Skip to main content

Posts

Showing posts with the label Badulla District

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

62 | CS | கொரோனா வைரஸ்

உயிரை எடுக்கத் துடிக்கிறாய்... உறவை இழக்க தவிக்கிறோம்... அலை அலையாய் வருந்துகிறோம்... கொலை கொலையாய் செய்கிறார்.. இறைவன் உடைய சாபமோ... கொடூர கொரோனா... கத்தியின்றி... ரத்தமின்றி..... யுத்தம் ஒன்று நிகழ்கிறது.... அது உலக மக்களை அச்சமடையச் செய்தது... தூரத்தில் நானிருந்தால் இலங்கையை துரத்தும் கொரோனா என்னை கவலையடையச் செய்தது.. கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால் அடங்காமல் தெருவில் இருக்கின்றீர்கள்... செய்து வைத்த பாவமெல்லாம்.... வேட்டையாட வேண்டி இன்று கொன்றெடுத்துச் செல்கிறது... நம்மை கொரோனா எனும் பெயரினால் சாதி மதம் பார்த்து மனம் சஞ்சளித்துப் போன இங்கு சாவுக்கு பாரபட்சம் இல்லையென்று சரித்திரத்தில் காட்டிவிட்டது கொரோனா... கொரோனா என்ற அசுரனை அழித்து எம்மையும் எம் அகிலத்தையும் காப்பாற்றுவோம். by K Aananda kala

60 | CJ | வாழ்க்கையில் ஆசைப் பட்டதெல்லாம்

வாழ்க்கையில் ஆசைப்  பட்டதெல்லாம் கிடைக்கவில்லையே என்று  கவலை கொள்ளாதே...  ஆனால்  உனக்கு  தேவையானது எல்லாம்  அப்போதே கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது….!!! தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட…. தவறை சுட்டிக்காட்டி விட்டு  எதிரியாக வாழ்ந்து விடலாம்….. by P.Ojasvini 

58 | CS | பசியை ஒழிதல்

விவசாயின் உழைப்பு வீணாகுமா ! மக்களின் கனவு நினைவாகுமா !  பசியின் மருந்து உணவாகுமோ ! உணவின் பாதுகாப்பு மேம்படுமோ ! தாயின் கருவறை காப்பு  செடியின் கருவறை வித்து  மனிதனின் முதிர்ச்சி முதுமை  தாவரத்தின் முதிர்ச்சி போசணை  அன்பின் விதையை விதைப்போம்  விவசாயத்தின் அருமையை வெளிப்படுத்துவோம்  பசியின் கொடுமையை அழிப்போம்  உணவின் தரத்தை உயர்த்துவோம் by  N. Kavilakshika

57 | YS | சமூக ஒற்றுமை

சிதைந்து போன சிற்பங்களாக  பிறந்து சீர்படாத வாழ்வுடன் மெய்ப்படாத கனவுகளுடன்  என்றாவது மாறிவிடும் என்ற  குருட்டு நம்பிக்கையுடன் வாழ்ந்தது போதும்..... காத்திருந்த காலம் தாழ்த்தி  சுழன்று கொண்டிருக்கும் புவி மண்டலத்தில் கூடுகளாக வாழ்ந்துவிட்டு போகவா எண்ணம்??? மனிதனே மனிதனை உண்டு மனிதத்தை மண்ணுடன் புதைத்து விட்டு தனிமையிலேயே  உளன்று கொண்டிருந்தது இன்றுடன் போதும் !!!! சரித்திர பக்கத்தை சிறிது  சற்றே நோக்கி பார்த்தால் மானுட வலிமைக்கு கிடைத்த  வரங்களோ ஏராளம் பேச்சில் மட்டுமல்ல  எமது மூச்சிலும் வேண்டும்  ஒற்றுமை துப்பாக்கி ரவைகளுக்கும்  குண்டுகளுக்கும் பலிகொடுத்தது  போதும் !!!! எமது வாழ்வுக்காய் எமது கைகளைக்கோர்த்து  தலை நிமிர்ந்திட ஓங்கும் வையகம்..... சாக்கடையில் புரளும் பன்றியாய் வாழ்ந்தது போதும் இனியும் தாமதம் வேண்டும் என்று  எண்ணாதே இனம் , மதம் , சாதி என  துண்டு பட்டது போதும்  ஒன்று பட்டு எழுந்திடுவோம் எமது சமூகத்தின் ஒற்றுமைக்கு !!! by S. Nishanthi

56 | YS | மதிப்பு மிக்கதோர் சூழல்

அழகே ! பேரழகே.. ! - இயற்கை  அன்னையின்அரும்பெரும் கொடையே ! இறைவனே இயற்கை - இவ்வியற்கையே  இறைவன் ! நாமெல்லாம் இவர்களின் குழந்தைகள் ! பச்சை வண்ண சூழலே ஓவியம் ..! - இருளில்  மூழ்கிய இரவை வழியனுப்பி  வெளிச்சத்தை பரப்பி... - சாந்தமான  பல்வியல் தொடங்கி.... சங்கீதமாய் மலரும் காலைப் பொழுதினை  என்னவென்று வர்ணிப்பது  நதி என்னும் பெண் மகளின் சந்தோஷ புன்னகையை ! - இயற்கையின் கானம் ரீங்காரமிடும் வண்டுகளும்  பூக்களை தழுவும் தேனீ கூட்டமும்  இயற்கையின் வர்ணஜாலம்.. ! மண் வாசனை வீசும் அத்தருணம் - தென்றல் பூமி தாயை தழுவும் - அந்த  நொடிகளை வர்ணிக்க கவிதைகள்  போதவில்லை !  பறவைகளின் கீச்சொலியே - சங்கீத  ஸ்வரங்களாக மாறும் ! பூமி தாயின் சுற்றுகையே - நம்  பிறவியின் தத்ததுவம்  சூழலை பிரகாசிக்க வைக்கும் மின்னல் - மனதை  சிறை பிடிக்கும் இடி முழக்கம் ! மேகம் மழையாகப் பொழியும் பூமி தாய் மனம் குளிர்வாள்... இக்காட்சியே இயற்கையின் செய்யுள்  இவையெல்லாம் காணும் வரம் - மானிடனாய்  பிறந்து ஆறறிவு கொண்ட எமக்கு கிடைத்துள்ளது  நம் உணர்வ...

55 | YJ | கல்வியின் அவசியம்

வாழ்வில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு நுண்ணாய்வு கல்வி ! கல்வி என்பது மூன்றெழுத்தில் தொடரும் - சொல் அல்ல  வாழ்வின் முடிவு வரை வாழும் செல்வம் கல்வி ! எமது எதிர்காலம் சிறந்த வழிகாட்டலில் அமைய - நாம் பயணிக்கும் முதல் பள்ளி - கல்வியே ! பள்ளி பருவம் அழிவில்லா இன்பம் பிரியும்  வழி பள்ளி மட்டுமே கல்வி - அல்ல  பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி - ஆற்றல் உண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் கடல் கடந்த உத்தியோகம் செய்தாலும் கல்வி அறிவு இன்றி எதுவும் இல்லை.  கடலின் ஆழம் எதுவரை இருக்கின்றதோ அவ்  ஆழத்தை விட கடல் கடந்த நூல் கல்வி தான் ! கண்களில் வண்ண மீன்கள் வரி வரி கோலம் - இட சின்னஞ் சிறு மழலையின் - இன்ப வாழ்வு இன்று புரியா புதிர் அன்று புகழைத் தரும் கல்வியே என்றும் பெரும் செல்வம் கண்ணின் நிலையான விம்பம் ! ஒவ்வொரு மனிதநேய ஆற்றலிலும் - ஒரு திறனாய்வு  கல்வி - கல்வியே சிறந்த வழிகாட்டல் !  நல்ல புத்தகத்தை திரட்டி பார்க்கும் - திறனாய்வு கடல் போன்று அறிவை வளரச் செய்யும் புத்தகம்  தோல்வி வெற்றி இவற்றை கடந்து - எதிர்கால  சந்ததி வர்ண பூக்களாய் - மலர ! கல்...

53 | SS | இயற்கையின் குமுறல்

இயற்கை அன்னை கருவிலே இன்புற்று வாழ்கின்ற நாம் இயற்கையின் இனிது மறந்து  இயமனாய் மாறியதேனோ! இயற்கை தந்த வளங்கள் பலவும்  இந்நிலம் முழுதும் பரவிக் கிடக்க  இங்கு மனிதனின் தேவை கூடவே இயற்கையை சீர்க்குழைப்பதேனோ! இருப்பதை கொண்டே சிறப்புடன் வாழும் காலம் மறந்து இயற்கையை அழித்து இன்னலடையும்  இவனோ மதி உள்ள மாமனிதன்? இவன் மரம் செடி கொடி மண்ணில் இருப்பதாலே இயற்கையை அழிக்க துடித்தானோ! இவள் கொண்ட வளத்தினையும் வீண் கொள்ள வைத்து நாளுக்கு நாளாய் நீ நாகரிகம் வளர்த்து இருக்கும் கனிம வளங்களையே  கண் அசைவில் சிதைத்து கண்ட வாயுவையே  காற்றினிலே விதைத்து இன்னினி கண் கண்ட நீரினையும் கானல் நீராக்கி இவன் புண் கொள்ள செய்தானோ! நல்மண் கொண்ட நிலத்தினையே இழைத்த கொடுமைதனில் ஈன்றெடுத்தேன் கொரோனாவை கொன்று போக துடிக்கின்றன – இக்கொடுமை இழைத்த பூச்சிகளை மாண்டு போகுமோ மனித இனம் இனியேனும் மனம் திரும்புமோ  இயற்கையிடம்.. இதம் தரும் குளிர் காற்று இருக்க  இம்சை தரும் ஏசி எதற்கு? இறைவனின் படைப்பு இருக்க  இக்கணம் மறையும் செயற்கை எதற்கு? இமைகள் திறந்து வைத்தாலே இதயத்தை நிறைக்கும் இயற்கை பரமச...

52 | YS | நான் உன்னை மறவேன்

நான் உன்னை மறவேன் ... கருவின்றி என்னை சுமக்கிறாய்.... கர்வமின்றி அழகாய் சிரிக்கிறாய்... கபடமின்றி அள்ளிக் கொடுக்கிறாய்... தாகம் தீர்க்க மழையாய் வந்தாய்... தேகம் கூச தென்றலாய் மிதந்தாய்... கண்கள் குளிர நிலவாய் வெளிச்சம் தந்தாய்... பறவைகளையும் சொந்தமாக்கினாய்... எண்ணிப்பார்தேன் விந்தையாகினாய்... எத்தனை அதிசயங்கள் உன்னில் நெளிந்தாய் நதியாக உயர்ந்தாய் மலையாக... படர்ந்தாய் புல்வெளியாக... விரிந்தாய் கடலாக... அத்தனைக்கும் உயிர் தந்தவள் நீயே... மறவேன் என்றும் உனை இயற்கை தாயே... by P. Nathiya 140

51 | YS | இயற்கை

அன்னையின்றி அமையாத அவனியிலே... யாம் பெற்ற அருட்கொடையாம்  இயற்கையே..... முகிலினங்கள் ஒன்றோடொன்று முட்டிமோத  முத்துத்துளியாய் மழை பொழிய  வானை முத்தமிடும் மலையைத் தொட்டு;...... நிலத்துடன் காதல் கொண்டு  சிறு அருவியாய் பொழிய  மழைச்சாரல் மண்ணை முத்தமிட்;டதுவே...... சலசலவென புனல் பெருக்கெடுக்க  சிலுசிலுவென பூங்காற்று மேனியை சிலிர்க்கவைக்க  பட்சி இனங்கள் ஆனந்த கீதம் இசைக்க  பூக்கள் பூத்து குளுங்கி மணம் வீச பசுமையின் உறைவிடமாகிய வண்ண சோலையிலே தேனீக்கள் ரீங்காரம் செய்ததுவே...... மண் வாசனையோடு ஓர் பனித்துளி என் கையை நனைத்திட  கடலலைகள் தாலாட்டி ஆதவனை உறங்கவைக்க சுடரொளிக்கும் வெண்மதி  பால் வெண்ணிறமாய் வானிலே பவனிவந்து விண்ணை ஒழிர்வித்ததுவே  ஈசன் அருளிய அவனியிலே  இரு கண் கொண்டு காண இயலா  இயற்கையின் அற்புத காட்சியிது    உள்ளம் உடைந்து மனம் நொந்து  வருத்திடும் மானிடா..... ! இயற்கை கொடையை ..... ஒரே ஒரு தடவை எட்டி பார்த்தாலே போதும்  உன் உள்ளம் தெளிவடைந்து  உத்வேகம் பெற்றிடலாம்  புது ஜனனமும் அடைந்திடலாம் . அதனுட...

50 | CJ | சாமிக்கும் இங்கே சங்கடங்கள் நேர்ந்திடுச்சி

சாமிக்கும் இங்கே சங்கடங்கள் நேர்ந்திடுச்சி - பூட்டாத கதவுகளை பூட்டும்படி  ஆயிடிச்சு - மேகங்களை மறைச்சிருந்த வேண்டாத புகையெல்லாம் -  ஓடியே போயிடிச்சே - உலகம் தூய்மை ஆயிடிச்சு விண்ணுக்கு ராக்கெட் விடத்தெரிந்த மனிதனுக்கு மண்ணுக்கு மேலிங்கு மனுஷங்க சாவுறதை நிருத்த  தெரிய வில்லையே, நிலைமை இங்கு சரியில்லை ஏழை பணக்காரன் என்கின்ற பேதமெல்லாம் கொரோனாகிட்ட இல்ல - கும்பிட்டாலும் விடுவதில்லை இத்தாலி ஸ்பெயின் இங்கிலாந்து அமெரிக்காவும் தோத்துப்போச்சு தோள்கொடுத்துச்சு இந்தியா வீட்டை விட்டு வெளியிடத்தில் வீணாக சுற்றுவதை கொரோனா குறைத்துடிச்சு பாட்டுப்பாடி வீட்டுக்குள்ளே பக்குவமா வாழ்கிறதை பழக்க படுத்துச்சி நல்ல கெட்ட மனிதர்களை நாலு பேரு அறிந்திடவே கொரோனா உதவிடுச்சி கொடூரமாய் பிரிச்சு அத்தனை விமானங்களும் ஆங்காங்கு தரையிறங்கிடுச்சி மீண்டும் பறந்திடவே மிகு வேட்டை கொண்டுச்சி தூணிலும் துரும்பிலும் துயர் துடைக்கும் கடவுள் உண்டு என்று நாம் படித்ததுண்டு இப்போது நீ இங்கு கைப்பிடி அவர் காகித பைகளிலும் இருப்பதாக சொல்ல எவரும் அதை தொடுவதில்லை அன்றாடம் உழைத்து உழைத்து அயராது வியர்வை சிந்தும் ஏழைகளை மன...

49 | CS | பொருளாதார கவிதை

நாம் வெற்றியடைவதை நம்மைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது என நம்ப வேண்டும். இதயம் இல்லா இணைய இயந்திரத்தில் நாம்  கண்டெடுக்கும் நல்ல இதயம் கொண்டது நட்பாக இருக்க வேண்டும் என நினைத்திட வேண்டும். வாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும்  என்றால் முதலில் நம்மை இழிவாக நினைப்பவர்களை நம்மிடம் என்றுமே குறை மட்டும் காண்பவர்களை நம் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கிட வேண்டும். நம் வேலைகளில் வேகத்தடைகள் இருக்கலாம் ஆனாலும் அதன் மேல் நாம் கொண்ட நம்பிக்கையில் சிறிதும் மனத்தடை  வரக்கூடாதென நினைத்திட வேண்டும். இவை அனைத்தையும் நாம் மறவாவிட்டால் நம் வாழ்க்கை நன்று மலரும். நாம் எப்படி நடக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி. வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது  முன்னோக்கி இருந்தால் எமது நாட்டின் பொருளாதாரமும் வானோங்கி வளர்ச்சிப்பெறும். by  V. Pramila

48 | YJ | தொற்றுடன் வாழ்வை மீட்டுதல் பயனே

தொற்றுடன் வாழ்வை வென்றிட துடித்தேன்  என்னையும் காத்து வின்னையும் வெல்வேன் //  வீரத் தமிழன் என்றே உறைப்பேன்  விலைபோகா மனித இனத்தை காப்பேன் //  இணையத்தின் வழியே கற்றதன் பயனை  இணைகிறேன்  நானும் புதிய பாதையில் //  சமூக இடைவெளி தானூம் தொடர்வேன்  சுகாதார விதிமுறை ஏற்றே வாழ்வேன் //  காலத்தின் சோதனை என்பதை மாற்றி காலத்தால் அழியாத சாதனை படைப்பேன் //  ஏழையின் வாழ்வை மாற்றிடச் செய்வேன்  வறுமை இல்லாத உலகம் அமைக்க //  உழைப்பை மட்டும் மூலதனமாக கொண்டு  உயர்வே மனித எண்ணங்கள் தொடர //   நாட்டை காக்க நானும் இணைவேன்  மாற்றம் நமக்குள் தொடரும் வரைக்கும்//  by V. Vijayarani 109

47 | SS | அன்பிற்கினிய அரசாங்கமே! கேளுங்கள்.

என்னோடு வாழப்பழகும் உமது நாட்டின் அபிவிருத்திக்கு சில வழிகள். போதுமான போசாக்கில் பொல்லாப்பாம் வறுமையை வரம் அளித்தேனாம். அயலான நிலத்திலே ஐந்தாறு பயிரிட்டால் வளம்பெற வழியில்லையோ? வீதி தோறும் விதிகளால் நிரம்பியும், விபத்துகளால் விழுந்து போனீர்கள். என் ஒற்றை ஊரடங்கு விதியால் உதிரத்தை வீதி தானம் பெறலில்லையே... வீட்டில் தூங்கி கிடப்பதால் வீணாய் சண்டை போடும் வீணர்களாக்கினேனாம். நகரை விட்டு நகர்ந்து கிராமத்திலும் உங்கள் காவல்துறை கண்காணிப்பில்லையோ? கல்வியில் தடைசெய்து தொழில் வாய்ப்புகள் பறித்தேனென்றீர்கள். ஏழை மாணவர்களுக்கு எட்டா உம் இணைய கல்வி தீர்வாகிடுமோ? பரீட்சைகள் தள்ளி போயினவாம் பல நாள் படிப்பை பாழாக்கி விட்டேனாம். புத்தக பூச்சிகளாக கிடக்கும் பலரில் புது கண்டுபிடிப்புகள் அறியவில்லையோ? புது மரங்களால் நிரப்ப வேண்டிய சூழலை புகை கொண்டு மறைத்தீர். இயற்கை எனக்கும் அன்னை என அவள் புகார் போக்கினேனே... ஆறாய் > குளமாய் > அருவியாய் > கடலாய் நிரம்பிய நீரில் கொட்டி குவித்தீர் குப்பை கூளங்களை. இந் நடத்தை குறைய உம் நடமாட்டம் குறைத்தேன் என சிந்திக்கவில்லையா? இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டோருக்கு...

46 | SS | கண்ணுக்கு புழப்படா உயிரொன்று

கண்ணுக்கு புழப்படா உயிரொன்று உயிர்கள் பல பறிக்குது இரத்தங்கள் சிந்தாமல் வடுவது படியாமல் அகிம்சை யுத்தமொன்று நிகழுது நீர் வழி வந்ததோ ? நில வழி வந்ததோ ? மழை போலே வான்வழிதான் வந்ததோ ? எவ்வழி வந்தாலென்ன  உயிர்பழி வாங்கிட நம் நாட்டுக்குள்ளும் வந்தது தலை வலி வந்தாலும் உடல் சோர்வு வந்தாலும் காய்சலது வந்தாலும்  நம் நாட்டுக்குள்ளே நமக்குள்ளே தொற்றின் அறிகுறி காட்டுது உயிர் பயத்தை கூட்டுது பீசியார் கணக்கது தொற்றின் எண்ணிக்கையை கூட்டுது தொற்றது கூடவே உயிர் பழியும் கூடுது சற்றென சலனமாய் பதுங்கி கிடக்குது பதுங்கி பாயும் போது துடிக்கும் இதயமும் துடிப்பதை நிறுத்துது ஊரடங்கு போட்டாலும் நடமாட்டங்கள் வழமைதான் பொருள் விலை கூடவே  பசியென்ன குறையுமா? பஞ்சம் வருமுன்னே பட்டினி சாவும் நிகழுமோ ? நம் நாடு அடுத்த சோமாலியா என்று பெயர் வாங்குமோ? தடுப்பூசி வழங்கும் பேச்சி ஒரு புறம் அதன் பக்கவிளைவை சொல்லி பயமுறுத்தும் கூட்டமும் மறு புறம் எது என்ன நடந்தாலும் ஆர்பாட்டமும்  எதிர் புறம் ஏற்றுமதியில்லை இறக்குமதியில்லை. மதி கொண்டு சிக்கல் தீர்ப்பார் யாரென்று  நம் நாட்டில் தெரியவில்லை யாரெங்கு போனாலு...

45 | YS | கொரோனா

ஏன் அங்கிருந்து வந்தாய் எருது பூட்டிய எமனை ஏனோ நீ அழைத்து வந்தாய் அன்றோ ஆகாயத்தை நோக்கினேன்  அழகாய் எம்முடைய ஆயுளை அழித்தாய்  அறிதாய் கொலைகார கொரோனாவே எம்மை கொண்டழித்து போதவில்லையா? உனக்கு போகவே மணமில்லையா? அறிவில்லாத மனிதனை உனக்கு அணிவித்தானா மாலையை நீ அமைதியில்லா போராட்டத்தை ஆரம்பிக்க அவன் குரல் கேட்கிறது ஆனந்த குரல் கேட்கும் இடமெல்லாம் அழுகுரல் கேட்கிறதே . அழைத்து வந்த அன்னைக்கு கூட  அன்னம் அளித்திட வரம் வாய்க்கவில்லையடி இந்த வைரத்தில் அடர்ந்த காட்டுக்குள் அழிக்க முடியாத ஆரம்ப ரகலையில் நம் சேய் நாடே பல தாய் நாட்டில் தஞ்சம் அந்த ரகலையில் பல வித மழைகள் மண்ணுக்குள் மலர்களாகினர் பலர் தீகாட்டிட்குள் தீக்கிரையாகினர் நாம் மாளிகைகளில் வாழவில்லை இருந்தாலும்  மாளிகைகளில்  வாழ்ந்தோம் கஷ்ட்டங்களோடு வாழவில்லை இருந்தாலும் பிறரோடு  கருணையுடன் வாழ்ந்தோம்  கண்ணுக்கு கள்ளிதனம் அதிகரிக்க கொலைகார கொரோனாவை கோவையாக்கி கொண்டான். சாமிகளே சாமிகளே குல தெய்வ சாமிகளே கொடுமையான வைரசே கொண்டு குவிக்கும் வைத்தியமே கொண்டு வந்து சேர்திடு எம் குல தெய்வ சாமிகளே எட்டாத கடன் சாமானை எளித...

44 | CS | கொரோனா.... வைரஸ்.... ஒழிய வேண்டும் !...

சுற்றித் திரிந்த இடமெல்லாம்       சுடுகாடாய் மாற்றிவிட்டாய் !  அண்ணன் தம்பி போல பழகியவரையெல்லாம்      எ திரியாக பார்க்க வைத்தாய் ! பசிக்கு உணவு தேடிய உடல்களையெல்லாம்       உனக்கு இறையாக்கி கொண்டாய் ! இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்று       சுற்;றித் திரிந்து கொண்டிருக்கிறாய் இங்கு !  உருவத்தில் நீ சிறியவனாக இருந்தாலும்       நீ மிகக் கொடியவன் என உணர்த்திவிட்டாய்  எம் மக்களை சாய்த்து....      உனை கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும் நீ யார் என் காட்டிவிட்டாய்....        உன் முகத்திரையை...  நீ சென்ற இடமெல்லாம் அழுகுரல் கேட்கிறதே !      நீ அடைக்களம் கேட்ட இடமெல்லாம் நிரம்பிப்போய் கிடக்கிறதே உன் தொற்றால் !..      எத்திசையிலும் உனை காண முடிகிறதே..!  உனக்கு என்னதான் வேண்டும் எங்களிடம்...! முன்னோர்கள் சொல்லி வைத்த தர்மங்களை     மதித்து நடந்திருந்தால் எங்களுக்கு ஏன் இந்த நிலைமை.. உனை சொல்லிக் ...

43 | SS | காலநிலை மாற்றமும் எதிர்கால தோற்றமும்..!

எத்தனை எத்தனை  மாற்றங்கள் மண்ணுலகினிலே மாறிவரும் உலகிற்கேற்ப மானிடர்களும் மாறுவதே  சால சிறப்புடையது என்றிடலாம்...! அத்துனை மாற்றங்களையும்  ஏற்றுவரும் எம்மவர்களில் ஏனோ தெரியவில்லை - இந்த காலநிலை மாற்றங்கள் மாத்திரம் கோரத்தாண்டவம் ஆடுகின்றன...! இயற்கயை அல்லவா  இறைவனென எண்ணி வாழ்கின்றான்.. பிறகு ஏன் இந்த இறைவனால்  ஏற்படும் அனர்த்தங்களையும் பாதிப்புகளையும் ஏற்று தன்னை தயார்படுத்த தயங்குகிறான்..??? பள்ளிச் செல்லும் செல்வங்களும் பலம் கொண்ட மானிடர்களும் மட்டுமல்ல.. பறவைகளும் கூட - இந்த இயற்கை மாற்றங்களிற்கு தங்களை இயைபாக்கிக்கொள்ள வேண்டும்...! ஆக... எதிர்காலத்தில் ஒருபோதும்  இயற்கை அழிவுகளுக்கு நாங்கள் இடங்கொடுக்க போவதில்லை... மீறி அனர்த்தங்கள் ஏற்பட்டால் கல்வி எனும் புத்துணர்ச்சியால் துணிச்சலுடன் எழுந்து வீருநடை போட்டிடுவோம் என்பதிலும் ஐயமில்லை….!! by M. Sahana 69

42 | SS | சிதைந்த எம் வாழ்வு !

விரல்களால் பேனை தொட்டு விதி வசம் நாம் வாழும் - வாழ்வை எழுத எத்தனிக்கிறேன் - மானிடா  நீயும் கேளீர் ! இயற்கை வளம்தனிலே இயல்பாய்  வாழ்ந்த காலம் போய் எட்டிய தூரமெல்லாம் - ஏழடுக்கு கட்டிடம் காணுகின்ற காலமையா - இங்கு ! வெள்ளைக்காரன் வித்திட்டான்  வெளிநாட்டில் உலாவியது ! உலகமே நடுங்கியது ! உயிரும் போனது !  நாகரீக போர்வைதனில் - இங்கு பொல்லாத பூசல்கள் கடல் தாண்டி வந்ததுவே  கண்ணறியா வைரஸ் !  கொரோனா என்ற பெயரை கொடூரமாய் சூட்டினர் கொஞ்சி பேசாமல் கொஞ்சமாய் வாயை மூடினர் ! சிட்டாய் பறந்த மனிதன்  சிறைப்பட்டான் வீட்டில் உற்றார் , உறவினர்கள் எல்லாம் உற்றுப்பார்க்கும் புள்ளிகளாய் - இங்கு! பசியோடும் பட்டினியோடும்  போராடும் வாழ்வு இங்கு  பகைவர்களாய் பலரையும்  பார்க்கின்ற கணம் இது ! தாய் என்று ஓடவும் முடியவில்லை ! தாரம் என்று பார்க்கவும் இயலவில்லை!  தன்னந்தனியே தனிமையிலே  எரியுதய்யா சில உயிர்கள் ! தொடர்பாடல் சாதனங்களில்  தொடர்ந்து வரும் கல்வி தொகையானோருக்கு இங்கில்லை  தொடர்பு சாதனம் என்ற பள்ளி ! மலிவான பொருட்கள் கூட  மலையேறி போனது வில...

41 | CS | பெண்ணே புறப்படு

புதுமைப் பெண்ணே புறப்படு புதுயுக விடியலுக்காய் எம் முன்னே! புரட்சிகள் ஆயிரம் பூத்தாலும் புதுமைகள் ஏராளம் உதித்தாலும் உரிமைக்காய் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அடுப்பங்கரை அடியினிலே அவை அமர்ந்துபோய் விடுகின்றன! நாகரீகம் நகர்ந்தாலும் - நம் அடிமைத்தனம் அவிழ்த்து விடப்பட்டதா?? அத்தனை கனவுகளும் அரங்கேறி விட்டதா??? பாரதிப் பெண்ணாய் பாரினில் உதிக்க புறப்படு பெண்ணே ! புதுமையை நோக்கி ! by  P. Ajantha

40 | SS | வறியவனின் வறுமைப்பிடி

காலை எழும்புனது கால் வயிறு கஞ்சுக்காக - உனக்கு கல்லு முள்ளு குத்தினது கால் நடையாய் நடந்ததுமே என் கண் முன்னே நிற்குதய்யா! வறுமையின் பிடிக்குள்ளயும் - உன் பெத்த புள்ள வயிறாற - உன் வயிற காய வச்ச வருத்தமெல்லாம் வெறும் - வார்த்தைக்குள்ள அடங்கிடுமா? பச்ச புள்ள உடம்புகாரி பசி தீர்க்க மலையேறி பத்தாந் தேதி வந்து விட்டா பாவி மக படும் பாட சொல்ல பத்தாது இந்த வெறும் காகிதமே! வட்ட மேசை மாநாடாம் வறுமையே பிணிக்கோடாம் வறுமையே ஒழிக்கணுனு வாய் கிழிய பேசினாலு அடுப்பங்கரை அறிஞ்சிருக்கு அவ பட்ட அவலமெல்லாம்! தலைச்ச புள்ள தலைநிமிர்ந்தா தாங்க முடியாத துயரமெல்லாம் தலைத்தெறிக்க ஓடும்னு தவியா தவிச்சிடுவா...! வாசற்படி தாண்டி வந்தா வயிறு நிறைய உணவுக்காக வறியவனின் வறுமை நீங்க கோரப்பசி தீர்ந்திடுமா? உலகம் கை கோர்த்திடுமா??? by  P. Dharshani