Skip to main content

Posts

Showing posts from September 28, 2021

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

39 | SS | எழுந்திடு

உள்ளொளி சுடர் மூட்டி உன் விழி தனில் ஏற்றி அறிவால் உயரும் கோபுரம் செய்-அதில் பெண்ணவள் கண்ட அவமானம் நெய் சாதிகள் சாஸ்திரங்கள் கற்பிதம் இயம்பும் சட்டங்களை விட்டொழித்து அதிகார கூண்டின் மேலேறி கர்ஜனை செய்! உன் விதி எழுது(ம்)கோலை மாற்றான் வசமிழக்காதே உன்னை நீயே துணிந்து எழுது! உன் தேவை மீதேறி பயணப்படு வழியில் மிடரும் கற்களின் மேல் புன்னகை அணி பயம் செதுக்கும் உருவில் உயிர் நிரப்பி உன் வீரியத்தை கொள்ளியிடாதே.. உன் இணைக்கும் மதிப்பளி அன்பால் அடைகாக்கும் போர்குண இறக்கைகள் இயற்கை உனக்களித்த செல்வம் தோழி! சட்டங்களை நீ கூவு சண்டாளனை கண்டால் ரௌத்திரம் பேசு படிப்பால் பாதை செய்-அதில் பண்பால் உன் குலம் நீவு பரந்த வெளியில் உன் சுதந்திரம் போற்று அடிமை செய்யும் களைகளின் முன் நீயே ஆயுதமாகு எப்போதும் முழக்கமிடு.. தேசத்தின் எழுச்சிதனை சிரம் ஏற்று சிறகடி..! By  Nivejiththa. A

38 | SS | எதிர்பார்ப்பு

  எதிர் பார்ப்பு அறிவு கொண்டு தான் அகிலம் ஆள முடியுமென்று அகரம் படிக்க நாங்கள் ஆசையாய் பள்ளி சென்றோம் அடுக்கு மாடி கட்டிடமும் ஆடம்பர வருப்பறையும் - இல்லை அன்பு ஒன்றே அறனென்று ஓதும் ஆசிரியர் மட்டுமே எமக்குண்டு போட்டிப் போட்டு படித்து ஒரு நாள் பேட்டி கொடுப்போம் பத்திரிக்கைக்கு பட்டம் பல பெற்று மாற்றி படைப்போம் புது மலையகத்தை இப்படி எத்தனை ஆசைகளை சுமந்து எதிர் கொண்டோம் இறண்டாயிரத்து இருபதை இருளாய் போகும் எதிர்காலம் என்று எள்ளளவும் எண்ணியதில்லை இன்று இருந்த இடத்திலேயே இணைய கல்வி நடக்கிறது இருக்கின்ற பிரச்சினைகளில் -நாங்கள் இணையம் தேடுவது எப்படி உலை கொதித்தும் அரிசியில்லை உயர் ரக கைப்பேசிக்கு எங்கே போக ஆன்லைன் கல்வி கற்க ஆசைதான்- எங்களுக்கும் ஆயிரம் ரூபா சம்பளத்தில் ஆடிப் போகும் விலைவாசியில் அரை வயிறு நிறைந்தால் போதும் ஆன்லைன் கல்வி அப்பறமே பள்ளி திறந்தால் படிப்போம் பட்டம் பலவும் பெறுவோம் தரமான கல்வி கிடைத்தால் தரணியை நாங்கள் ஆள்வோ ம் by Sridevi F12

36 | YS | மனித இனம் அதன் - காலச்சக்கரம்

கடிகார முற்களாய் அழகாய் நகர்ந்தன.  அம் முற்களோ ! உலர் மின்கலம் இழந்த கடிகாரமாய்      சிதைவடையும் என எள்ளளவும் எண்ணாத போது  வைரஸ் என்ற வார்த்தை - தினந்தேறும்      வாதமிடுகின்றது நம்முடன்....  முகக் கவசமும் > கிருமிக் கொல்லியும் கொண்டு      எதிர்த்திட துடிக்கும் தருணம் தன்னில்  ஓடும் நீர் கொண்டு       கைகளை சுத்தமாகக் கழுவிட  கரை புரண்டு ஓடுகிறதாம் கொரோனா வைரஸ்....      இக் கடலால் சூழப்பட்ட தீவு தன்னில் நீர் இன்றி தவித்திடும் மனித இனங்கள்       வற்றிப் போன வரம்புகளை மட்டுமே காண்கின்றன...   "நீர் இன்றி  அமையாது உலகு" - என்ற        கூற்று கரை படிந்து - இன்றோ! "நீர் இன்றி தவிக்கும் மானிடம்"...        என்றுதான் மாற்றம் பெற்றுள்ளது. பருகிட நீரும் > மனித பணிகளை முடித்திட       பக்க விளைவற்ற சுகாதார வசதிகளோடு  எண்ணற்ற வசதிகளை வேண்டி நிற்பதால்      வற்றா கிணறுகளும் >...

35 | CJ | கொரோனா தொற்று நிலைமையுடன் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைதல்

சாமிக்கு இங்கே சங்கடம் வந்திடுச்சி  உக்கிரம் தொற்றின் உச்சமே  உலகமே அழிய காரணமாயிற்றே  மாணவ சமுதாயம் கல்வி  மங்கி போயிற்றே.... மனித வர்க்கத்தை அழிக்க  வந்த கொடிய  நுண் தொற்றே.... கல்வியுமின்றி கடமையுமின்றி வாழ்ந்திடலாயிற்றே..... தெருவோரமாயிருந்த தொற்று  வீட்டிற்குள் நுளைந்து  விட்;;டதே..... வாழும் வாழ்க்கை கேள்வி  குறியாகி விட்டதே..... தூரமாக நீ இருந்தாலும்  அச்சத்தில் பல உயிர்  செல்கிறதே..... உலகமே கவலையில்  வாடுகிறதே ! ஏன்  இந்த சாபம் மனிதா!.... பூமியில் பல லட்சம்  உயிர்; விருந்தாகி  விட்ட பின்னும்  விரட்டி தொடர்தல் முறையில்லை..... பூமியை விட்டு விட்டு  புறப்படு மாற்று கிரகம்  அங்கேயும் மனிதருண்டா  ஆராய்ந்து சொல்லிவிடு குட் பாய் !... கொரோனாவே குவலயத்தை  வாழவிடு ...... by  C. Prashanthini M011

34 | CJ |ஆண் , பெண் பால்நிலை சமூகத்தை அடைதல் மற்றும் பெண்களையும் பெண் பிள்ளைகளையும் வலுப்படுத்தல்.

பண்பு தரம் மாறாத பெண்ணுக்கு   ஆற்றல் மேலோங்கும் பிள்ளையாக தான்  வலுப்பெற்று உதித்தோம்!... உற்சாகத்திற்கு உறுதிப்படுத்தல் இல்லை நாங்கள் பெண்பிள்ளைகளாம்!... கூடை எற்றி கொழுந்து பறிக்கும் கீழ் மட்ட பாகுபாடு நீங்கி - எங்களுக்குள் திறன்மிக்க தீர்மானத்திற்கான பால்நிலை  சமவுரிமை அங்கீகாரம் தர வேண்டும்!.... சிறுக சிறுக சேர - குவிந்துள்ள வன்முறைகள் நீங்க - எங்கள் இரு கண்களாம் எண்ணும் எழுத்தும் சுடரொழி பரப்ப  புலமை வெளிப்படும் பரிசிலோடு புனர் ஜென்மம் அடைவோம்!.... by  P. Jinnuksha. F158

33 | YJ | நிலைபேண்தகு அபிவிருத்தியில் கல்வியே துணைகோள்...

கல்வி > வறுமை > போசணை மட்டம் இம்மூன்றும் பிரியா தொடர்புடையன... எம்மோடு உடன்பிறந்த வறுமையினால்  எம்மில் உதித்தெழுந்த போசணைமட்ட பிரச்சினையில்  எம்மை மீட்டெடுக்கும் சக்தி கொண்டது கல்வி... இத்தொடர்பை அறியாதோர் அறியும் வரை காத்திருப்பதில்லை... இதனால் மேலோர் > கீழோர் என்ற பாகுபாடு... சம உரிமையின்மை > தொழிலின்மை... இறுதியில் அவமானங்கள்... வேதனைகள்...  இதில் எங்கே எவ்வாறு அபிவிருத்தி?  எமக்கு கீழே இருந்த நாடுகள் இன்று விண்னைத் தொட... நாம் மட்டும் அதே இடத்தில்... இனி கல்வியின் துணையோடு நிலைபேண்தகு அபிவிருத்தியே எம் நோக்கு... எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமாம்... எமது அறிவு வளர்ந்தால் எமது தரம் உயரும்...  மேல் > கீழ் வர்க்கம் என்ற அநாவசிய பிளவு ஒழியும்... ஆணோ > பெண்ணோ சமமான உரிமை கிட்டும்... புலமைபரிசில்கள் குவிய தொழில் வாய்ப்புகள் வந்து சேரும்... தொழிநுற்ப உலகில் எம்மை முன்னேற்றும் பிரம்மாஸ்திரமே கல்வி... கல்வி கற்று எமது நாடாகிய இலங்கையை  நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்கி முன்னேற்றி வெற்றி காண்போம்... by  P. Chithusshaa F090

32 | CJ | துகிலிகையும் துகைக்கின்றது

அகிதம் செய்ய வந்ததோ - அகவல் நாட்டின் ஓசையானது  அசத்தியம் இதை அழிக்க அரும்பாடு பட்டோம் ஆகண்டலம் படைத்தானோ - அங்கணன்  காப்பானோ - அசகாய சூரனாலும்  அழிக்க முடியாதெனும் மாயை  அகாராத்திரம் அகதி வாழ்வு  அழிக்க வந்த ஆட்கொல்லி  அகோரம் கொரோனா - இவற்றை  அகைக்கும் போதும் ஆழ்கின்றேன். இம்மலக்கத்தையழிக்க மானிடர்  ஓன்றித்து மதிசாய்வோம் - உயவையெனும்  பனி உதயனால்தான் தீரும்  இத்தாவத்தில் தவிப்போருக்கு  தாரதம்மியமின்றி தாரிப்போம்  கொரோனாவின் கொடுமை கூற வல்லது  இதையெண்ணி என்  துகிலிகையும் துகைக்கின்றது. By S. Suren kumar M134

30 | YS | அழிக்கும் கொரோனாவும், அழியும் அபிவிருத்தியும்.

கொரோனாவால் முடங்கிய நீ  கொத்தடிமையாக கோடிஸ்வரனிடம் கையேந்தும் போது சற்று கவனி - நீ செய்த வேலை உன் சந்ததியை தாக்குமா? இல்லை உயர தூக்கமா என்று  அது  உன்  கையிலே விண்ணைத் தொட விவசாயம் செய்த விவசாயி இன்று வீட்டினுள் முடங்கியுள்ள வீடும் பேரும் இருந்தும் யாசகம் கேட்கும் யாசகர்  வெறுமனே இருக்கும் வீதியை விட்டு விண்ணுக்கு செல்கின்றனர். போசாக்கு இல்லாத குழந்தைகளுக்கு போஷாக்கு என்ற நிலைக்காக சத்துணவு பாடசாலை தோரும் வழங்கியபோது  அதற்காய் பாடசாலை சென்ற சிறார்கள் இன்று பஞ்ச பட்டினியால் வாடுகின்றனர். அனைவருக்கும் கல்வி என்ற நிலை தடம்மாறி பணம் படைத்தவனே படிக்கலாம் என்றாகிவிட்டது தொழில்நுட்பத்தை தூணாய் நம்பிய இளைஞர்கள் இன்று தன் எண்ணத்தை தொலைத்து வாழ்கின்றனர். எப்படியாவது எதிர்கால சந்ததி நோயற்று வாழ வேண்டுமென எண்ணி சுகாதாரமும் சுத்தமும் பேணிய நாட்டின் அபிவிருத்தி அர்த்தமற்று மரணங்களின் மேடையாய் ஆகிவிட்டது  இன்று கொரோனாவால். by D. Prashandhanee (F17)

29 | YS | விலகிவிடு

விடியலும் அஸ்தமனமாகிறது – உன் கோரப்பிடியில் வாசற் கதவைத் திறக்க தயக்கம் ஏதோ மனதில் கதை பேசும் காதலனும் தள்ளிச் செல்கிறான் - தொற்று என்று பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேள் உன் நாடகமும் தெருவில் கதை போடும் உன்னால் சமூக மாற்றம் - பல உதவும் கரங்களின் தோற்றம் (சமூக) இடைவெளிகள் தூரம் சென்றாலும் இன்னும் பின்னடைவு வாழ்வில் மட்டுமல்ல வளர்ச்சியிலும் தான் பெற்ற செல்ல மகள் பூப்படைந்த வேலையில் - தாய் பூரிக்க நேரமில்லை நகர் சென்ற தந்தை வீடு வந்து சேர்க்கையில் கையில் ஒன்றுமில்லை நடை போட இடமிருந்தும் - ஊரடங்கு தடை போட உத்தரவு மனதை மயக்கும் தென்றலும் கவசமிட கட்டளை ‘எனக்கும் கொரோனா’ என்று மேனிக்கிதமான காலை வெயில் கூட சுடுகிறது – நாம் தரும் இன்னல் எண்ணி ஓய்வில்லாமல் சப்தமிடும் அலைகள் ஓய்வெடுக்க எண்ணுகிறது தினம் தினம் மாற்றம் - நடை போடும் கொடூர நாடகத்தால் இதை எண்ணிப்பார்க்க உனக்கு நேரமில்லையோ? பிறந்த இடத்தில் உன் பிடிப்பு இல்லாதப்போது புகுந்த இடம் ‘மட்டும் எதற்கு’ கொரோனாவே கடந்து செல்வது காலங்களை மட்டுமல்ல – எங்கள் கண்ணீரையும் தான்! விலகிவிடு எம்மை விட்டுவிடு இனியாவது வாழவிடு by Selvanayagam Th...