Skip to main content

Posts

Showing posts with the label Goal 1

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

40 | SS | வறியவனின் வறுமைப்பிடி

காலை எழும்புனது கால் வயிறு கஞ்சுக்காக - உனக்கு கல்லு முள்ளு குத்தினது கால் நடையாய் நடந்ததுமே என் கண் முன்னே நிற்குதய்யா! வறுமையின் பிடிக்குள்ளயும் - உன் பெத்த புள்ள வயிறாற - உன் வயிற காய வச்ச வருத்தமெல்லாம் வெறும் - வார்த்தைக்குள்ள அடங்கிடுமா? பச்ச புள்ள உடம்புகாரி பசி தீர்க்க மலையேறி பத்தாந் தேதி வந்து விட்டா பாவி மக படும் பாட சொல்ல பத்தாது இந்த வெறும் காகிதமே! வட்ட மேசை மாநாடாம் வறுமையே பிணிக்கோடாம் வறுமையே ஒழிக்கணுனு வாய் கிழிய பேசினாலு அடுப்பங்கரை அறிஞ்சிருக்கு அவ பட்ட அவலமெல்லாம்! தலைச்ச புள்ள தலைநிமிர்ந்தா தாங்க முடியாத துயரமெல்லாம் தலைத்தெறிக்க ஓடும்னு தவியா தவிச்சிடுவா...! வாசற்படி தாண்டி வந்தா வயிறு நிறைய உணவுக்காக வறியவனின் வறுமை நீங்க கோரப்பசி தீர்ந்திடுமா? உலகம் கை கோர்த்திடுமா??? by  P. Dharshani

28 | YS | ஒழியட்டும் வறுமை ஒளிரட்டும் நம் நாடு

வறுமையை ஒழிக்கவென வரம்பில்லா திட்டங்கள் பல ஒழிந்ததென்னவோ வறுமையில் வாடியவர் தான் வறுமை அல்ல . உழைப்பவன் உயர்கிறான் என்றோர் பழமொழி கேட்டேன் அன்று - அல்ல உழைப்பினை சுரண்டுபவனே உயர்கிறான் இன்று . ஒரு புறம் குப்பை கூடை நிறைய நிறைய உணவு மறு புறம் வயிறு நிறைய கூட ஒரு வேளை உணவில்லை இவற்றை அறியாமை என உதரித்தள்ளிட முடியாது சற்றும் அறிய விரும்பாத மனித மணங்களே காரணம் . உணவை வீணடிக்கும் ஒவ்வொரு கணமும் நினைவில் வரட்டும் உண்ண உணவின்றி தவிக்கும் எம்மவர் குமுறல் . புதியதொரு பூமி செய்வோம் அதிலாவது வறுமை எனும் சொல் அகராதியில் இருந்து அழியட்டும் கொரொனா நிலையுடன் இந்த கொடிய வறுமையும் ஒழியட்டும் மருந்தால் அல்ல நீங்கள் மனம் திறந்தால்...... by R Logini

18 | YS | முருக்கு மீசைகவி

வையகம் போற்றும் கவிஞருக்கே என் நெஞ்சகம் போற்றி கவி வடித்தேன். வையகம்  போற்றும்   கவிஞருக்கே என் நெஞ்சகம் போற்றி கவி வடித்தேன். காலங்களுக்கு ஏற்ப கவி வடித்தோர்பல வடித்தகவி காலங் காலமாய் நிலைப்பதோ சில பல அடிகளில் கவி வடித்தாலும் பாரத கவி பாரதியின் கவிக்கு ஈடாகுமோ அவர்கவியின் சித்தமோ என்னவோ நடப்பதெல்லாம் கவியடி தொட்டுநடக்கிறது. கொடுமைகள் கண்டறிந்த நாதருக்கு நடந்தது கொடுமையோ இல்லை காலங்கள் செய்தகோலமோ என்நாயகன் காலமானநேரத்தில் இருபது பேர் இருந்தது. என் நாயகன் காலமானநேரத்தில் இருபது பேர் இருந்தது. அய்யன் பாடையில் சென்றபின்பு தான் பதான் பாடினர் பார்வை பாரதியை காண்கிறது. நினைவில் நீங்காத கனவில் களையாத முருக்கு மீசை கவிஞரின் வரிகள் முடங்கி கிடக்கும் மானிடரை மீட்டிடாதோ. நினைவில் நீங்காத கனவில் களையாத முருக்கு மீசை கவிஞரின் வரிகள் முடங்கி கிடக்கும் மானிடரை மீட்டிடாதோ. by T.Yuvanshankar

16 | YS | மாற்றத்தை நோக்கி....

அரும் பெரும் வரலாறு கொண்டு ஆசியாவின் அமிர்தமாய் மின்னிக்கொண்டிருந்த தீவொன்று இயற்கை அன்னையின் இருப்பிடமாக ஈழம் எனும் பெயர் கொண்டு தன்னிறைவாய் தாளமிட்ட தீவொன்று மேற்குலக நாடுகள் மெய்சிலிர்த்துப் போகும் மேன்மை வளம் பூத்துக் குலுங்கிய தீவொன்று இப்பார் எனும் பெரும் புள்ளியை கொரானா எனும் சிறு புள்ளி அடக்கியாளும் காலம் தனில் வல்லரசு நாடுகள் வலுவிழந்து நிற்க உலகப் பொருளாதாரம் படுப்பாதாளம் நோக்கி செல்ல எம் ஈழமும் வறுமையின் வாசம் நுகர்ந்து கொண்டிருக்கிறது காலனின் பாசக்கயிறு கணத்து கொண்டு இருக்கிறது எம் தாய் ஈழத்தை கரம் தூக்கி நிமிர்ந்தெழ செய்ய சேயாய் நாம் கரம் நீட்ட வேண்டிய காலமிது விவசாயம் எனும் முதுகெலும்புக்கு போசாக்கு எனும் எழுச்சியூட்டுவோம் சமநிறைவு சமுதாயத்தை சாஸ்திரமாக்குவோம் வருங்கால தலைமுறையை வசந்தமாக்குவோம் தரமான வைத்தியத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்போம் கல்வி எனும் பேராயுதத்தை இளைய தலைமுறைக்கு இனபேதமின்றி ஒளிரச்செய்வோம் நியாயம் எனும் சொல்லுக்கு வலுவூட்டுவோம் எம் ஈழத்தாய் எழுந்து புன்னகையை உதிரவிட புதல்வர்களாய் எம் கடமையை கண்ணியத்துடன் செய்ய களம் காண்போம். by D. Devapragathi

09 | YS | வறுமை

ஊரடங்கு சட்டம் போட்டார்கள்  பல ஏழை ஜனங்களின் பசி அடங்க எந்த சட்டதிட்டமோ போடவில்லை.  உலையில் தண்ணீர் கொதிக்க வயிறு பற்றி எரியும். கட்டுப்படியாகாத விலை இருந்தும்  வயிற்றை கட்டுப்படுத்த வழியில்லை. விளைந்த நெல்லில் ஒரு நெல்லில் கூட ஏழையின் பெயர் எழுதப்படவில்லை.  யார் குற்றம் ? இருக்கின்றவன் சேகரித்தால் சேமிப்பு. இல்லாதவனுக்கு ஏற்படும் பாதிப்பு. எவன் பணக்காரன் ? எவன் ஏழை ? அவனும் பதுக்குகின்றான் இவனும் பதுக்குகின்றான்.  அவன் சேமிக்க என்கிறான் இவன் பசிக்கு  என்கிறான். நிவாரணம் என்பது வறுமை குடும்பத்திற்கு அல்ல. அது கூட்டுக் குடும்பத்திற்கு உரியதானது. மனித வர்க்கத்தை போலவே  அடிக்கின்ற காற்று > மழைக்கு கூட ஏழையின்  வயிற்றில் அடித்து தான் பழக்கம் போல. நிவாரண பணி எல்லாம்  எவன் எவன் வீட்டு நிர்மாணபணிக்கோ போய்விட்டது. ஏழை வைத்த வாழை இருபுறமும் குலை தள்ளும் அதில்; ஒரு பழம் கூட அவனுக்கு சொந்தமில்லை. பல பேரின் ஏழ்மை வாழ்க்கையில் கண்ணத்தில் வறுமை வரைந்த கோலமாய் கண்ணீர் உண்டு. பதுக்கப்படுகின்ற எதுவும் சமமாக கொடுக்கப்படுமானால்  ஏழையின் வறுமை பகைவான் ஒழ...