Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

51 | YS | இயற்கை

அன்னையின்றி அமையாத அவனியிலே...

யாம் பெற்ற அருட்கொடையாம் 

இயற்கையே.....


முகிலினங்கள் ஒன்றோடொன்று முட்டிமோத 

முத்துத்துளியாய் மழை பொழிய 

வானை முத்தமிடும் மலையைத் தொட்டு;......

நிலத்துடன் காதல் கொண்டு 

சிறு அருவியாய் பொழிய 

மழைச்சாரல் மண்ணை முத்தமிட்;டதுவே......


சலசலவென புனல் பெருக்கெடுக்க 

சிலுசிலுவென பூங்காற்று மேனியை சிலிர்க்கவைக்க 

பட்சி இனங்கள் ஆனந்த கீதம் இசைக்க 

பூக்கள் பூத்து குளுங்கி மணம் வீச

பசுமையின் உறைவிடமாகிய வண்ண சோலையிலே

தேனீக்கள் ரீங்காரம் செய்ததுவே......


மண் வாசனையோடு ஓர் பனித்துளி

என் கையை நனைத்திட 

கடலலைகள் தாலாட்டி

ஆதவனை உறங்கவைக்க சுடரொளிக்கும் வெண்மதி 

பால் வெண்ணிறமாய் வானிலே பவனிவந்து

விண்ணை ஒழிர்வித்ததுவே 

ஈசன் அருளிய அவனியிலே 

இரு கண் கொண்டு காண இயலா 

இயற்கையின் அற்புத காட்சியிது 


 

உள்ளம் உடைந்து மனம் நொந்து 

வருத்திடும் மானிடா..... !

இயற்கை கொடையை .....

ஒரே ஒரு தடவை எட்டி பார்த்தாலே போதும் 

உன் உள்ளம் தெளிவடைந்து 

உத்வேகம் பெற்றிடலாம் 

புது ஜனனமும் அடைந்திடலாம் .

அதனுடன் நீ ஒன்றித்து விட்டால்


பிறப்பதும் உன்னில் இறப்பதும் உன்னில்   

நிலையாய் வாழ்வதும் உன்னில் 

நிரந்தரமற்;ற அவனியிலே... 

நிரந்தரமானது உன்  

மாற்றங்களும் நீயும் மட்டுமே

இனிய இயற்கையே..  


கல்லுக்குள் ஈரம் அருவியாய் கசிய 

கல்லுக்குள் மரமும் தென்றல் பேச 

இயற்கையும் காதல் கடிதம் எழுதியது 

பச்சை நிறத்தில் மலையின் புரட்சி 

இது இயற்கையின் ஆட்சி

இன்னும் ஒரு ஜனனம் பெற்று 

உன்னுடன் வாழ்ந்திட வரம் தருவாயா ?

இன்பந்தரும் இயற்கையே.....

by J. Selviya 

146



Comments

Post a Comment

Popular posts from this blog

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச...

47 | SS | அன்பிற்கினிய அரசாங்கமே! கேளுங்கள்.

என்னோடு வாழப்பழகும் உமது நாட்டின் அபிவிருத்திக்கு சில வழிகள். போதுமான போசாக்கில் பொல்லாப்பாம் வறுமையை வரம் அளித்தேனாம். அயலான நிலத்திலே ஐந்தாறு பயிரிட்டால் வளம்பெற வழியில்லையோ? வீதி தோறும் விதிகளால் நிரம்பியும், விபத்துகளால் விழுந்து போனீர்கள். என் ஒற்றை ஊரடங்கு விதியால் உதிரத்தை வீதி தானம் பெறலில்லையே... வீட்டில் தூங்கி கிடப்பதால் வீணாய் சண்டை போடும் வீணர்களாக்கினேனாம். நகரை விட்டு நகர்ந்து கிராமத்திலும் உங்கள் காவல்துறை கண்காணிப்பில்லையோ? கல்வியில் தடைசெய்து தொழில் வாய்ப்புகள் பறித்தேனென்றீர்கள். ஏழை மாணவர்களுக்கு எட்டா உம் இணைய கல்வி தீர்வாகிடுமோ? பரீட்சைகள் தள்ளி போயினவாம் பல நாள் படிப்பை பாழாக்கி விட்டேனாம். புத்தக பூச்சிகளாக கிடக்கும் பலரில் புது கண்டுபிடிப்புகள் அறியவில்லையோ? புது மரங்களால் நிரப்ப வேண்டிய சூழலை புகை கொண்டு மறைத்தீர். இயற்கை எனக்கும் அன்னை என அவள் புகார் போக்கினேனே... ஆறாய் > குளமாய் > அருவியாய் > கடலாய் நிரம்பிய நீரில் கொட்டி குவித்தீர் குப்பை கூளங்களை. இந் நடத்தை குறைய உம் நடமாட்டம் குறைத்தேன் என சிந்திக்கவில்லையா? இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டோருக்கு...

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana