Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

56 | YS | மதிப்பு மிக்கதோர் சூழல்

அழகே ! பேரழகே.. ! - இயற்கை 

அன்னையின்அரும்பெரும் கொடையே !

இறைவனே இயற்கை - இவ்வியற்கையே 

இறைவன் ! நாமெல்லாம்

இவர்களின் குழந்தைகள் !


பச்சை வண்ண சூழலே ஓவியம் ..! - இருளில் 

மூழ்கிய இரவை வழியனுப்பி 

வெளிச்சத்தை பரப்பி... - சாந்தமான 

பல்வியல் தொடங்கி....

சங்கீதமாய் மலரும் காலைப் பொழுதினை 

என்னவென்று வர்ணிப்பது 


நதி என்னும் பெண் மகளின்

சந்தோஷ புன்னகையை ! - இயற்கையின்

கானம் ரீங்காரமிடும் வண்டுகளும் 

பூக்களை தழுவும் தேனீ கூட்டமும் 

இயற்கையின் வர்ணஜாலம்.. !



மண் வாசனை வீசும் அத்தருணம் - தென்றல்

பூமி தாயை தழுவும் - அந்த 

நொடிகளை வர்ணிக்க கவிதைகள் 

போதவில்லை ! 

பறவைகளின் கீச்சொலியே - சங்கீத 

ஸ்வரங்களாக மாறும் !


பூமி தாயின் சுற்றுகையே - நம் 

பிறவியின் தத்ததுவம் 

சூழலை பிரகாசிக்க வைக்கும் மின்னல் - மனதை 

சிறை பிடிக்கும் இடி முழக்கம் !

மேகம் மழையாகப் பொழியும்

பூமி தாய் மனம் குளிர்வாள்...


இக்காட்சியே இயற்கையின் செய்யுள் 

இவையெல்லாம் காணும் வரம் - மானிடனாய் 

பிறந்து ஆறறிவு கொண்ட எமக்கு கிடைத்துள்ளது 

நம் உணர்வுகளால் - ஐம்புலன்களை

உணர்ந்து இயற்கையின் மதிப்பை 

அறியும் அத்தருணம் - நம் 

ஆன்மாக்கள் முத்தி இன்பம் காணும் 

பொன்னாலாகும்......

by
P. Vidhurshani










Comments

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

26 | YJ | தழைக்க ஏங்கும் செந்நெல்

உணவின் அருமை அறியாது உன்னதமான என்னை அன்று உதாசீனமாய் வீசி எறிந்தாயே சேற்றோடு போராடுபவனின் உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட செந்நெல் நான்- இன்று என் ஏளனப்பார்வைக்கு முன் நீ விழிகளும் உற்று நோக்கிட போராடும் சிறுமையை விஞ்சிய சிறுமை கொரோனா என்னும் பெயரால் காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை அன்று நீ என்னை வீசினாய் இன்று எனக்காக ஏங்குகின்றாய் இத்தனை யுகங்களாக என்னை இரைத்து எறிந்தது போதும் நாளைய உலகை நீ காண இக்கனமே என்னை பூமித்தாயோடு இணையச்செய்வாய் நாளை உன் பசிப்பிணிக்கு நானே மருந்தாக உதிப்பேன். by S. Shakthi

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana