Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

44 | CS | கொரோனா.... வைரஸ்.... ஒழிய வேண்டும் !...

சுற்றித் திரிந்த இடமெல்லாம் 

    சுடுகாடாய் மாற்றிவிட்டாய் ! 

அண்ணன் தம்பி போல பழகியவரையெல்லாம் 

    எதிரியாக பார்க்க வைத்தாய் !

பசிக்கு உணவு தேடிய உடல்களையெல்லாம் 

    உனக்கு இறையாக்கி கொண்டாய் !

இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்று 

    சுற்;றித் திரிந்து கொண்டிருக்கிறாய் இங்கு ! 


உருவத்தில் நீ சிறியவனாக இருந்தாலும் 

    நீ மிகக் கொடியவன் என உணர்த்திவிட்டாய் 

எம் மக்களை சாய்த்து....

    உனை கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும்

நீ யார் என் காட்டிவிட்டாய்....

     உன் முகத்திரையை... 


நீ சென்ற இடமெல்லாம் அழுகுரல் கேட்கிறதே !

    நீ அடைக்களம் கேட்ட இடமெல்லாம்

நிரம்பிப்போய் கிடக்கிறதே உன் தொற்றால் !..

    எத்திசையிலும் உனை காண முடிகிறதே..!

 உனக்கு என்னதான் வேண்டும் எங்களிடம்...!


முன்னோர்கள் சொல்லி வைத்த தர்மங்களை

    மதித்து நடந்திருந்தால் எங்களுக்கு ஏன் இந்த நிலைமை..

உனை சொல்லிக் குற்றமில்லை   

      எங்களைதான் சொல்ல வேண்டும் ...!

விஞ்ஞானம் என்று சொல்லி கொண்டு 

       மெய்ஞானத்தை மறந்து ஆடிநோம்...

அதற்கு பலனாகத்தான் அனுபவிக்கிறோம்

        உனை வாங்கிக் கொண்டு...!


என் நாடு > என் வீடு என்று எல்ல போட்டு 

     வாழ்ந்த எங்களுக்கு ....

எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என   

      உணர்த்திவிட்டாய் இந்த நிமிடத்தில்...!

இது தான் எங்களுக்கு அலாரம். இதில் 

      நாங்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால்

உனை போல எத்தனை நோய்களிடம் மாட்டிக்கொள்ளுமோ 

    எங்கள் பூமி..!


சத்தம் இல்லாத உன் போர் 

   எங்களை அடக்கிவிட்டது !

யுத்தம் இல்லாத உன் போர்

   எங்களை பலவீனத்தை புரிய வைத்து விட்டது ! 

உனைத் திட்டுவதற்கோ உனை சாபமிடுவதற்கோ 

   எங்களுக்கு உரிமையில்லை என நினைக்கிறோம் !

ஏன் என்றால் ? உன்னை நாங்கள் தான் உருவாக்கினோம் 

   நாங்களே முதள் குற்றவாளி என ஒப்புக்கொள்கிறோம் ! 


உனை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம் !    

   நீ வந்த வழி யாருக்கும் தெரியாது !

நீ செல்லும் வழி யாருக்கும் தெரியாமல் சென்றுவிடு !

    எங்களை நிம்மதியாக வாழவிடு.

கொரோனாவே .....!!

by A. Saradha




Comments

Popular posts from this blog

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச...

16 | YS | மாற்றத்தை நோக்கி....

அரும் பெரும் வரலாறு கொண்டு ஆசியாவின் அமிர்தமாய் மின்னிக்கொண்டிருந்த தீவொன்று இயற்கை அன்னையின் இருப்பிடமாக ஈழம் எனும் பெயர் கொண்டு தன்னிறைவாய் தாளமிட்ட தீவொன்று மேற்குலக நாடுகள் மெய்சிலிர்த்துப் போகும் மேன்மை வளம் பூத்துக் குலுங்கிய தீவொன்று இப்பார் எனும் பெரும் புள்ளியை கொரானா எனும் சிறு புள்ளி அடக்கியாளும் காலம் தனில் வல்லரசு நாடுகள் வலுவிழந்து நிற்க உலகப் பொருளாதாரம் படுப்பாதாளம் நோக்கி செல்ல எம் ஈழமும் வறுமையின் வாசம் நுகர்ந்து கொண்டிருக்கிறது காலனின் பாசக்கயிறு கணத்து கொண்டு இருக்கிறது எம் தாய் ஈழத்தை கரம் தூக்கி நிமிர்ந்தெழ செய்ய சேயாய் நாம் கரம் நீட்ட வேண்டிய காலமிது விவசாயம் எனும் முதுகெலும்புக்கு போசாக்கு எனும் எழுச்சியூட்டுவோம் சமநிறைவு சமுதாயத்தை சாஸ்திரமாக்குவோம் வருங்கால தலைமுறையை வசந்தமாக்குவோம் தரமான வைத்தியத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்போம் கல்வி எனும் பேராயுதத்தை இளைய தலைமுறைக்கு இனபேதமின்றி ஒளிரச்செய்வோம் நியாயம் எனும் சொல்லுக்கு வலுவூட்டுவோம் எம் ஈழத்தாய் எழுந்து புன்னகையை உதிரவிட புதல்வர்களாய் எம் கடமையை கண்ணியத்துடன் செய்ய களம் காண்போம். by D. Devapragathi

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!