Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

44 | CS | கொரோனா.... வைரஸ்.... ஒழிய வேண்டும் !...

சுற்றித் திரிந்த இடமெல்லாம் 

    சுடுகாடாய் மாற்றிவிட்டாய் ! 

அண்ணன் தம்பி போல பழகியவரையெல்லாம் 

    எதிரியாக பார்க்க வைத்தாய் !

பசிக்கு உணவு தேடிய உடல்களையெல்லாம் 

    உனக்கு இறையாக்கி கொண்டாய் !

இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்று 

    சுற்;றித் திரிந்து கொண்டிருக்கிறாய் இங்கு ! 


உருவத்தில் நீ சிறியவனாக இருந்தாலும் 

    நீ மிகக் கொடியவன் என உணர்த்திவிட்டாய் 

எம் மக்களை சாய்த்து....

    உனை கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும்

நீ யார் என் காட்டிவிட்டாய்....

     உன் முகத்திரையை... 


நீ சென்ற இடமெல்லாம் அழுகுரல் கேட்கிறதே !

    நீ அடைக்களம் கேட்ட இடமெல்லாம்

நிரம்பிப்போய் கிடக்கிறதே உன் தொற்றால் !..

    எத்திசையிலும் உனை காண முடிகிறதே..!

 உனக்கு என்னதான் வேண்டும் எங்களிடம்...!


முன்னோர்கள் சொல்லி வைத்த தர்மங்களை

    மதித்து நடந்திருந்தால் எங்களுக்கு ஏன் இந்த நிலைமை..

உனை சொல்லிக் குற்றமில்லை   

      எங்களைதான் சொல்ல வேண்டும் ...!

விஞ்ஞானம் என்று சொல்லி கொண்டு 

       மெய்ஞானத்தை மறந்து ஆடிநோம்...

அதற்கு பலனாகத்தான் அனுபவிக்கிறோம்

        உனை வாங்கிக் கொண்டு...!


என் நாடு > என் வீடு என்று எல்ல போட்டு 

     வாழ்ந்த எங்களுக்கு ....

எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என   

      உணர்த்திவிட்டாய் இந்த நிமிடத்தில்...!

இது தான் எங்களுக்கு அலாரம். இதில் 

      நாங்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால்

உனை போல எத்தனை நோய்களிடம் மாட்டிக்கொள்ளுமோ 

    எங்கள் பூமி..!


சத்தம் இல்லாத உன் போர் 

   எங்களை அடக்கிவிட்டது !

யுத்தம் இல்லாத உன் போர்

   எங்களை பலவீனத்தை புரிய வைத்து விட்டது ! 

உனைத் திட்டுவதற்கோ உனை சாபமிடுவதற்கோ 

   எங்களுக்கு உரிமையில்லை என நினைக்கிறோம் !

ஏன் என்றால் ? உன்னை நாங்கள் தான் உருவாக்கினோம் 

   நாங்களே முதள் குற்றவாளி என ஒப்புக்கொள்கிறோம் ! 


உனை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம் !    

   நீ வந்த வழி யாருக்கும் தெரியாது !

நீ செல்லும் வழி யாருக்கும் தெரியாமல் சென்றுவிடு !

    எங்களை நிம்மதியாக வாழவிடு.

கொரோனாவே .....!!

by A. Saradha




Comments

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana

25 | YS | சீரழிக்கும் கொரோனாவும் … கல்வி நிலையும்…

வகுப்பறை மறந்ததே ! கனவுகள் சிதைந்ததே ! எங்கள் கல்வி நம்பிக்கை கத்தி முனையில் தொக்கி நிக்கின்றதே ! கற்கும் மணம் தளர்வடைந்தது.  விடா முயற்சி உன் வருகையினால் சிறகடித்து ஓரிடம் ஒடிங்கிவிட்டது கோரோனாவே ! கற்பவரின் வாழ்வுக்கு கேள்விக்குறி சமமாக  பரவலடைந்த பாடசாலை கல்விக்கு முற்றுப்புள்ளி   பாலகரோ அரிச்சுவடி மறந்தனர் ! சுதந்திரக் கல்வி மணித்தியாலங்களாக சிறைப்பட்டு நிகல்நிலை கல்வி வாழ்வு கோலமாக வடித்தெடுக்கப்படுகின்றது. “கொடிய கால மாற்றம்  கல்விக்கு பாரிய ஏமாற்றம் “! தற்போதைய கல்வி மாணவரிடையே தொட்டிலில் உறங்கி சொப்பணம் காண்கின்றது .  நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம் ! அடியோடு மாற்றம் ! பண்புதரமான பயிற்சியில்  தொழிநுட்ப வசதியில் ஆளுமைகள் மேம்பட கல்வி இன்று எம் மத்தியில் அரசாங்கத்தின் முழு வகிபாகத்திற்குள் இலவச கல்வியை தொழிநுட்ப மாற்றதிற்குள் உற்புகுத்தியது சூழ்நிலை மாற்றக்களாக  வசதி வாய்ப்புக்கள் சம பங்கெடுப்பாக  மாணவர்களுக்கு கிடைத்த்தாள் நிகழ் நிலை கல்வியும் வெற்றிகரம்  குவிக்கும் ! எழுத்தறிவு வீத மகத்துவம் பாதிக்கப்பட்டது இளைஞர் > யுவதிகள் பாடசாலை ...