட்டும் காண்பவர்களை நம் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கிட வேண்டும். நம் வேலைகளில் வேகத்தடைகள் இருக்கலாம் ஆனாலும் அதன் மேல் நாம் கொண்ட நம்பிக்கையில் சிறிதும் மனத்தடை  வரக்கூடாதென நினைத்திட வேண்டும். இவை அனைத்தையும் நாம் மறவாவிட்டால் நம் வாழ்க்கை நன்று மலரும். நாம் எப்படி நடக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி. வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது  முன்னோக்கி இருந்தால் எமது நாட்டின் பொருளாதாரமும் வானோங்கி வளர்ச்சிப்பெறும். by  V. Pramila

34 | CJ |ஆண் , பெண் பால்நிலை சமூகத்தை அடைதல் மற்றும் பெண்களையும் பெண் பிள்ளைகளையும் வலுப்படுத்தல்.

பண்பு தரம் மாறாத பெண்ணுக்கு   ஆற்றல் மேலோங்கும் பிள்ளையாக தான்  வலுப்பெற்று உதித்தோம்!... உற்சாகத்திற்கு உறுதிப்படுத்தல் இல்லை நாங்கள் பெண்பிள்ளைகளாம்!... கூடை எற்றி கொழுந்து பறிக்கும் கீழ் மட்ட பாகுபாடு நீங்கி - எங்களுக்குள் திறன்மிக்க தீர்மானத்திற்கான பால்நிலை  சமவுரிமை அங்கீகாரம் தர வேண்டும்!.... சிறுக சிறுக சேர - குவிந்துள்ள வன்முறைகள் நீங்க - எங்கள் இரு கண்களாம் எண்ணும் எழுத்தும் சுடரொழி பரப்ப  புலமை வெளிப்படும் பரிசிலோடு புனர் ஜென்மம் அடைவோம்!.... by  P. Jinnuksha. F158

33 | YJ | நிலைபேண்தகு அபிவிருத்தியில் கல்வியே துணைகோள்...

கல்வி > வறுமை > போசணை மட்டம் இம்மூன்றும் பிரியா தொடர்புடையன... எம்மோடு உடன்பிறந்த வறுமையினால்  எம்மில் உதித்தெழுந்த போசணைமட்ட பிரச்சினையில்  எம்மை மீட்டெடுக்கும் சக்தி கொண்டது கல்வி... இத்தொடர்பை அறியாதோர் அறியும் வரை காத்திருப்பதில்லை... இதனால் மேலோர் > கீழோர் என்ற பாகுபாடு... சம உரிமையின்மை > தொழிலின்மை... இறுதியில் அவமானங்கள்... வேதனைகள்...  இதில் எங்கே எவ்வாறு அபிவிருத்தி?  எமக்கு கீழே இருந்த நாடுகள் இன்று விண்னைத் தொட... நாம் மட்டும் அதே இடத்தில்... இனி கல்வியின் துணையோடு நிலைபேண்தகு அபிவிருத்தியே எம் நோக்கு... எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமாம்... எமது அறிவு வளர்ந்தால் எமது தரம் உயரும்...  மேல் > கீழ் வர்க்கம் என்ற அநாவசிய பிளவு ஒழியும்... ஆணோ > பெண்ணோ சமமான உரிமை கிட்டும்... புலமைபரிசில்கள் குவிய தொழில் வாய்ப்புகள் வந்து சேரும்... தொழிநுற்ப உலகில் எம்மை முன்னேற்றும் பிரம்மாஸ்திரமே கல்வி... கல்வி கற்று எமது நாடாகிய இலங்கையை  நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்கி முன்னேற்றி வெற்றி காண்போம்... by  P. Chithusshaa F090

29 | YS | விலகிவிடு

விடியலும் அஸ்தமனமாகிறது – உன் கோரப்பிடியில் வாசற் கதவைத் திறக்க தயக்கம் ஏதோ மனதில் கதை பேசும் காதலனும் தள்ளிச் செல்கிறான் - தொற்று என்று பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேள் உன் நாடகமும் தெருவில் கதை போடும் உன்னால் சமூக மாற்றம் - பல உதவும் கரங்களின் தோற்றம் (சமூக) இடைவெளிகள் தூரம் சென்றாலும் இன்னும் பின்னடைவு வாழ்வில் மட்டுமல்ல வளர்ச்சியிலும் தான் பெற்ற செல்ல மகள் பூப்படைந்த வேலையில் - தாய் பூரிக்க நேரமில்லை நகர் சென்ற தந்தை வீடு வந்து சேர்க்கையில் கையில் ஒன்றுமில்லை நடை போட இடமிருந்தும் - ஊரடங்கு தடை போட உத்தரவு மனதை மயக்கும் தென்றலும் கவசமிட கட்டளை ‘எனக்கும் கொரோனா’ என்று மேனிக்கிதமான காலை வெயில் கூட சுடுகிறது – நாம் தரும் இன்னல் எண்ணி ஓய்வில்லாமல் சப்தமிடும் அலைகள் ஓய்வெடுக்க எண்ணுகிறது தினம் தினம் மாற்றம் - நடை போடும் கொடூர நாடகத்தால் இதை எண்ணிப்பார்க்க உனக்கு நேரமில்லையோ? பிறந்த இடத்தில் உன் பிடிப்பு இல்லாதப்போது புகுந்த இடம் ‘மட்டும் எதற்கு’ கொரோனாவே கடந்து செல்வது காலங்களை மட்டுமல்ல – எங்கள் கண்ணீரையும் தான்! விலகிவிடு எம்மை விட்டுவிடு இனியாவது வாழவிடு by Selvanayagam Th...

22 | YS | வன்ம கொரோனா… தன்னிறைவு இயற்கை வேளாண்மை

உயிர்களின் உதிரம் குடிக்கும் - பெரும் இரத்த காட்டேரி கொரோனாவே ! வான் கடல் கடந்து வந்து புதிய வரலாற்றை வடித்தெடுத்த சிப்பியே! வாழ்வை கிழித்து ஓரிடம் ஒடுக்கிய மூன்றாம் உலகப்போரே ! ஏற்றுமதி > இறக்குமதி மாற்றம் கண்டதே ! பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதே ! நாடோ முடக்க  நிலையில் > பாட்டாளி வர்க்கம் வறுமை கோசத்தில் !  அன்னையின் உதிரமும் > போசாக்கு உண்டியும் ஒரு சாராருக்கு உயிர் யாசகம் தந்ததே ! ஆரோக்கியம் அற்ற இரசாயன உணவுகளிள்  மாறுபாடான வாழ்கை முறைகளில் அமிழ்ந்த மானுடருக்கு நுரையீரல் கசிந்து தாங்கவொன்னா வெதனையும் > சுடுகாடும் வழிகளானதே !  பண்டைய பசுமை புரட்சி > சனத்தொகை அதிகரிப்பினால் முடங்கியது  தரம் குன்றிய இரசாயன புரட்சி தோழமையாக வெற்றி கண்டது முறை கேடான உணவு வழக்கம் வாழ்வோடு ஒப்பந்தம் சித்தரிதத்து. "உயர் இரசாயன விளைச்சல் உடலுக்கு கேடு"  செயற்கை வளர்ச்சி ஊக்கியே அதிக புரதம் கொடுத்து புற்று நோய் உண்டு பண்ணினாய் > உயிர் சத்து > நுண் ஊட்ட குறைபாடு தோற்றுவித்து இரத்த கொதிப்பும் > நீரிழிவும் சொந்தமாக்கினாய் இன் நிலைகளில் தான் எதிர்ப்பு சக்தி குறைவட...

17 | SS | கொஞ்சம் கேளும் கோர அனுபவம்

முகங்களை உயர்த்தி முன்னுரிமை அளித்தவன் - அகங்களை ஆன்மாவிற்கு சொந்தமானது என அறியாதவனாய் சொந்தங்களை விட சொத்துக்களை உரிமையாக்க முனைந்தான்.... கொத்துக் கொத்தாய் உணவுக்கு ஊசலாடும் உறவுகள் தன் உறவுகளிடத்தே ஊமையாக, நிவாரணப் பொதியினிடத்தே ஊணமாக அகத்தின் அழகு முகத்தில் என இருமாப்புடன் இருந்தோர், தனித்து விழித்து வாழ எத்தனிக்கிறான் தனி மனிதன்.... காணாத அளவில் கரைக்கொண்ட கடல் - சுனாமியாய் உயிர்களை தாண்டவமாடி கரையில் மடிய இது சீற்றமல்ல.... தனித்திரு விழித்திரு காணாத கிருமி என்றீர்..... மக்கள் வயிற்றை நிரப்ப மணுவோடு மகேஷனை தரிசிக்க மக்கள் முகம் பாராது மகேஷன் முகத்தை மூடிக்கொண்டு எத்திசை சென்றானோ????? மதங்கள் மனிதனை மனங்களாக்க எத்தனித்த போது - மனங்களால் மதங்களை பணத்தால் காவு கொண்டான் மனிதன்.... பாமரனோ பண்டைய வைத்தியத்தை கையிலெடுக்க, பகுத்தறிவாளனே பரவுதலை தடுக்கின்றான்.... பணத்தால் ஓடிய கால்கள் மனத்தால் ஐம்புலன்களை அடக்கி அவதரித்த குழந்தையின் பாணியில் படுக்கையில் பொழுதைக் கழித்திட பங்குகளின் வளர்ச்சியில் நிருவகித்த திட்டங்கள் நிதர்சனமாக நிர்வாணமான முதல் தருணம்.... மைதானங்கள் மந்தமாக மதுசாலைகள் தந்தம...

12 | YS | சமுதாயமே எழுந்திரு!!!

சமுதாயமே எழுந்திரு!!! சமுதாயமே எழுந்திரு! அநீதியை எதிர்திடு! ஒவ்வொரு மனிதனையும் உயர்ந்த மனிதனாக திருத்திடு! தரமான சமுதாய மாற்றத்தை கட்டியெழுப்பிடு! நாளைய தலைமுறைக்கு நல்வழி காட்டிடு! மண்ணகத்தில் படிப்பு என்னும் படியை தாண்டிடு! மனதில் அறிவு என்னும் விதையை விதைத்திடு! அறியாமை இருளை மதி கொண்டு விலக்கிடு! முயற்சி கொண்டு தோல்வி எனும் தடையை கடந்திடு! வறுமை போக்கிட துணிந்து போராடு ! வறியோர்க்கு உதவிட வழித்தேடு! ஈயவருக்கு கரம் கொடு! பசித்தொருக்கு வயிறார உணவழித்திடு! பட்டினியை இருக்க இடமின்றி ஒழித்திடு! மரம் நடு! மனிதனாய் மாறு! உணவே மருந்து என்ற பழக்கம் கொள்! - நோய் என்னும் குழப்பம் விட்டொழியும். செயற்கையை தூர விடு! இயற்கையை கையில் எடு! உள்ளத்தில் நல்லதை விதைத்திடு!! தவறுகளை சுட்டிக் காட்டிடு! சண்டைகளை அழித்திடு! குற்றங்களுக்கு தண்டனை வாங்கிகொடு! தலைமுறைகளை தரமாக்கிடு! தடைகளை உடைத்திடு! சீரிய சமூகமாய் வளர்ந்திடு! சிறப்பான மனிதனாய் மலர்ந்திடு! மாற்றங்கள் ஒன்றே மாறாதது உன்னால் முடியும் என்னால் முடியும் நம்மால் முடியும், வெல்வோம் உயர்வோம் மாற்றம் காண்போம். இன்று முதல் புத்தம் புதிய பொலிவுடன்! by M...

03 | CS | வேதனையின் முற்று

இதோ, என் நிழலோடு யான் பேசும் தருணம் இது! யாசகன் நான்,யாசிக்க யாருமிலை பசியை படைத்தவன் எவனோ?... நேற்று எரிந்த அடுப்பு சோற்று பானையுள்,ஒரு பருக்கை இன்று.. ஐவர் குடும்பம் யாம் " யார் உண்பதந்த ஒரு பருக்கை?" எம் வயிற்றுக் கேள்விக்கு நான் தந்தேன் பதிலை வெளி செல்ல இயலாத அடக்கம் குடில் அருகில் விளைந்த, காயிரண்டு என் உழைப்பு,அன்றுணவு இது தொடர,பசியவள் இல்லை வீட்டு விளைச்சல்!... நாட்டின் தழைச்சல்!... by  K. Dhanushika