Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

51 | YS | இயற்கை

அன்னையின்றி அமையாத அவனியிலே...

யாம் பெற்ற அருட்கொடையாம் 

இயற்கையே.....


முகிலினங்கள் ஒன்றோடொன்று முட்டிமோத 

முத்துத்துளியாய் மழை பொழிய 

வானை முத்தமிடும் மலையைத் தொட்டு;......

நிலத்துடன் காதல் கொண்டு 

சிறு அருவியாய் பொழிய 

மழைச்சாரல் மண்ணை முத்தமிட்;டதுவே......


சலசலவென புனல் பெருக்கெடுக்க 

சிலுசிலுவென பூங்காற்று மேனியை சிலிர்க்கவைக்க 

பட்சி இனங்கள் ஆனந்த கீதம் இசைக்க 

பூக்கள் பூத்து குளுங்கி மணம் வீச

பசுமையின் உறைவிடமாகிய வண்ண சோலையிலே

தேனீக்கள் ரீங்காரம் செய்ததுவே......


மண் வாசனையோடு ஓர் பனித்துளி

என் கையை நனைத்திட 

கடலலைகள் தாலாட்டி

ஆதவனை உறங்கவைக்க சுடரொளிக்கும் வெண்மதி 

பால் வெண்ணிறமாய் வானிலே பவனிவந்து

விண்ணை ஒழிர்வித்ததுவே 

ஈசன் அருளிய அவனியிலே 

இரு கண் கொண்டு காண இயலா 

இயற்கையின் அற்புத காட்சியிது 


 

உள்ளம் உடைந்து மனம் நொந்து 

வருத்திடும் மானிடா..... !

இயற்கை கொடையை .....

ஒரே ஒரு தடவை எட்டி பார்த்தாலே போதும் 

உன் உள்ளம் தெளிவடைந்து 

உத்வேகம் பெற்றிடலாம் 

புது ஜனனமும் அடைந்திடலாம் .

அதனுடன் நீ ஒன்றித்து விட்டால்


பிறப்பதும் உன்னில் இறப்பதும் உன்னில்   

நிலையாய் வாழ்வதும் உன்னில் 

நிரந்தரமற்;ற அவனியிலே... 

நிரந்தரமானது உன்  

மாற்றங்களும் நீயும் மட்டுமே

இனிய இயற்கையே..  


கல்லுக்குள் ஈரம் அருவியாய் கசிய 

கல்லுக்குள் மரமும் தென்றல் பேச 

இயற்கையும் காதல் கடிதம் எழுதியது 

பச்சை நிறத்தில் மலையின் புரட்சி 

இது இயற்கையின் ஆட்சி

இன்னும் ஒரு ஜனனம் பெற்று 

உன்னுடன் வாழ்ந்திட வரம் தருவாயா ?

இன்பந்தரும் இயற்கையே.....

by J. Selviya 

146



Comments

Post a Comment

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

26 | YJ | தழைக்க ஏங்கும் செந்நெல்

உணவின் அருமை அறியாது உன்னதமான என்னை அன்று உதாசீனமாய் வீசி எறிந்தாயே சேற்றோடு போராடுபவனின் உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட செந்நெல் நான்- இன்று என் ஏளனப்பார்வைக்கு முன் நீ விழிகளும் உற்று நோக்கிட போராடும் சிறுமையை விஞ்சிய சிறுமை கொரோனா என்னும் பெயரால் காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை அன்று நீ என்னை வீசினாய் இன்று எனக்காக ஏங்குகின்றாய் இத்தனை யுகங்களாக என்னை இரைத்து எறிந்தது போதும் நாளைய உலகை நீ காண இக்கனமே என்னை பூமித்தாயோடு இணையச்செய்வாய் நாளை உன் பசிப்பிணிக்கு நானே மருந்தாக உதிப்பேன். by S. Shakthi

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana