Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

55 | YJ | கல்வியின் அவசியம்

வாழ்வில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்

ஒரு நுண்ணாய்வு கல்வி !


கல்வி என்பது மூன்றெழுத்தில் தொடரும் - சொல் அல்ல 

வாழ்வின் முடிவு வரை வாழும் செல்வம் கல்வி !


எமது எதிர்காலம் சிறந்த வழிகாட்டலில் அமைய - நாம்

பயணிக்கும் முதல் பள்ளி - கல்வியே !


பள்ளி பருவம் அழிவில்லா இன்பம் பிரியும் 

வழி பள்ளி மட்டுமே கல்வி - அல்ல 


பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி - ஆற்றல்

உண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்


கடல் கடந்த உத்தியோகம் செய்தாலும் கல்வி

அறிவு இன்றி எதுவும் இல்லை. 


கடலின் ஆழம் எதுவரை இருக்கின்றதோ அவ் 

ஆழத்தை விட கடல் கடந்த நூல் கல்வி தான் !


கண்களில் வண்ண மீன்கள் வரி வரி கோலம் - இட

சின்னஞ் சிறு மழலையின் - இன்ப வாழ்வு

இன்று புரியா புதிர் அன்று புகழைத் தரும்


கல்வியே என்றும் பெரும் செல்வம்

கண்ணின் நிலையான விம்பம் !


ஒவ்வொரு மனிதநேய ஆற்றலிலும் - ஒரு திறனாய்வு 

கல்வி - கல்வியே சிறந்த வழிகாட்டல் ! 


நல்ல புத்தகத்தை திரட்டி பார்க்கும் - திறனாய்வு

கடல் போன்று அறிவை வளரச் செய்யும் புத்தகம் 

தோல்வி வெற்றி இவற்றை கடந்து - எதிர்கால 

சந்ததி வர்ண பூக்களாய் - மலர !


கல்வி என்ற சிறந்த வழியில் மிதக்கும் கப்பலை 

போல் இன்றி - தாங்கும் கருவியாய் கல்வி வளரட்டும் !


ஆற்றில் சலசலவென ஓடும் நீர் இல்லையெனில்

எவ்வாறு வரட்சி நிலவுமோ - அதுபோல கல்வி

அறிவு இன்றி இவ் புவனம் ஈடேறாது !


பள்ளி படிப்போடு இருக்கும் ஒவ்வொரு தருணமும் 

இன்பமான - பொழுதுபோக்கு 


ஒரு செடியில் பூக்கும் மலரை - விட 

ஒரு நொடியில் பூக்கும் சிரிப்பு மிக உன்னதமானது 

இவற்றை கடந்து கல்வியின் அவசியம் பற்றி அறிவூட்டும் 


இந்த புவனத்தில் உதித்த ஒவ்வொரு - பூவையும் 

பல கோடி பூக்களாய் மலரச் செய்வோம் !


ஜாதி , மதம் , அன்பு இவற்றை கடந்து 

கல்வியை நேசிப்போம் 


சிறந்த பிரஜையாய் இவ்வுலகம் போற்ற 

வாழ்வோம் - கல்வியே கண்ணின்மணி !

by R. Amsawahini






Comments

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

26 | YJ | தழைக்க ஏங்கும் செந்நெல்

உணவின் அருமை அறியாது உன்னதமான என்னை அன்று உதாசீனமாய் வீசி எறிந்தாயே சேற்றோடு போராடுபவனின் உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட செந்நெல் நான்- இன்று என் ஏளனப்பார்வைக்கு முன் நீ விழிகளும் உற்று நோக்கிட போராடும் சிறுமையை விஞ்சிய சிறுமை கொரோனா என்னும் பெயரால் காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை அன்று நீ என்னை வீசினாய் இன்று எனக்காக ஏங்குகின்றாய் இத்தனை யுகங்களாக என்னை இரைத்து எறிந்தது போதும் நாளைய உலகை நீ காண இக்கனமே என்னை பூமித்தாயோடு இணையச்செய்வாய் நாளை உன் பசிப்பிணிக்கு நானே மருந்தாக உதிப்பேன். by S. Shakthi

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana