Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

42 | SS | சிதைந்த எம் வாழ்வு !

விரல்களால் பேனை தொட்டு

விதி வசம் நாம் வாழும் - வாழ்வை

எழுத எத்தனிக்கிறேன் - மானிடா 

நீயும் கேளீர் !


இயற்கை வளம்தனிலே இயல்பாய் 

வாழ்ந்த காலம் போய்

எட்டிய தூரமெல்லாம் - ஏழடுக்கு

கட்டிடம் காணுகின்ற காலமையா - இங்கு !


வெள்ளைக்காரன் வித்திட்டான் 

வெளிநாட்டில் உலாவியது !

உலகமே நடுங்கியது !

உயிரும் போனது ! 


நாகரீக போர்வைதனில் - இங்கு

பொல்லாத பூசல்கள்

கடல் தாண்டி வந்ததுவே 

கண்ணறியா வைரஸ் ! 


கொரோனா என்ற பெயரை

கொடூரமாய் சூட்டினர்

கொஞ்சி பேசாமல்

கொஞ்சமாய் வாயை மூடினர் !


சிட்டாய் பறந்த மனிதன் 

சிறைப்பட்டான் வீட்டில்

உற்றார் , உறவினர்கள் எல்லாம்

உற்றுப்பார்க்கும் புள்ளிகளாய் - இங்கு!


பசியோடும் பட்டினியோடும் 

போராடும் வாழ்வு இங்கு 

பகைவர்களாய் பலரையும் 

பார்க்கின்ற கணம் இது !


தாய் என்று ஓடவும் முடியவில்லை !

தாரம் என்று பார்க்கவும் இயலவில்லை! 

தன்னந்தனியே தனிமையிலே 

எரியுதய்யா சில உயிர்கள் !


தொடர்பாடல் சாதனங்களில் 

தொடர்ந்து வரும் கல்வி

தொகையானோருக்கு இங்கில்லை 

தொடர்பு சாதனம் என்ற பள்ளி !


மலிவான பொருட்கள் கூட 

மலையேறி போனது விலைவாசியால் !

வருமானம் இல்லா சூழ்நிலையில்

வறுமை கோட்டின் கீழ் பலகோடி மக்கள் !


கடன் பெற்று காலம் - கடந்து

போகுது எம் வாழ்வும் 

கரைசேரா கடன் சுமையால் 

தவிக்குது எம் தாயகமும் !


கொரோனா எனும் பொல்லாத 

கொடியவனின்

கோரப்பிடிக்குள் சிக்கிக்கொண்டு 

கொடுமையான இவ்வாழ்வை 

கொஞ்சகாலமாய் வாழ்ந்துவிட்டோம்


முற்றுப்பெற வேண்டுமய்யா

பொல்லாத இவ்வாழ்வு !

எதிர்காலம் சிறப்புற இன்றைய நாள் 

இனிமையானதாய் வேண்டும் இறைவா !

by K. Arasudevi





Comments

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

26 | YJ | தழைக்க ஏங்கும் செந்நெல்

உணவின் அருமை அறியாது உன்னதமான என்னை அன்று உதாசீனமாய் வீசி எறிந்தாயே சேற்றோடு போராடுபவனின் உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட செந்நெல் நான்- இன்று என் ஏளனப்பார்வைக்கு முன் நீ விழிகளும் உற்று நோக்கிட போராடும் சிறுமையை விஞ்சிய சிறுமை கொரோனா என்னும் பெயரால் காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை அன்று நீ என்னை வீசினாய் இன்று எனக்காக ஏங்குகின்றாய் இத்தனை யுகங்களாக என்னை இரைத்து எறிந்தது போதும் நாளைய உலகை நீ காண இக்கனமே என்னை பூமித்தாயோடு இணையச்செய்வாய் நாளை உன் பசிப்பிணிக்கு நானே மருந்தாக உதிப்பேன். by S. Shakthi

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana