Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

50 | CJ | சாமிக்கும் இங்கே சங்கடங்கள் நேர்ந்திடுச்சி

சாமிக்கும் இங்கே சங்கடங்கள் நேர்ந்திடுச்சி - பூட்டாத கதவுகளை பூட்டும்படி  ஆயிடிச்சு -
மேகங்களை மறைச்சிருந்த வேண்டாத புகையெல்லாம் -  ஓடியே போயிடிச்சே -
உலகம் தூய்மை ஆயிடிச்சு விண்ணுக்கு ராக்கெட் விடத்தெரிந்த மனிதனுக்கு
மண்ணுக்கு மேலிங்கு மனுஷங்க சாவுறதை நிருத்த  தெரிய வில்லையே,

நிலைமை இங்கு சரியில்லை ஏழை பணக்காரன் என்கின்ற பேதமெல்லாம் கொரோனாகிட்ட இல்ல - கும்பிட்டாலும் விடுவதில்லை

இத்தாலி ஸ்பெயின் இங்கிலாந்து அமெரிக்காவும் தோத்துப்போச்சு தோள்கொடுத்துச்சு இந்தியா வீட்டை விட்டு

வெளியிடத்தில் வீணாக சுற்றுவதை கொரோனா குறைத்துடிச்சு பாட்டுப்பாடி வீட்டுக்குள்ளே

பக்குவமா வாழ்கிறதை பழக்க படுத்துச்சி நல்ல கெட்ட மனிதர்களை நாலு பேரு அறிந்திடவே கொரோனா உதவிடுச்சி கொடூரமாய் பிரிச்சு

அத்தனை விமானங்களும் ஆங்காங்கு தரையிறங்கிடுச்சி மீண்டும் பறந்திடவே மிகு வேட்டை கொண்டுச்சி தூணிலும் துரும்பிலும் துயர் துடைக்கும் கடவுள் உண்டு என்று

நாம் படித்ததுண்டு இப்போது நீ இங்கு கைப்பிடி அவர் காகித பைகளிலும் இருப்பதாக சொல்ல எவரும் அதை தொடுவதில்லை அன்றாடம் உழைத்து உழைத்து

அயராது வியர்வை சிந்தும் ஏழைகளை மனதில் வைத்து இறங்கி விடுவேன் உந்தன் பெரும் பசிக்கு

உலகின் பல லட்சம் உயிர் விருந்தாகி விட்ட பின்னும் விரட்டி தொடர்தல் முறையில்லை பூமியை விட்டு விட்டு புறப்படு  மாற்று கிரகம் அங்கேயும்  மனிதருண்டா ஆராய்ந்து சொல்லிவிடு குப்பை கொரோனாவே எங்கள் மனித குலத்தை வாழவிடு

by N. Dharshika 

 



Comments

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

26 | YJ | தழைக்க ஏங்கும் செந்நெல்

உணவின் அருமை அறியாது உன்னதமான என்னை அன்று உதாசீனமாய் வீசி எறிந்தாயே சேற்றோடு போராடுபவனின் உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட செந்நெல் நான்- இன்று என் ஏளனப்பார்வைக்கு முன் நீ விழிகளும் உற்று நோக்கிட போராடும் சிறுமையை விஞ்சிய சிறுமை கொரோனா என்னும் பெயரால் காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை அன்று நீ என்னை வீசினாய் இன்று எனக்காக ஏங்குகின்றாய் இத்தனை யுகங்களாக என்னை இரைத்து எறிந்தது போதும் நாளைய உலகை நீ காண இக்கனமே என்னை பூமித்தாயோடு இணையச்செய்வாய் நாளை உன் பசிப்பிணிக்கு நானே மருந்தாக உதிப்பேன். by S. Shakthi

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana