Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

53 | SS | இயற்கையின் குமுறல்


இயற்கை அன்னை கருவிலே
இன்புற்று வாழ்கின்ற நாம்
இயற்கையின் இனிது மறந்து 
இயமனாய் மாறியதேனோ!

இயற்கை தந்த வளங்கள் பலவும் 
இந்நிலம் முழுதும் பரவிக் கிடக்க 
இங்கு மனிதனின் தேவை கூடவே
இயற்கையை சீர்க்குழைப்பதேனோ!

இருப்பதை கொண்டே சிறப்புடன் வாழும் காலம் மறந்து
இயற்கையை அழித்து இன்னலடையும் 
இவனோ மதி உள்ள மாமனிதன்?
இவன் மரம் செடி கொடி மண்ணில் இருப்பதாலே
இயற்கையை அழிக்க துடித்தானோ!

இவள் கொண்ட வளத்தினையும்
வீண் கொள்ள வைத்து
நாளுக்கு நாளாய் நீ நாகரிகம் வளர்த்து
இருக்கும் கனிம வளங்களையே  கண் அசைவில் சிதைத்து
கண்ட வாயுவையே  காற்றினிலே விதைத்து
இன்னினி கண் கண்ட நீரினையும் கானல் நீராக்கி
இவன் புண் கொள்ள செய்தானோ!

நல்மண் கொண்ட நிலத்தினையே
இழைத்த கொடுமைதனில்
ஈன்றெடுத்தேன் கொரோனாவை
கொன்று போக துடிக்கின்றன –
இக்கொடுமை இழைத்த பூச்சிகளை
மாண்டு போகுமோ மனித இனம்
இனியேனும் மனம் திரும்புமோ  இயற்கையிடம்..

இதம் தரும் குளிர் காற்று இருக்க 
இம்சை தரும் ஏசி எதற்கு?
இறைவனின் படைப்பு இருக்க 
இக்கணம் மறையும் செயற்கை எதற்கு?

இமைகள் திறந்து வைத்தாலே
இதயத்தை நிறைக்கும் இயற்கை பரமசுகம்
இளமையின் இங்கிதம் அறிந்த மனிதா
இறக்கும் முன்பே உயிர்த்தெழு
இயற்கை நியதியிலே மீண்டும் 
இவ்வளவையும் நேசித்து விடு
இப்போது அல்ல இறக்கும் நொடியிலும் கூட

இமைகள் திறந்து வைத்தாலே
இதயத்தை நிறைக்கும் இயற்கை பரமசுகம்
இளமையின் இங்கிதம் அறிந்த மனிதா
இறக்கும் முன்பே உயிர்த்தெழு
இயற்கை நியதியிலே மீண்டும் 
இவ்வளவையும் நேசித்து விடு

இப்போது அல்ல இறக்கும் நொடியிலும் கூட
இருக்கின்ற நோய்கள் அனைத்தும் இவ்வுடலை தாக்க
இதயம் வெடித்து நடைப்பிணமாகி 
இறக்க நேரிடுவதேனோ
இயற்கை தரும் உணவு நிரம்பிய போதும் 
இச்சையூட்டும் இறைச்சிக்கு அடிப்பணிந்து 
இலவசமாக பெற்றுக்கொண்ட கொரோனா 
இதுவரை தந்துவிட்டது 
இயற்கையின் இனிமையை மறந்ததன் விளைவை…….

by K. Mangalesh 

38


Comments

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana

25 | YS | சீரழிக்கும் கொரோனாவும் … கல்வி நிலையும்…

வகுப்பறை மறந்ததே ! கனவுகள் சிதைந்ததே ! எங்கள் கல்வி நம்பிக்கை கத்தி முனையில் தொக்கி நிக்கின்றதே ! கற்கும் மணம் தளர்வடைந்தது.  விடா முயற்சி உன் வருகையினால் சிறகடித்து ஓரிடம் ஒடிங்கிவிட்டது கோரோனாவே ! கற்பவரின் வாழ்வுக்கு கேள்விக்குறி சமமாக  பரவலடைந்த பாடசாலை கல்விக்கு முற்றுப்புள்ளி   பாலகரோ அரிச்சுவடி மறந்தனர் ! சுதந்திரக் கல்வி மணித்தியாலங்களாக சிறைப்பட்டு நிகல்நிலை கல்வி வாழ்வு கோலமாக வடித்தெடுக்கப்படுகின்றது. “கொடிய கால மாற்றம்  கல்விக்கு பாரிய ஏமாற்றம் “! தற்போதைய கல்வி மாணவரிடையே தொட்டிலில் உறங்கி சொப்பணம் காண்கின்றது .  நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம் ! அடியோடு மாற்றம் ! பண்புதரமான பயிற்சியில்  தொழிநுட்ப வசதியில் ஆளுமைகள் மேம்பட கல்வி இன்று எம் மத்தியில் அரசாங்கத்தின் முழு வகிபாகத்திற்குள் இலவச கல்வியை தொழிநுட்ப மாற்றதிற்குள் உற்புகுத்தியது சூழ்நிலை மாற்றக்களாக  வசதி வாய்ப்புக்கள் சம பங்கெடுப்பாக  மாணவர்களுக்கு கிடைத்த்தாள் நிகழ் நிலை கல்வியும் வெற்றிகரம்  குவிக்கும் ! எழுத்தறிவு வீத மகத்துவம் பாதிக்கப்பட்டது இளைஞர் > யுவதிகள் பாடசாலை ...