புதுமைப் பெண்ணே புறப்படு புதுயுக விடியலுக்காய் எம் முன்னே! புரட்சிகள் ஆயிரம் பூத்தாலும் புதுமைகள் ஏராளம் உதித்தாலும் உரிமைக்காய் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அடுப்பங்கரை அடியினிலே அவை அமர்ந்துபோய் விடுகின்றன! நாகரீகம் நகர்ந்தாலும் - நம் அடிமைத்தனம் அவிழ்த்து விடப்பட்டதா?? அத்தனை கனவுகளும் அரங்கேறி விட்டதா??? பாரதிப் பெண்ணாய் பாரினில் உதிக்க புறப்படு பெண்ணே ! புதுமையை நோக்கி ! by P. Ajantha