Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

53 | SS | இயற்கையின் குமுறல்


இயற்கை அன்னை கருவிலே
இன்புற்று வாழ்கின்ற நாம்
இயற்கையின் இனிது மறந்து 
இயமனாய் மாறியதேனோ!

இயற்கை தந்த வளங்கள் பலவும் 
இந்நிலம் முழுதும் பரவிக் கிடக்க 
இங்கு மனிதனின் தேவை கூடவே
இயற்கையை சீர்க்குழைப்பதேனோ!

இருப்பதை கொண்டே சிறப்புடன் வாழும் காலம் மறந்து
இயற்கையை அழித்து இன்னலடையும் 
இவனோ மதி உள்ள மாமனிதன்?
இவன் மரம் செடி கொடி மண்ணில் இருப்பதாலே
இயற்கையை அழிக்க துடித்தானோ!

இவள் கொண்ட வளத்தினையும்
வீண் கொள்ள வைத்து
நாளுக்கு நாளாய் நீ நாகரிகம் வளர்த்து
இருக்கும் கனிம வளங்களையே  கண் அசைவில் சிதைத்து
கண்ட வாயுவையே  காற்றினிலே விதைத்து
இன்னினி கண் கண்ட நீரினையும் கானல் நீராக்கி
இவன் புண் கொள்ள செய்தானோ!

நல்மண் கொண்ட நிலத்தினையே
இழைத்த கொடுமைதனில்
ஈன்றெடுத்தேன் கொரோனாவை
கொன்று போக துடிக்கின்றன –
இக்கொடுமை இழைத்த பூச்சிகளை
மாண்டு போகுமோ மனித இனம்
இனியேனும் மனம் திரும்புமோ  இயற்கையிடம்..

இதம் தரும் குளிர் காற்று இருக்க 
இம்சை தரும் ஏசி எதற்கு?
இறைவனின் படைப்பு இருக்க 
இக்கணம் மறையும் செயற்கை எதற்கு?

இமைகள் திறந்து வைத்தாலே
இதயத்தை நிறைக்கும் இயற்கை பரமசுகம்
இளமையின் இங்கிதம் அறிந்த மனிதா
இறக்கும் முன்பே உயிர்த்தெழு
இயற்கை நியதியிலே மீண்டும் 
இவ்வளவையும் நேசித்து விடு
இப்போது அல்ல இறக்கும் நொடியிலும் கூட

இமைகள் திறந்து வைத்தாலே
இதயத்தை நிறைக்கும் இயற்கை பரமசுகம்
இளமையின் இங்கிதம் அறிந்த மனிதா
இறக்கும் முன்பே உயிர்த்தெழு
இயற்கை நியதியிலே மீண்டும் 
இவ்வளவையும் நேசித்து விடு

இப்போது அல்ல இறக்கும் நொடியிலும் கூட
இருக்கின்ற நோய்கள் அனைத்தும் இவ்வுடலை தாக்க
இதயம் வெடித்து நடைப்பிணமாகி 
இறக்க நேரிடுவதேனோ
இயற்கை தரும் உணவு நிரம்பிய போதும் 
இச்சையூட்டும் இறைச்சிக்கு அடிப்பணிந்து 
இலவசமாக பெற்றுக்கொண்ட கொரோனா 
இதுவரை தந்துவிட்டது 
இயற்கையின் இனிமையை மறந்ததன் விளைவை…….

by K. Mangalesh 

38


Comments

Popular posts from this blog

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச...

47 | SS | அன்பிற்கினிய அரசாங்கமே! கேளுங்கள்.

என்னோடு வாழப்பழகும் உமது நாட்டின் அபிவிருத்திக்கு சில வழிகள். போதுமான போசாக்கில் பொல்லாப்பாம் வறுமையை வரம் அளித்தேனாம். அயலான நிலத்திலே ஐந்தாறு பயிரிட்டால் வளம்பெற வழியில்லையோ? வீதி தோறும் விதிகளால் நிரம்பியும், விபத்துகளால் விழுந்து போனீர்கள். என் ஒற்றை ஊரடங்கு விதியால் உதிரத்தை வீதி தானம் பெறலில்லையே... வீட்டில் தூங்கி கிடப்பதால் வீணாய் சண்டை போடும் வீணர்களாக்கினேனாம். நகரை விட்டு நகர்ந்து கிராமத்திலும் உங்கள் காவல்துறை கண்காணிப்பில்லையோ? கல்வியில் தடைசெய்து தொழில் வாய்ப்புகள் பறித்தேனென்றீர்கள். ஏழை மாணவர்களுக்கு எட்டா உம் இணைய கல்வி தீர்வாகிடுமோ? பரீட்சைகள் தள்ளி போயினவாம் பல நாள் படிப்பை பாழாக்கி விட்டேனாம். புத்தக பூச்சிகளாக கிடக்கும் பலரில் புது கண்டுபிடிப்புகள் அறியவில்லையோ? புது மரங்களால் நிரப்ப வேண்டிய சூழலை புகை கொண்டு மறைத்தீர். இயற்கை எனக்கும் அன்னை என அவள் புகார் போக்கினேனே... ஆறாய் > குளமாய் > அருவியாய் > கடலாய் நிரம்பிய நீரில் கொட்டி குவித்தீர் குப்பை கூளங்களை. இந் நடத்தை குறைய உம் நடமாட்டம் குறைத்தேன் என சிந்திக்கவில்லையா? இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டோருக்கு...

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana