Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

25 | YS | சீரழிக்கும் கொரோனாவும் … கல்வி நிலையும்…

வகுப்பறை மறந்ததே !
கனவுகள் சிதைந்ததே !
எங்கள் கல்வி நம்பிக்கை கத்தி முனையில் தொக்கி நிக்கின்றதே !
கற்கும் மணம் தளர்வடைந்தது. 

விடா முயற்சி உன் வருகையினால்
சிறகடித்து ஓரிடம் ஒடிங்கிவிட்டது கோரோனாவே !
கற்பவரின் வாழ்வுக்கு கேள்விக்குறி சமமாக 
பரவலடைந்த பாடசாலை கல்விக்கு முற்றுப்புள்ளி  

பாலகரோ அரிச்சுவடி மறந்தனர் !
சுதந்திரக் கல்வி மணித்தியாலங்களாக சிறைப்பட்டு நிகல்நிலை கல்வி வாழ்வு கோலமாக வடித்தெடுக்கப்படுகின்றது.
“கொடிய கால மாற்றம்  கல்விக்கு பாரிய ஏமாற்றம் “!
தற்போதைய கல்வி மாணவரிடையே
தொட்டிலில் உறங்கி சொப்பணம் காண்கின்றது . 

நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம் !
அடியோடு மாற்றம் !
பண்புதரமான பயிற்சியில் 
தொழிநுட்ப வசதியில் ஆளுமைகள்
மேம்பட கல்வி இன்று எம் மத்தியில் அரசாங்கத்தின்
முழு வகிபாகத்திற்குள் இலவச கல்வியை தொழிநுட்ப மாற்றதிற்குள் உற்புகுத்தியது சூழ்நிலை மாற்றக்களாக 

வசதி வாய்ப்புக்கள் சம பங்கெடுப்பாக  மாணவர்களுக்கு கிடைத்த்தாள்
நிகழ் நிலை கல்வியும் வெற்றிகரம்  குவிக்கும் !
எழுத்தறிவு வீத மகத்துவம் பாதிக்கப்பட்டது இளைஞர் >
யுவதிகள் பாடசாலை கல்வியை வறுமை>
பல்தரப்பட்ட சவாலினால் இடை நிறுத்தியதன் விளைவுகள் தான் ! 
யாம் அறிந்த நிலையும் இவைதான் ! 

தொழிநுட்ப வளர்ச்சிக்கேட்ப ஈடுபாட்டுடன்
எந்நிலையிலும் விடியலை காணத்தகும் வழியில் நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடைய இளைஞர் சமுதாயம் தொழில் துறை சார் கல்வி முறைமைகளில் ஈடுப்பட அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகள் >
புலமை பரிசில் திட்டங்கள் தொழிநுட்ப பிரயோக விழிப்புணர்வு ஊடாக ஏட்டுக்கல்வியின் சிறப்பு திறம்பட  நவீன தொழிநுட்பம் மூலம் உலகில்  வித்திட்ட  வாய்ப்பான கல்வி திட்டங்களில் ‘விரக்தி ‘ இல்லாமல் விருத்தியடைய முன்நகர்வோம் ! 

நிலை பேண்தகு அபிவிருத்தியை காலத்திற்கு ஏற்ப திட்டமிடவும் >
நடைமுறை படுத்தவும் சவால்கள் எதிர்கொள்வதோடு  சாதகமான கல்வி துறையை பல்வேறு முறைகளில் கட்டியெழுப்ப முயன்றிடுவோம் ! 

எம் கனவுகள்  சவ பெட்டிகளில் உறங்காமல்  நிஜங்களாக மாற்றமுற எதிர்கால தலைவர்களாக முன்நகருவோம் !


by K. Madushan



Comments

Popular posts from this blog

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச...

47 | SS | அன்பிற்கினிய அரசாங்கமே! கேளுங்கள்.

என்னோடு வாழப்பழகும் உமது நாட்டின் அபிவிருத்திக்கு சில வழிகள். போதுமான போசாக்கில் பொல்லாப்பாம் வறுமையை வரம் அளித்தேனாம். அயலான நிலத்திலே ஐந்தாறு பயிரிட்டால் வளம்பெற வழியில்லையோ? வீதி தோறும் விதிகளால் நிரம்பியும், விபத்துகளால் விழுந்து போனீர்கள். என் ஒற்றை ஊரடங்கு விதியால் உதிரத்தை வீதி தானம் பெறலில்லையே... வீட்டில் தூங்கி கிடப்பதால் வீணாய் சண்டை போடும் வீணர்களாக்கினேனாம். நகரை விட்டு நகர்ந்து கிராமத்திலும் உங்கள் காவல்துறை கண்காணிப்பில்லையோ? கல்வியில் தடைசெய்து தொழில் வாய்ப்புகள் பறித்தேனென்றீர்கள். ஏழை மாணவர்களுக்கு எட்டா உம் இணைய கல்வி தீர்வாகிடுமோ? பரீட்சைகள் தள்ளி போயினவாம் பல நாள் படிப்பை பாழாக்கி விட்டேனாம். புத்தக பூச்சிகளாக கிடக்கும் பலரில் புது கண்டுபிடிப்புகள் அறியவில்லையோ? புது மரங்களால் நிரப்ப வேண்டிய சூழலை புகை கொண்டு மறைத்தீர். இயற்கை எனக்கும் அன்னை என அவள் புகார் போக்கினேனே... ஆறாய் > குளமாய் > அருவியாய் > கடலாய் நிரம்பிய நீரில் கொட்டி குவித்தீர் குப்பை கூளங்களை. இந் நடத்தை குறைய உம் நடமாட்டம் குறைத்தேன் என சிந்திக்கவில்லையா? இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டோருக்கு...

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana