புதுமைப் பெண்ணே புறப்படு
புதுயுக விடியலுக்காய்
எம் முன்னே!
புதுமைகள் ஏராளம் உதித்தாலும்
உரிமைக்காய் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும்
அடுப்பங்கரை அடியினிலே அவை அமர்ந்துபோய் விடுகின்றன!
நாகரீகம் நகர்ந்தாலும் - நம்
அடிமைத்தனம்
அவிழ்த்து விடப்பட்டதா??
அத்தனை கனவுகளும்
அரங்கேறி விட்டதா???
பாரதிப் பெண்ணாய் பாரினில் உதிக்க
புறப்படு பெண்ணே !
புதுமையை நோக்கி !
Comments
Post a Comment