Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

50 | CJ | சாமிக்கும் இங்கே சங்கடங்கள் நேர்ந்திடுச்சி

சாமிக்கும் இங்கே சங்கடங்கள் நேர்ந்திடுச்சி - பூட்டாத கதவுகளை பூட்டும்படி  ஆயிடிச்சு -
மேகங்களை மறைச்சிருந்த வேண்டாத புகையெல்லாம் -  ஓடியே போயிடிச்சே -
உலகம் தூய்மை ஆயிடிச்சு விண்ணுக்கு ராக்கெட் விடத்தெரிந்த மனிதனுக்கு
மண்ணுக்கு மேலிங்கு மனுஷங்க சாவுறதை நிருத்த  தெரிய வில்லையே,

நிலைமை இங்கு சரியில்லை ஏழை பணக்காரன் என்கின்ற பேதமெல்லாம் கொரோனாகிட்ட இல்ல - கும்பிட்டாலும் விடுவதில்லை

இத்தாலி ஸ்பெயின் இங்கிலாந்து அமெரிக்காவும் தோத்துப்போச்சு தோள்கொடுத்துச்சு இந்தியா வீட்டை விட்டு

வெளியிடத்தில் வீணாக சுற்றுவதை கொரோனா குறைத்துடிச்சு பாட்டுப்பாடி வீட்டுக்குள்ளே

பக்குவமா வாழ்கிறதை பழக்க படுத்துச்சி நல்ல கெட்ட மனிதர்களை நாலு பேரு அறிந்திடவே கொரோனா உதவிடுச்சி கொடூரமாய் பிரிச்சு

அத்தனை விமானங்களும் ஆங்காங்கு தரையிறங்கிடுச்சி மீண்டும் பறந்திடவே மிகு வேட்டை கொண்டுச்சி தூணிலும் துரும்பிலும் துயர் துடைக்கும் கடவுள் உண்டு என்று

நாம் படித்ததுண்டு இப்போது நீ இங்கு கைப்பிடி அவர் காகித பைகளிலும் இருப்பதாக சொல்ல எவரும் அதை தொடுவதில்லை அன்றாடம் உழைத்து உழைத்து

அயராது வியர்வை சிந்தும் ஏழைகளை மனதில் வைத்து இறங்கி விடுவேன் உந்தன் பெரும் பசிக்கு

உலகின் பல லட்சம் உயிர் விருந்தாகி விட்ட பின்னும் விரட்டி தொடர்தல் முறையில்லை பூமியை விட்டு விட்டு புறப்படு  மாற்று கிரகம் அங்கேயும்  மனிதருண்டா ஆராய்ந்து சொல்லிவிடு குப்பை கொரோனாவே எங்கள் மனித குலத்தை வாழவிடு

by N. Dharshika 

 



Comments

Popular posts from this blog

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச...

47 | SS | அன்பிற்கினிய அரசாங்கமே! கேளுங்கள்.

என்னோடு வாழப்பழகும் உமது நாட்டின் அபிவிருத்திக்கு சில வழிகள். போதுமான போசாக்கில் பொல்லாப்பாம் வறுமையை வரம் அளித்தேனாம். அயலான நிலத்திலே ஐந்தாறு பயிரிட்டால் வளம்பெற வழியில்லையோ? வீதி தோறும் விதிகளால் நிரம்பியும், விபத்துகளால் விழுந்து போனீர்கள். என் ஒற்றை ஊரடங்கு விதியால் உதிரத்தை வீதி தானம் பெறலில்லையே... வீட்டில் தூங்கி கிடப்பதால் வீணாய் சண்டை போடும் வீணர்களாக்கினேனாம். நகரை விட்டு நகர்ந்து கிராமத்திலும் உங்கள் காவல்துறை கண்காணிப்பில்லையோ? கல்வியில் தடைசெய்து தொழில் வாய்ப்புகள் பறித்தேனென்றீர்கள். ஏழை மாணவர்களுக்கு எட்டா உம் இணைய கல்வி தீர்வாகிடுமோ? பரீட்சைகள் தள்ளி போயினவாம் பல நாள் படிப்பை பாழாக்கி விட்டேனாம். புத்தக பூச்சிகளாக கிடக்கும் பலரில் புது கண்டுபிடிப்புகள் அறியவில்லையோ? புது மரங்களால் நிரப்ப வேண்டிய சூழலை புகை கொண்டு மறைத்தீர். இயற்கை எனக்கும் அன்னை என அவள் புகார் போக்கினேனே... ஆறாய் > குளமாய் > அருவியாய் > கடலாய் நிரம்பிய நீரில் கொட்டி குவித்தீர் குப்பை கூளங்களை. இந் நடத்தை குறைய உம் நடமாட்டம் குறைத்தேன் என சிந்திக்கவில்லையா? இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டோருக்கு...

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana