Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

44 | CS | கொரோனா.... வைரஸ்.... ஒழிய வேண்டும் !...

சுற்றித் திரிந்த இடமெல்லாம் 

    சுடுகாடாய் மாற்றிவிட்டாய் ! 

அண்ணன் தம்பி போல பழகியவரையெல்லாம் 

    எதிரியாக பார்க்க வைத்தாய் !

பசிக்கு உணவு தேடிய உடல்களையெல்லாம் 

    உனக்கு இறையாக்கி கொண்டாய் !

இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்று 

    சுற்;றித் திரிந்து கொண்டிருக்கிறாய் இங்கு ! 


உருவத்தில் நீ சிறியவனாக இருந்தாலும் 

    நீ மிகக் கொடியவன் என உணர்த்திவிட்டாய் 

எம் மக்களை சாய்த்து....

    உனை கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும்

நீ யார் என் காட்டிவிட்டாய்....

     உன் முகத்திரையை... 


நீ சென்ற இடமெல்லாம் அழுகுரல் கேட்கிறதே !

    நீ அடைக்களம் கேட்ட இடமெல்லாம்

நிரம்பிப்போய் கிடக்கிறதே உன் தொற்றால் !..

    எத்திசையிலும் உனை காண முடிகிறதே..!

 உனக்கு என்னதான் வேண்டும் எங்களிடம்...!


முன்னோர்கள் சொல்லி வைத்த தர்மங்களை

    மதித்து நடந்திருந்தால் எங்களுக்கு ஏன் இந்த நிலைமை..

உனை சொல்லிக் குற்றமில்லை   

      எங்களைதான் சொல்ல வேண்டும் ...!

விஞ்ஞானம் என்று சொல்லி கொண்டு 

       மெய்ஞானத்தை மறந்து ஆடிநோம்...

அதற்கு பலனாகத்தான் அனுபவிக்கிறோம்

        உனை வாங்கிக் கொண்டு...!


என் நாடு > என் வீடு என்று எல்ல போட்டு 

     வாழ்ந்த எங்களுக்கு ....

எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என   

      உணர்த்திவிட்டாய் இந்த நிமிடத்தில்...!

இது தான் எங்களுக்கு அலாரம். இதில் 

      நாங்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால்

உனை போல எத்தனை நோய்களிடம் மாட்டிக்கொள்ளுமோ 

    எங்கள் பூமி..!


சத்தம் இல்லாத உன் போர் 

   எங்களை அடக்கிவிட்டது !

யுத்தம் இல்லாத உன் போர்

   எங்களை பலவீனத்தை புரிய வைத்து விட்டது ! 

உனைத் திட்டுவதற்கோ உனை சாபமிடுவதற்கோ 

   எங்களுக்கு உரிமையில்லை என நினைக்கிறோம் !

ஏன் என்றால் ? உன்னை நாங்கள் தான் உருவாக்கினோம் 

   நாங்களே முதள் குற்றவாளி என ஒப்புக்கொள்கிறோம் ! 


உனை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம் !    

   நீ வந்த வழி யாருக்கும் தெரியாது !

நீ செல்லும் வழி யாருக்கும் தெரியாமல் சென்றுவிடு !

    எங்களை நிம்மதியாக வாழவிடு.

கொரோனாவே .....!!

by A. Saradha




Comments

Popular posts from this blog

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச...

47 | SS | அன்பிற்கினிய அரசாங்கமே! கேளுங்கள்.

என்னோடு வாழப்பழகும் உமது நாட்டின் அபிவிருத்திக்கு சில வழிகள். போதுமான போசாக்கில் பொல்லாப்பாம் வறுமையை வரம் அளித்தேனாம். அயலான நிலத்திலே ஐந்தாறு பயிரிட்டால் வளம்பெற வழியில்லையோ? வீதி தோறும் விதிகளால் நிரம்பியும், விபத்துகளால் விழுந்து போனீர்கள். என் ஒற்றை ஊரடங்கு விதியால் உதிரத்தை வீதி தானம் பெறலில்லையே... வீட்டில் தூங்கி கிடப்பதால் வீணாய் சண்டை போடும் வீணர்களாக்கினேனாம். நகரை விட்டு நகர்ந்து கிராமத்திலும் உங்கள் காவல்துறை கண்காணிப்பில்லையோ? கல்வியில் தடைசெய்து தொழில் வாய்ப்புகள் பறித்தேனென்றீர்கள். ஏழை மாணவர்களுக்கு எட்டா உம் இணைய கல்வி தீர்வாகிடுமோ? பரீட்சைகள் தள்ளி போயினவாம் பல நாள் படிப்பை பாழாக்கி விட்டேனாம். புத்தக பூச்சிகளாக கிடக்கும் பலரில் புது கண்டுபிடிப்புகள் அறியவில்லையோ? புது மரங்களால் நிரப்ப வேண்டிய சூழலை புகை கொண்டு மறைத்தீர். இயற்கை எனக்கும் அன்னை என அவள் புகார் போக்கினேனே... ஆறாய் > குளமாய் > அருவியாய் > கடலாய் நிரம்பிய நீரில் கொட்டி குவித்தீர் குப்பை கூளங்களை. இந் நடத்தை குறைய உம் நடமாட்டம் குறைத்தேன் என சிந்திக்கவில்லையா? இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டோருக்கு...

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana