Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

55 | YJ | கல்வியின் அவசியம்

வாழ்வில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்

ஒரு நுண்ணாய்வு கல்வி !


கல்வி என்பது மூன்றெழுத்தில் தொடரும் - சொல் அல்ல 

வாழ்வின் முடிவு வரை வாழும் செல்வம் கல்வி !


எமது எதிர்காலம் சிறந்த வழிகாட்டலில் அமைய - நாம்

பயணிக்கும் முதல் பள்ளி - கல்வியே !


பள்ளி பருவம் அழிவில்லா இன்பம் பிரியும் 

வழி பள்ளி மட்டுமே கல்வி - அல்ல 


பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி - ஆற்றல்

உண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்


கடல் கடந்த உத்தியோகம் செய்தாலும் கல்வி

அறிவு இன்றி எதுவும் இல்லை. 


கடலின் ஆழம் எதுவரை இருக்கின்றதோ அவ் 

ஆழத்தை விட கடல் கடந்த நூல் கல்வி தான் !


கண்களில் வண்ண மீன்கள் வரி வரி கோலம் - இட

சின்னஞ் சிறு மழலையின் - இன்ப வாழ்வு

இன்று புரியா புதிர் அன்று புகழைத் தரும்


கல்வியே என்றும் பெரும் செல்வம்

கண்ணின் நிலையான விம்பம் !


ஒவ்வொரு மனிதநேய ஆற்றலிலும் - ஒரு திறனாய்வு 

கல்வி - கல்வியே சிறந்த வழிகாட்டல் ! 


நல்ல புத்தகத்தை திரட்டி பார்க்கும் - திறனாய்வு

கடல் போன்று அறிவை வளரச் செய்யும் புத்தகம் 

தோல்வி வெற்றி இவற்றை கடந்து - எதிர்கால 

சந்ததி வர்ண பூக்களாய் - மலர !


கல்வி என்ற சிறந்த வழியில் மிதக்கும் கப்பலை 

போல் இன்றி - தாங்கும் கருவியாய் கல்வி வளரட்டும் !


ஆற்றில் சலசலவென ஓடும் நீர் இல்லையெனில்

எவ்வாறு வரட்சி நிலவுமோ - அதுபோல கல்வி

அறிவு இன்றி இவ் புவனம் ஈடேறாது !


பள்ளி படிப்போடு இருக்கும் ஒவ்வொரு தருணமும் 

இன்பமான - பொழுதுபோக்கு 


ஒரு செடியில் பூக்கும் மலரை - விட 

ஒரு நொடியில் பூக்கும் சிரிப்பு மிக உன்னதமானது 

இவற்றை கடந்து கல்வியின் அவசியம் பற்றி அறிவூட்டும் 


இந்த புவனத்தில் உதித்த ஒவ்வொரு - பூவையும் 

பல கோடி பூக்களாய் மலரச் செய்வோம் !


ஜாதி , மதம் , அன்பு இவற்றை கடந்து 

கல்வியை நேசிப்போம் 


சிறந்த பிரஜையாய் இவ்வுலகம் போற்ற 

வாழ்வோம் - கல்வியே கண்ணின்மணி !

by R. Amsawahini






Comments

Popular posts from this blog

54 | YS | கொரோனாவும் எம் நாடும்

வானரம் சூழ்ந்த வையகம் எங்கும்  பரவி வரும் கொடூரமான கொரோனா வாழ வேண்டிய மனிதரை வைகுண்டம் சென்றிட  வழியமைத்த கொரோனா    கூடுமா இன்னும் இல்லையேல் கூலியின் வயிற்றில் அடிக்குமா ...! அலை அலையாய் மனிதர் கூட்டத்தை கொன்று குவித்ததென்ன... அநாதை பினமாய் அள்ளி அள்ளி குவிப்பதென்ன ... கல கல வென கலகலப்பு ஒலித்து கொண்டிருந்த ஓராயிரம் வீடுகளில்  - இன்று கண்ணீரும் கம்பளையும் நிறைந்த காவியத்  தோற்றத்தை கண்டீரோ..... காடு மேடெல்லாம் ஓடித்திரிந்தவரின் கால்கள்  தரையில் பதித்து நின்றதென்ன... காணல் நீராய் போன எம் நாட்டு ஜனங்களின் கம்பீரமும் , கானகத்தையே சுற்றி வளைக்கும்  கனாக்களும் கடை தெருவிலே நின்ற  காட்சிகளை கண்குளிர கண்டீரோ கொலை கொலையாய் கொண்று தீர்த்து  கொடுங்கோலனாக மாறியதென்ன  கொரொனா என்ற கொடிய உயிரினம்  கூட்டம் கூட்டமாய் கூடி ஆடித் திரிந்த  குமரன் குமரியினம் இன்று  கூட்டுக்குள் முடங்கிக் கிடப்பதென்ன... கூலியாட்களின் குமுறல்களையும்  கூலிவீட்டு குழந்தைகளின் பசி அலறல்களையும்  கேட்கிறது அந்த காதின் வழி  கொடுங்கோலான கொரோனா என்ன...

16 | YS | மாற்றத்தை நோக்கி....

அரும் பெரும் வரலாறு கொண்டு ஆசியாவின் அமிர்தமாய் மின்னிக்கொண்டிருந்த தீவொன்று இயற்கை அன்னையின் இருப்பிடமாக ஈழம் எனும் பெயர் கொண்டு தன்னிறைவாய் தாளமிட்ட தீவொன்று மேற்குலக நாடுகள் மெய்சிலிர்த்துப் போகும் மேன்மை வளம் பூத்துக் குலுங்கிய தீவொன்று இப்பார் எனும் பெரும் புள்ளியை கொரானா எனும் சிறு புள்ளி அடக்கியாளும் காலம் தனில் வல்லரசு நாடுகள் வலுவிழந்து நிற்க உலகப் பொருளாதாரம் படுப்பாதாளம் நோக்கி செல்ல எம் ஈழமும் வறுமையின் வாசம் நுகர்ந்து கொண்டிருக்கிறது காலனின் பாசக்கயிறு கணத்து கொண்டு இருக்கிறது எம் தாய் ஈழத்தை கரம் தூக்கி நிமிர்ந்தெழ செய்ய சேயாய் நாம் கரம் நீட்ட வேண்டிய காலமிது விவசாயம் எனும் முதுகெலும்புக்கு போசாக்கு எனும் எழுச்சியூட்டுவோம் சமநிறைவு சமுதாயத்தை சாஸ்திரமாக்குவோம் வருங்கால தலைமுறையை வசந்தமாக்குவோம் தரமான வைத்தியத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்போம் கல்வி எனும் பேராயுதத்தை இளைய தலைமுறைக்கு இனபேதமின்றி ஒளிரச்செய்வோம் நியாயம் எனும் சொல்லுக்கு வலுவூட்டுவோம் எம் ஈழத்தாய் எழுந்து புன்னகையை உதிரவிட புதல்வர்களாய் எம் கடமையை கண்ணியத்துடன் செய்ய களம் காண்போம். by D. Devapragathi

38 | SS | எதிர்பார்ப்பு

  எதிர் பார்ப்பு அறிவு கொண்டு தான் அகிலம் ஆள முடியுமென்று அகரம் படிக்க நாங்கள் ஆசையாய் பள்ளி சென்றோம் அடுக்கு மாடி கட்டிடமும் ஆடம்பர வருப்பறையும் - இல்லை அன்பு ஒன்றே அறனென்று ஓதும் ஆசிரியர் மட்டுமே எமக்குண்டு போட்டிப் போட்டு படித்து ஒரு நாள் பேட்டி கொடுப்போம் பத்திரிக்கைக்கு பட்டம் பல பெற்று மாற்றி படைப்போம் புது மலையகத்தை இப்படி எத்தனை ஆசைகளை சுமந்து எதிர் கொண்டோம் இறண்டாயிரத்து இருபதை இருளாய் போகும் எதிர்காலம் என்று எள்ளளவும் எண்ணியதில்லை இன்று இருந்த இடத்திலேயே இணைய கல்வி நடக்கிறது இருக்கின்ற பிரச்சினைகளில் -நாங்கள் இணையம் தேடுவது எப்படி உலை கொதித்தும் அரிசியில்லை உயர் ரக கைப்பேசிக்கு எங்கே போக ஆன்லைன் கல்வி கற்க ஆசைதான்- எங்களுக்கும் ஆயிரம் ரூபா சம்பளத்தில் ஆடிப் போகும் விலைவாசியில் அரை வயிறு நிறைந்தால் போதும் ஆன்லைன் கல்வி அப்பறமே பள்ளி திறந்தால் படிப்போம் பட்டம் பலவும் பெறுவோம் தரமான கல்வி கிடைத்தால் தரணியை நாங்கள் ஆள்வோ ம் by Sridevi F12