Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

50 | CJ | சாமிக்கும் இங்கே சங்கடங்கள் நேர்ந்திடுச்சி

சாமிக்கும் இங்கே சங்கடங்கள் நேர்ந்திடுச்சி - பூட்டாத கதவுகளை பூட்டும்படி  ஆயிடிச்சு -
மேகங்களை மறைச்சிருந்த வேண்டாத புகையெல்லாம் -  ஓடியே போயிடிச்சே -
உலகம் தூய்மை ஆயிடிச்சு விண்ணுக்கு ராக்கெட் விடத்தெரிந்த மனிதனுக்கு
மண்ணுக்கு மேலிங்கு மனுஷங்க சாவுறதை நிருத்த  தெரிய வில்லையே,

நிலைமை இங்கு சரியில்லை ஏழை பணக்காரன் என்கின்ற பேதமெல்லாம் கொரோனாகிட்ட இல்ல - கும்பிட்டாலும் விடுவதில்லை

இத்தாலி ஸ்பெயின் இங்கிலாந்து அமெரிக்காவும் தோத்துப்போச்சு தோள்கொடுத்துச்சு இந்தியா வீட்டை விட்டு

வெளியிடத்தில் வீணாக சுற்றுவதை கொரோனா குறைத்துடிச்சு பாட்டுப்பாடி வீட்டுக்குள்ளே

பக்குவமா வாழ்கிறதை பழக்க படுத்துச்சி நல்ல கெட்ட மனிதர்களை நாலு பேரு அறிந்திடவே கொரோனா உதவிடுச்சி கொடூரமாய் பிரிச்சு

அத்தனை விமானங்களும் ஆங்காங்கு தரையிறங்கிடுச்சி மீண்டும் பறந்திடவே மிகு வேட்டை கொண்டுச்சி தூணிலும் துரும்பிலும் துயர் துடைக்கும் கடவுள் உண்டு என்று

நாம் படித்ததுண்டு இப்போது நீ இங்கு கைப்பிடி அவர் காகித பைகளிலும் இருப்பதாக சொல்ல எவரும் அதை தொடுவதில்லை அன்றாடம் உழைத்து உழைத்து

அயராது வியர்வை சிந்தும் ஏழைகளை மனதில் வைத்து இறங்கி விடுவேன் உந்தன் பெரும் பசிக்கு

உலகின் பல லட்சம் உயிர் விருந்தாகி விட்ட பின்னும் விரட்டி தொடர்தல் முறையில்லை பூமியை விட்டு விட்டு புறப்படு  மாற்று கிரகம் அங்கேயும்  மனிதருண்டா ஆராய்ந்து சொல்லிவிடு குப்பை கொரோனாவே எங்கள் மனித குலத்தை வாழவிடு

by N. Dharshika 

 



Comments

Popular posts from this blog

54 | YS | கொரோனாவும் எம் நாடும்

வானரம் சூழ்ந்த வையகம் எங்கும்  பரவி வரும் கொடூரமான கொரோனா வாழ வேண்டிய மனிதரை வைகுண்டம் சென்றிட  வழியமைத்த கொரோனா    கூடுமா இன்னும் இல்லையேல் கூலியின் வயிற்றில் அடிக்குமா ...! அலை அலையாய் மனிதர் கூட்டத்தை கொன்று குவித்ததென்ன... அநாதை பினமாய் அள்ளி அள்ளி குவிப்பதென்ன ... கல கல வென கலகலப்பு ஒலித்து கொண்டிருந்த ஓராயிரம் வீடுகளில்  - இன்று கண்ணீரும் கம்பளையும் நிறைந்த காவியத்  தோற்றத்தை கண்டீரோ..... காடு மேடெல்லாம் ஓடித்திரிந்தவரின் கால்கள்  தரையில் பதித்து நின்றதென்ன... காணல் நீராய் போன எம் நாட்டு ஜனங்களின் கம்பீரமும் , கானகத்தையே சுற்றி வளைக்கும்  கனாக்களும் கடை தெருவிலே நின்ற  காட்சிகளை கண்குளிர கண்டீரோ கொலை கொலையாய் கொண்று தீர்த்து  கொடுங்கோலனாக மாறியதென்ன  கொரொனா என்ற கொடிய உயிரினம்  கூட்டம் கூட்டமாய் கூடி ஆடித் திரிந்த  குமரன் குமரியினம் இன்று  கூட்டுக்குள் முடங்கிக் கிடப்பதென்ன... கூலியாட்களின் குமுறல்களையும்  கூலிவீட்டு குழந்தைகளின் பசி அலறல்களையும்  கேட்கிறது அந்த காதின் வழி  கொடுங்கோலான கொரோனா என்ன...

16 | YS | மாற்றத்தை நோக்கி....

அரும் பெரும் வரலாறு கொண்டு ஆசியாவின் அமிர்தமாய் மின்னிக்கொண்டிருந்த தீவொன்று இயற்கை அன்னையின் இருப்பிடமாக ஈழம் எனும் பெயர் கொண்டு தன்னிறைவாய் தாளமிட்ட தீவொன்று மேற்குலக நாடுகள் மெய்சிலிர்த்துப் போகும் மேன்மை வளம் பூத்துக் குலுங்கிய தீவொன்று இப்பார் எனும் பெரும் புள்ளியை கொரானா எனும் சிறு புள்ளி அடக்கியாளும் காலம் தனில் வல்லரசு நாடுகள் வலுவிழந்து நிற்க உலகப் பொருளாதாரம் படுப்பாதாளம் நோக்கி செல்ல எம் ஈழமும் வறுமையின் வாசம் நுகர்ந்து கொண்டிருக்கிறது காலனின் பாசக்கயிறு கணத்து கொண்டு இருக்கிறது எம் தாய் ஈழத்தை கரம் தூக்கி நிமிர்ந்தெழ செய்ய சேயாய் நாம் கரம் நீட்ட வேண்டிய காலமிது விவசாயம் எனும் முதுகெலும்புக்கு போசாக்கு எனும் எழுச்சியூட்டுவோம் சமநிறைவு சமுதாயத்தை சாஸ்திரமாக்குவோம் வருங்கால தலைமுறையை வசந்தமாக்குவோம் தரமான வைத்தியத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்போம் கல்வி எனும் பேராயுதத்தை இளைய தலைமுறைக்கு இனபேதமின்றி ஒளிரச்செய்வோம் நியாயம் எனும் சொல்லுக்கு வலுவூட்டுவோம் எம் ஈழத்தாய் எழுந்து புன்னகையை உதிரவிட புதல்வர்களாய் எம் கடமையை கண்ணியத்துடன் செய்ய களம் காண்போம். by D. Devapragathi

38 | SS | எதிர்பார்ப்பு

  எதிர் பார்ப்பு அறிவு கொண்டு தான் அகிலம் ஆள முடியுமென்று அகரம் படிக்க நாங்கள் ஆசையாய் பள்ளி சென்றோம் அடுக்கு மாடி கட்டிடமும் ஆடம்பர வருப்பறையும் - இல்லை அன்பு ஒன்றே அறனென்று ஓதும் ஆசிரியர் மட்டுமே எமக்குண்டு போட்டிப் போட்டு படித்து ஒரு நாள் பேட்டி கொடுப்போம் பத்திரிக்கைக்கு பட்டம் பல பெற்று மாற்றி படைப்போம் புது மலையகத்தை இப்படி எத்தனை ஆசைகளை சுமந்து எதிர் கொண்டோம் இறண்டாயிரத்து இருபதை இருளாய் போகும் எதிர்காலம் என்று எள்ளளவும் எண்ணியதில்லை இன்று இருந்த இடத்திலேயே இணைய கல்வி நடக்கிறது இருக்கின்ற பிரச்சினைகளில் -நாங்கள் இணையம் தேடுவது எப்படி உலை கொதித்தும் அரிசியில்லை உயர் ரக கைப்பேசிக்கு எங்கே போக ஆன்லைன் கல்வி கற்க ஆசைதான்- எங்களுக்கும் ஆயிரம் ரூபா சம்பளத்தில் ஆடிப் போகும் விலைவாசியில் அரை வயிறு நிறைந்தால் போதும் ஆன்லைன் கல்வி அப்பறமே பள்ளி திறந்தால் படிப்போம் பட்டம் பலவும் பெறுவோம் தரமான கல்வி கிடைத்தால் தரணியை நாங்கள் ஆள்வோ ம் by Sridevi F12