Skip to main content

Posts

Showing posts with the label 14.Badulla

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

62 | CS | கொரோனா வைரஸ்

உயிரை எடுக்கத் துடிக்கிறாய்... உறவை இழக்க தவிக்கிறோம்... அலை அலையாய் வருந்துகிறோம்... கொலை கொலையாய் செய்கிறார்.. இறைவன் உடைய சாபமோ... கொடூர கொரோனா... கத்தியின்றி... ரத்தமின்றி..... யுத்தம் ஒன்று நிகழ்கிறது.... அது உலக மக்களை அச்சமடையச் செய்தது... தூரத்தில் நானிருந்தால் இலங்கையை துரத்தும் கொரோனா என்னை கவலையடையச் செய்தது.. கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால் அடங்காமல் தெருவில் இருக்கின்றீர்கள்... செய்து வைத்த பாவமெல்லாம்.... வேட்டையாட வேண்டி இன்று கொன்றெடுத்துச் செல்கிறது... நம்மை கொரோனா எனும் பெயரினால் சாதி மதம் பார்த்து மனம் சஞ்சளித்துப் போன இங்கு சாவுக்கு பாரபட்சம் இல்லையென்று சரித்திரத்தில் காட்டிவிட்டது கொரோனா... கொரோனா என்ற அசுரனை அழித்து எம்மையும் எம் அகிலத்தையும் காப்பாற்றுவோம். by K Aananda kala

60 | CJ | வாழ்க்கையில் ஆசைப் பட்டதெல்லாம்

வாழ்க்கையில் ஆசைப்  பட்டதெல்லாம் கிடைக்கவில்லையே என்று  கவலை கொள்ளாதே...  ஆனால்  உனக்கு  தேவையானது எல்லாம்  அப்போதே கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது….!!! தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட…. தவறை சுட்டிக்காட்டி விட்டு  எதிரியாக வாழ்ந்து விடலாம்….. by P.Ojasvini 

58 | CS | பசியை ஒழிதல்

விவசாயின் உழைப்பு வீணாகுமா ! மக்களின் கனவு நினைவாகுமா !  பசியின் மருந்து உணவாகுமோ ! உணவின் பாதுகாப்பு மேம்படுமோ ! தாயின் கருவறை காப்பு  செடியின் கருவறை வித்து  மனிதனின் முதிர்ச்சி முதுமை  தாவரத்தின் முதிர்ச்சி போசணை  அன்பின் விதையை விதைப்போம்  விவசாயத்தின் அருமையை வெளிப்படுத்துவோம்  பசியின் கொடுமையை அழிப்போம்  உணவின் தரத்தை உயர்த்துவோம் by  N. Kavilakshika

57 | YS | சமூக ஒற்றுமை

சிதைந்து போன சிற்பங்களாக  பிறந்து சீர்படாத வாழ்வுடன் மெய்ப்படாத கனவுகளுடன்  என்றாவது மாறிவிடும் என்ற  குருட்டு நம்பிக்கையுடன் வாழ்ந்தது போதும்..... காத்திருந்த காலம் தாழ்த்தி  சுழன்று கொண்டிருக்கும் புவி மண்டலத்தில் கூடுகளாக வாழ்ந்துவிட்டு போகவா எண்ணம்??? மனிதனே மனிதனை உண்டு மனிதத்தை மண்ணுடன் புதைத்து விட்டு தனிமையிலேயே  உளன்று கொண்டிருந்தது இன்றுடன் போதும் !!!! சரித்திர பக்கத்தை சிறிது  சற்றே நோக்கி பார்த்தால் மானுட வலிமைக்கு கிடைத்த  வரங்களோ ஏராளம் பேச்சில் மட்டுமல்ல  எமது மூச்சிலும் வேண்டும்  ஒற்றுமை துப்பாக்கி ரவைகளுக்கும்  குண்டுகளுக்கும் பலிகொடுத்தது  போதும் !!!! எமது வாழ்வுக்காய் எமது கைகளைக்கோர்த்து  தலை நிமிர்ந்திட ஓங்கும் வையகம்..... சாக்கடையில் புரளும் பன்றியாய் வாழ்ந்தது போதும் இனியும் தாமதம் வேண்டும் என்று  எண்ணாதே இனம் , மதம் , சாதி என  துண்டு பட்டது போதும்  ஒன்று பட்டு எழுந்திடுவோம் எமது சமூகத்தின் ஒற்றுமைக்கு !!! by S. Nishanthi

56 | YS | மதிப்பு மிக்கதோர் சூழல்

அழகே ! பேரழகே.. ! - இயற்கை  அன்னையின்அரும்பெரும் கொடையே ! இறைவனே இயற்கை - இவ்வியற்கையே  இறைவன் ! நாமெல்லாம் இவர்களின் குழந்தைகள் ! பச்சை வண்ண சூழலே ஓவியம் ..! - இருளில்  மூழ்கிய இரவை வழியனுப்பி  வெளிச்சத்தை பரப்பி... - சாந்தமான  பல்வியல் தொடங்கி.... சங்கீதமாய் மலரும் காலைப் பொழுதினை  என்னவென்று வர்ணிப்பது  நதி என்னும் பெண் மகளின் சந்தோஷ புன்னகையை ! - இயற்கையின் கானம் ரீங்காரமிடும் வண்டுகளும்  பூக்களை தழுவும் தேனீ கூட்டமும்  இயற்கையின் வர்ணஜாலம்.. ! மண் வாசனை வீசும் அத்தருணம் - தென்றல் பூமி தாயை தழுவும் - அந்த  நொடிகளை வர்ணிக்க கவிதைகள்  போதவில்லை !  பறவைகளின் கீச்சொலியே - சங்கீத  ஸ்வரங்களாக மாறும் ! பூமி தாயின் சுற்றுகையே - நம்  பிறவியின் தத்ததுவம்  சூழலை பிரகாசிக்க வைக்கும் மின்னல் - மனதை  சிறை பிடிக்கும் இடி முழக்கம் ! மேகம் மழையாகப் பொழியும் பூமி தாய் மனம் குளிர்வாள்... இக்காட்சியே இயற்கையின் செய்யுள்  இவையெல்லாம் காணும் வரம் - மானிடனாய்  பிறந்து ஆறறிவு கொண்ட எமக்கு கிடைத்துள்ளது  நம் உணர்வ...

50 | CJ | சாமிக்கும் இங்கே சங்கடங்கள் நேர்ந்திடுச்சி

சாமிக்கும் இங்கே சங்கடங்கள் நேர்ந்திடுச்சி - பூட்டாத கதவுகளை பூட்டும்படி  ஆயிடிச்சு - மேகங்களை மறைச்சிருந்த வேண்டாத புகையெல்லாம் -  ஓடியே போயிடிச்சே - உலகம் தூய்மை ஆயிடிச்சு விண்ணுக்கு ராக்கெட் விடத்தெரிந்த மனிதனுக்கு மண்ணுக்கு மேலிங்கு மனுஷங்க சாவுறதை நிருத்த  தெரிய வில்லையே, நிலைமை இங்கு சரியில்லை ஏழை பணக்காரன் என்கின்ற பேதமெல்லாம் கொரோனாகிட்ட இல்ல - கும்பிட்டாலும் விடுவதில்லை இத்தாலி ஸ்பெயின் இங்கிலாந்து அமெரிக்காவும் தோத்துப்போச்சு தோள்கொடுத்துச்சு இந்தியா வீட்டை விட்டு வெளியிடத்தில் வீணாக சுற்றுவதை கொரோனா குறைத்துடிச்சு பாட்டுப்பாடி வீட்டுக்குள்ளே பக்குவமா வாழ்கிறதை பழக்க படுத்துச்சி நல்ல கெட்ட மனிதர்களை நாலு பேரு அறிந்திடவே கொரோனா உதவிடுச்சி கொடூரமாய் பிரிச்சு அத்தனை விமானங்களும் ஆங்காங்கு தரையிறங்கிடுச்சி மீண்டும் பறந்திடவே மிகு வேட்டை கொண்டுச்சி தூணிலும் துரும்பிலும் துயர் துடைக்கும் கடவுள் உண்டு என்று நாம் படித்ததுண்டு இப்போது நீ இங்கு கைப்பிடி அவர் காகித பைகளிலும் இருப்பதாக சொல்ல எவரும் அதை தொடுவதில்லை அன்றாடம் உழைத்து உழைத்து அயராது வியர்வை சிந்தும் ஏழைகளை மன...

47 | SS | அன்பிற்கினிய அரசாங்கமே! கேளுங்கள்.

என்னோடு வாழப்பழகும் உமது நாட்டின் அபிவிருத்திக்கு சில வழிகள். போதுமான போசாக்கில் பொல்லாப்பாம் வறுமையை வரம் அளித்தேனாம். அயலான நிலத்திலே ஐந்தாறு பயிரிட்டால் வளம்பெற வழியில்லையோ? வீதி தோறும் விதிகளால் நிரம்பியும், விபத்துகளால் விழுந்து போனீர்கள். என் ஒற்றை ஊரடங்கு விதியால் உதிரத்தை வீதி தானம் பெறலில்லையே... வீட்டில் தூங்கி கிடப்பதால் வீணாய் சண்டை போடும் வீணர்களாக்கினேனாம். நகரை விட்டு நகர்ந்து கிராமத்திலும் உங்கள் காவல்துறை கண்காணிப்பில்லையோ? கல்வியில் தடைசெய்து தொழில் வாய்ப்புகள் பறித்தேனென்றீர்கள். ஏழை மாணவர்களுக்கு எட்டா உம் இணைய கல்வி தீர்வாகிடுமோ? பரீட்சைகள் தள்ளி போயினவாம் பல நாள் படிப்பை பாழாக்கி விட்டேனாம். புத்தக பூச்சிகளாக கிடக்கும் பலரில் புது கண்டுபிடிப்புகள் அறியவில்லையோ? புது மரங்களால் நிரப்ப வேண்டிய சூழலை புகை கொண்டு மறைத்தீர். இயற்கை எனக்கும் அன்னை என அவள் புகார் போக்கினேனே... ஆறாய் > குளமாய் > அருவியாய் > கடலாய் நிரம்பிய நீரில் கொட்டி குவித்தீர் குப்பை கூளங்களை. இந் நடத்தை குறைய உம் நடமாட்டம் குறைத்தேன் என சிந்திக்கவில்லையா? இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டோருக்கு...

46 | SS | கண்ணுக்கு புழப்படா உயிரொன்று

கண்ணுக்கு புழப்படா உயிரொன்று உயிர்கள் பல பறிக்குது இரத்தங்கள் சிந்தாமல் வடுவது படியாமல் அகிம்சை யுத்தமொன்று நிகழுது நீர் வழி வந்ததோ ? நில வழி வந்ததோ ? மழை போலே வான்வழிதான் வந்ததோ ? எவ்வழி வந்தாலென்ன  உயிர்பழி வாங்கிட நம் நாட்டுக்குள்ளும் வந்தது தலை வலி வந்தாலும் உடல் சோர்வு வந்தாலும் காய்சலது வந்தாலும்  நம் நாட்டுக்குள்ளே நமக்குள்ளே தொற்றின் அறிகுறி காட்டுது உயிர் பயத்தை கூட்டுது பீசியார் கணக்கது தொற்றின் எண்ணிக்கையை கூட்டுது தொற்றது கூடவே உயிர் பழியும் கூடுது சற்றென சலனமாய் பதுங்கி கிடக்குது பதுங்கி பாயும் போது துடிக்கும் இதயமும் துடிப்பதை நிறுத்துது ஊரடங்கு போட்டாலும் நடமாட்டங்கள் வழமைதான் பொருள் விலை கூடவே  பசியென்ன குறையுமா? பஞ்சம் வருமுன்னே பட்டினி சாவும் நிகழுமோ ? நம் நாடு அடுத்த சோமாலியா என்று பெயர் வாங்குமோ? தடுப்பூசி வழங்கும் பேச்சி ஒரு புறம் அதன் பக்கவிளைவை சொல்லி பயமுறுத்தும் கூட்டமும் மறு புறம் எது என்ன நடந்தாலும் ஆர்பாட்டமும்  எதிர் புறம் ஏற்றுமதியில்லை இறக்குமதியில்லை. மதி கொண்டு சிக்கல் தீர்ப்பார் யாரென்று  நம் நாட்டில் தெரியவில்லை யாரெங்கு போனாலு...

45 | YS | கொரோனா

ஏன் அங்கிருந்து வந்தாய் எருது பூட்டிய எமனை ஏனோ நீ அழைத்து வந்தாய் அன்றோ ஆகாயத்தை நோக்கினேன்  அழகாய் எம்முடைய ஆயுளை அழித்தாய்  அறிதாய் கொலைகார கொரோனாவே எம்மை கொண்டழித்து போதவில்லையா? உனக்கு போகவே மணமில்லையா? அறிவில்லாத மனிதனை உனக்கு அணிவித்தானா மாலையை நீ அமைதியில்லா போராட்டத்தை ஆரம்பிக்க அவன் குரல் கேட்கிறது ஆனந்த குரல் கேட்கும் இடமெல்லாம் அழுகுரல் கேட்கிறதே . அழைத்து வந்த அன்னைக்கு கூட  அன்னம் அளித்திட வரம் வாய்க்கவில்லையடி இந்த வைரத்தில் அடர்ந்த காட்டுக்குள் அழிக்க முடியாத ஆரம்ப ரகலையில் நம் சேய் நாடே பல தாய் நாட்டில் தஞ்சம் அந்த ரகலையில் பல வித மழைகள் மண்ணுக்குள் மலர்களாகினர் பலர் தீகாட்டிட்குள் தீக்கிரையாகினர் நாம் மாளிகைகளில் வாழவில்லை இருந்தாலும்  மாளிகைகளில்  வாழ்ந்தோம் கஷ்ட்டங்களோடு வாழவில்லை இருந்தாலும் பிறரோடு  கருணையுடன் வாழ்ந்தோம்  கண்ணுக்கு கள்ளிதனம் அதிகரிக்க கொலைகார கொரோனாவை கோவையாக்கி கொண்டான். சாமிகளே சாமிகளே குல தெய்வ சாமிகளே கொடுமையான வைரசே கொண்டு குவிக்கும் வைத்தியமே கொண்டு வந்து சேர்திடு எம் குல தெய்வ சாமிகளே எட்டாத கடன் சாமானை எளித...

41 | CS | பெண்ணே புறப்படு

புதுமைப் பெண்ணே புறப்படு புதுயுக விடியலுக்காய் எம் முன்னே! புரட்சிகள் ஆயிரம் பூத்தாலும் புதுமைகள் ஏராளம் உதித்தாலும் உரிமைக்காய் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அடுப்பங்கரை அடியினிலே அவை அமர்ந்துபோய் விடுகின்றன! நாகரீகம் நகர்ந்தாலும் - நம் அடிமைத்தனம் அவிழ்த்து விடப்பட்டதா?? அத்தனை கனவுகளும் அரங்கேறி விட்டதா??? பாரதிப் பெண்ணாய் பாரினில் உதிக்க புறப்படு பெண்ணே ! புதுமையை நோக்கி ! by  P. Ajantha

40 | SS | வறியவனின் வறுமைப்பிடி

காலை எழும்புனது கால் வயிறு கஞ்சுக்காக - உனக்கு கல்லு முள்ளு குத்தினது கால் நடையாய் நடந்ததுமே என் கண் முன்னே நிற்குதய்யா! வறுமையின் பிடிக்குள்ளயும் - உன் பெத்த புள்ள வயிறாற - உன் வயிற காய வச்ச வருத்தமெல்லாம் வெறும் - வார்த்தைக்குள்ள அடங்கிடுமா? பச்ச புள்ள உடம்புகாரி பசி தீர்க்க மலையேறி பத்தாந் தேதி வந்து விட்டா பாவி மக படும் பாட சொல்ல பத்தாது இந்த வெறும் காகிதமே! வட்ட மேசை மாநாடாம் வறுமையே பிணிக்கோடாம் வறுமையே ஒழிக்கணுனு வாய் கிழிய பேசினாலு அடுப்பங்கரை அறிஞ்சிருக்கு அவ பட்ட அவலமெல்லாம்! தலைச்ச புள்ள தலைநிமிர்ந்தா தாங்க முடியாத துயரமெல்லாம் தலைத்தெறிக்க ஓடும்னு தவியா தவிச்சிடுவா...! வாசற்படி தாண்டி வந்தா வயிறு நிறைய உணவுக்காக வறியவனின் வறுமை நீங்க கோரப்பசி தீர்ந்திடுமா? உலகம் கை கோர்த்திடுமா??? by  P. Dharshani

27 | YS | கொரோனாவின் கொள்ளை

பெருமைக்காக தேடாத ஒன்று! பெற்றதால் பெருமை தேடித் தந்த ஒன்று!.. சுமை என்று நினைத்தவர்க்கு வாழ்வே சுமையாக.. சுகமென்று நினைத்தார்கு வாழ்வெங்கும் சுகமானதே! கல் உடைக்க கையுண்டே.. தடை தகர்க்க கல்வியுண்டே! உணர்ந்தால் வாழ்வே மாறும், உணர மறுத்தால் சமூகம் வீழும். கெட்டிக்காரனுக்கு எதுவும் பாரமில்லை பயின்றவனுக்கு எந்த இடமும் வெளிநாடு இல்லை. தொட்டதெல்லாம் தொல்பொருளாகும் தொன்று பாட தொகை உண்டாகும் கற்ற கல்வியினாலே by C. Sathyapriya F023

25 | YS | சீரழிக்கும் கொரோனாவும் … கல்வி நிலையும்…

வகுப்பறை மறந்ததே ! கனவுகள் சிதைந்ததே ! எங்கள் கல்வி நம்பிக்கை கத்தி முனையில் தொக்கி நிக்கின்றதே ! கற்கும் மணம் தளர்வடைந்தது.  விடா முயற்சி உன் வருகையினால் சிறகடித்து ஓரிடம் ஒடிங்கிவிட்டது கோரோனாவே ! கற்பவரின் வாழ்வுக்கு கேள்விக்குறி சமமாக  பரவலடைந்த பாடசாலை கல்விக்கு முற்றுப்புள்ளி   பாலகரோ அரிச்சுவடி மறந்தனர் ! சுதந்திரக் கல்வி மணித்தியாலங்களாக சிறைப்பட்டு நிகல்நிலை கல்வி வாழ்வு கோலமாக வடித்தெடுக்கப்படுகின்றது. “கொடிய கால மாற்றம்  கல்விக்கு பாரிய ஏமாற்றம் “! தற்போதைய கல்வி மாணவரிடையே தொட்டிலில் உறங்கி சொப்பணம் காண்கின்றது .  நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம் ! அடியோடு மாற்றம் ! பண்புதரமான பயிற்சியில்  தொழிநுட்ப வசதியில் ஆளுமைகள் மேம்பட கல்வி இன்று எம் மத்தியில் அரசாங்கத்தின் முழு வகிபாகத்திற்குள் இலவச கல்வியை தொழிநுட்ப மாற்றதிற்குள் உற்புகுத்தியது சூழ்நிலை மாற்றக்களாக  வசதி வாய்ப்புக்கள் சம பங்கெடுப்பாக  மாணவர்களுக்கு கிடைத்த்தாள் நிகழ் நிலை கல்வியும் வெற்றிகரம்  குவிக்கும் ! எழுத்தறிவு வீத மகத்துவம் பாதிக்கப்பட்டது இளைஞர் > யுவதிகள் பாடசாலை ...

15 | CS | கொரோனாவின் இழப்புக்கள்

உலகமே அடங்கியது கொரோனாவின்  பிடியிலே/ சாதி மதம் காக்க வில்லை மனிதனவனை/ பல்லாயிரம் மக்களை கொன்று குவித்ததே/ நாடு  இனம் மொழி பார்க்க வில்லையே உடலை புதைப்பதற்கு நிலம் இல்லை/ ஆவியற்ற உடலை பார்த்தழவும் உரிமையில்லை/ வீட்டுக்குள்ளே முடங்கிய நிலை வந்ததென்னவோ/ ஊர் சுற்றும் காலம் எப்போதோ/ பள்ளிகள் மூடப்படும் ஊர் உறங்கி கொள்ளும்/ முகம் மறைக்கப்படும் என்று நினைத்தோமோ?/ நவ நாகரீக பூமி உறங்கட்டுமென நினைத்தாயோ/ கொரோனா உன் எண்ணம் தான் என்னவோ?/ அலட்சியமின்றி அவசரமின்றி பொறுமை காக்கின்றேன்/ விரைவில் விடுதலை கொடுத்து விடு கொரோனாவே!/ by N. Heshayini

13 | YS | நிலைமாறும் உலகம்

நிலை மாறும் உலகம் நாவின் தேனூற்று நற்றமிழில் வைரம் பொதித்த வரிகளில் வாசகம் கேளீர் ! கல்வி கரையில என  வேள்விகள் பல புனைந்தோம் - இனி புதிய நாட்களை வடிவாய் வனைந்து  நோய்தனில் வீழ்ந்திடாமல்  வீறுகொண்டெழுவோம். வீதியை எண்ணி வீட்டினுள்ளே  புதைந்திடாமல் புரண்டெழுவோம்  இணையவழி தடையதனை  இணைந்து நாம் நீக்கிடுவோம் சமகல்வி  வாய்ப்பதனை சகலருக்கும் கொடுத்திடவே  இணையம் மூலம் இலவசமாய் இயன்றோர் பாடம் புகட்டுவோம். அரசு கூறும் அறிவுரையும் அகமுவந்து ஏற்றிடுவோம் பரீட்சை பாடம் இரண்டையுமே பதமாய் கற்க செய்திடுவோம் வசதியற்ற வறியவர் புன்மைநிலையுற்றிடாமல் வசதியுள்ளோர் வழிய சென்று உதவிகரம் நீட்டிடுவோம். புலனம் > செயலி > நிகழ்நிலையில் புதுமை படைக்க முடியுமென புரிய வைக்க களமமைத்து கரைகாண செய்திடுவோம். வாட வைக்கும் கொவிட்டுக்கும் (19) பாடம் புகட்டி அழித்திடுவோம் நிலையை எண்ணி உரைந்திடாமல்  நிமிர்ந்து வெல்ல முயன்றிடுவோம்  நிலைமாறும் உலகம் இது  நிரந்தரமாய் ஆகிடாது. by R.SINDHUJA