Skip to main content

Posts

Showing posts with the label 05.Walapane

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

64 | CS | விழித்துக் கொண்ட அனுபவம்

 துளிகூட வறுமையை  காணாத தேசம்  கண்ணீர் துளியுடன்  வாழ்வை கடந்த சோகம்  கரையில்லா    மனங்களிலும்   வறுமையின் கலங்கம் பிஞ்சுப் பிள்ளைகளின்  விழிகளிலும்   பசியின் ஏக்கம்  அண்ணியனின் படையெடுப்பில்  அழியாத தேகம்  கொரோனா என்ற கோரனின்  காலடியில் எங்கள் உயிர் தாகம்  ஒளியிலும் இருளை கடந்த   எமக்கு விடியல் கல்வியெனும் இலக்கணம்.  By. Y.Sanjaya

63 | YJ | மறுபக்கத்தில் இணையம்

அறியாத முகங்களை   எதிர்கால சாதனைக்காக இணைத்த சரித்திரம்  ஊர்க்குருவிகளாய் சுற்றாது கரங்களில் கண்டெடுத்த  அற்புதம்  முடக்கத்தில் முடங்கி  கிடந்தவனையும் மீட்டெடுத்த  நயம்  தெரியவில்லை  புரியவில்லை  மாயமா அல்லது  கொரோனாவின் சூழ்ச்சியா வறுமையின் வரலாறுகளும்  கைக்குள் அடக்கியது  காட்சிகளை  எத்தனை சவால் எவ்வளவு கண்ணீர்  இயங்கும் மீண்டு எழும்  இணையமென்ற வட்டத்தில்  எம் வாழ்வு by J. Dhinusha

26 | YJ | தழைக்க ஏங்கும் செந்நெல்

உணவின் அருமை அறியாது உன்னதமான என்னை அன்று உதாசீனமாய் வீசி எறிந்தாயே சேற்றோடு போராடுபவனின் உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட செந்நெல் நான்- இன்று என் ஏளனப்பார்வைக்கு முன் நீ விழிகளும் உற்று நோக்கிட போராடும் சிறுமையை விஞ்சிய சிறுமை கொரோனா என்னும் பெயரால் காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை அன்று நீ என்னை வீசினாய் இன்று எனக்காக ஏங்குகின்றாய் இத்தனை யுகங்களாக என்னை இரைத்து எறிந்தது போதும் நாளைய உலகை நீ காண இக்கனமே என்னை பூமித்தாயோடு இணையச்செய்வாய் நாளை உன் பசிப்பிணிக்கு நானே மருந்தாக உதிப்பேன். by S. Shakthi