Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

22 | YS | வன்ம கொரோனா… தன்னிறைவு இயற்கை வேளாண்மை

உயிர்களின் உதிரம் குடிக்கும் - பெரும் இரத்த காட்டேரி கொரோனாவே ! வான் கடல் கடந்து வந்து புதிய வரலாற்றை வடித்தெடுத்த சிப்பியே! வாழ்வை கிழித்து ஓரிடம் ஒடுக்கிய மூன்றாம் உலகப்போரே !


ஏற்றுமதி > இறக்குமதி மாற்றம் கண்டதே ! பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதே ! நாடோ முடக்க  நிலையில் > பாட்டாளி வர்க்கம் வறுமை கோசத்தில் ! 


அன்னையின் உதிரமும் > போசாக்கு உண்டியும் ஒரு சாராருக்கு உயிர் யாசகம் தந்ததே ! ஆரோக்கியம் அற்ற இரசாயன உணவுகளிள்  மாறுபாடான வாழ்கை முறைகளில் அமிழ்ந்த மானுடருக்கு நுரையீரல் கசிந்து தாங்கவொன்னா வெதனையும் > சுடுகாடும் வழிகளானதே ! 


பண்டைய பசுமை புரட்சி > சனத்தொகை அதிகரிப்பினால் முடங்கியது  தரம் குன்றிய இரசாயன புரட்சி தோழமையாக வெற்றி கண்டது முறை கேடான உணவு வழக்கம் வாழ்வோடு ஒப்பந்தம் சித்தரிதத்து. "உயர் இரசாயன விளைச்சல் உடலுக்கு கேடு" 


செயற்கை வளர்ச்சி ஊக்கியே அதிக புரதம் கொடுத்து புற்று நோய் உண்டு பண்ணினாய் > உயிர் சத்து > நுண் ஊட்ட குறைபாடு தோற்றுவித்து இரத்த கொதிப்பும் > நீரிழிவும் சொந்தமாக்கினாய் இன் நிலைகளில் தான் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து கொரோனாவே உன் தாக்கம் வட்டமிட்டு உலாவுகிறது ! 
ஆனால் நீ வித்திட்டது எமக்கான மாற்றமும் > விழிப்புணர்வும்; அன்றோ !


போசாக்கான உணவு சங்கிலியை உண்டு பண்ணினாய் உலகத்தவரிடையே ! உயிர் உரங்களின் தொழிற்பாடு > சிறப்பு நீர் பாசணம் > பல்லுயிர் பெருக்கம் > விலங்கு வேளாண்மை மூலம் நஞ்சற்ற விளைச்சல் உணவு > மாடி குடியிருப்புக்கும் மண்வாசனை > விதை தட்டுகளும் கழிவு முகாமைதுவமான பச்சை வீட்டு நோய் உற்பத்தியும் > வினைதிறன் இயற்கை வித்து களஞ்சியம் தொடரத்தான் போகின்றன…


கொரோனா உன் வீழ்சிக்கு எங்கள் நிலை பேண்தகு உயிரோட்டமான தன்னிறைவு கரிம வேளாண்மை அரசாங்கத்தின் பங்கீட்டினால் உயர்ச்சி பெற போகின்றது . வறுமை மட்டமும் > நாட்டின் பொருளாதாரமும் கரிம பசுமை புரட்சியாய் மீளௌப் போகின்றது .......

விழிப்பணர்வுகளாக !......

by A. Junohapes






 

Comments

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

26 | YJ | தழைக்க ஏங்கும் செந்நெல்

உணவின் அருமை அறியாது உன்னதமான என்னை அன்று உதாசீனமாய் வீசி எறிந்தாயே சேற்றோடு போராடுபவனின் உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட செந்நெல் நான்- இன்று என் ஏளனப்பார்வைக்கு முன் நீ விழிகளும் உற்று நோக்கிட போராடும் சிறுமையை விஞ்சிய சிறுமை கொரோனா என்னும் பெயரால் காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை அன்று நீ என்னை வீசினாய் இன்று எனக்காக ஏங்குகின்றாய் இத்தனை யுகங்களாக என்னை இரைத்து எறிந்தது போதும் நாளைய உலகை நீ காண இக்கனமே என்னை பூமித்தாயோடு இணையச்செய்வாய் நாளை உன் பசிப்பிணிக்கு நானே மருந்தாக உதிப்பேன். by S. Shakthi

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana