Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

22 | YS | வன்ம கொரோனா… தன்னிறைவு இயற்கை வேளாண்மை

உயிர்களின் உதிரம் குடிக்கும் - பெரும் இரத்த காட்டேரி கொரோனாவே ! வான் கடல் கடந்து வந்து புதிய வரலாற்றை வடித்தெடுத்த சிப்பியே! வாழ்வை கிழித்து ஓரிடம் ஒடுக்கிய மூன்றாம் உலகப்போரே !


ஏற்றுமதி > இறக்குமதி மாற்றம் கண்டதே ! பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதே ! நாடோ முடக்க  நிலையில் > பாட்டாளி வர்க்கம் வறுமை கோசத்தில் ! 


அன்னையின் உதிரமும் > போசாக்கு உண்டியும் ஒரு சாராருக்கு உயிர் யாசகம் தந்ததே ! ஆரோக்கியம் அற்ற இரசாயன உணவுகளிள்  மாறுபாடான வாழ்கை முறைகளில் அமிழ்ந்த மானுடருக்கு நுரையீரல் கசிந்து தாங்கவொன்னா வெதனையும் > சுடுகாடும் வழிகளானதே ! 


பண்டைய பசுமை புரட்சி > சனத்தொகை அதிகரிப்பினால் முடங்கியது  தரம் குன்றிய இரசாயன புரட்சி தோழமையாக வெற்றி கண்டது முறை கேடான உணவு வழக்கம் வாழ்வோடு ஒப்பந்தம் சித்தரிதத்து. "உயர் இரசாயன விளைச்சல் உடலுக்கு கேடு" 


செயற்கை வளர்ச்சி ஊக்கியே அதிக புரதம் கொடுத்து புற்று நோய் உண்டு பண்ணினாய் > உயிர் சத்து > நுண் ஊட்ட குறைபாடு தோற்றுவித்து இரத்த கொதிப்பும் > நீரிழிவும் சொந்தமாக்கினாய் இன் நிலைகளில் தான் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து கொரோனாவே உன் தாக்கம் வட்டமிட்டு உலாவுகிறது ! 
ஆனால் நீ வித்திட்டது எமக்கான மாற்றமும் > விழிப்புணர்வும்; அன்றோ !


போசாக்கான உணவு சங்கிலியை உண்டு பண்ணினாய் உலகத்தவரிடையே ! உயிர் உரங்களின் தொழிற்பாடு > சிறப்பு நீர் பாசணம் > பல்லுயிர் பெருக்கம் > விலங்கு வேளாண்மை மூலம் நஞ்சற்ற விளைச்சல் உணவு > மாடி குடியிருப்புக்கும் மண்வாசனை > விதை தட்டுகளும் கழிவு முகாமைதுவமான பச்சை வீட்டு நோய் உற்பத்தியும் > வினைதிறன் இயற்கை வித்து களஞ்சியம் தொடரத்தான் போகின்றன…


கொரோனா உன் வீழ்சிக்கு எங்கள் நிலை பேண்தகு உயிரோட்டமான தன்னிறைவு கரிம வேளாண்மை அரசாங்கத்தின் பங்கீட்டினால் உயர்ச்சி பெற போகின்றது . வறுமை மட்டமும் > நாட்டின் பொருளாதாரமும் கரிம பசுமை புரட்சியாய் மீளௌப் போகின்றது .......

விழிப்பணர்வுகளாக !......

by A. Junohapes






 

Comments

Popular posts from this blog

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச...

47 | SS | அன்பிற்கினிய அரசாங்கமே! கேளுங்கள்.

என்னோடு வாழப்பழகும் உமது நாட்டின் அபிவிருத்திக்கு சில வழிகள். போதுமான போசாக்கில் பொல்லாப்பாம் வறுமையை வரம் அளித்தேனாம். அயலான நிலத்திலே ஐந்தாறு பயிரிட்டால் வளம்பெற வழியில்லையோ? வீதி தோறும் விதிகளால் நிரம்பியும், விபத்துகளால் விழுந்து போனீர்கள். என் ஒற்றை ஊரடங்கு விதியால் உதிரத்தை வீதி தானம் பெறலில்லையே... வீட்டில் தூங்கி கிடப்பதால் வீணாய் சண்டை போடும் வீணர்களாக்கினேனாம். நகரை விட்டு நகர்ந்து கிராமத்திலும் உங்கள் காவல்துறை கண்காணிப்பில்லையோ? கல்வியில் தடைசெய்து தொழில் வாய்ப்புகள் பறித்தேனென்றீர்கள். ஏழை மாணவர்களுக்கு எட்டா உம் இணைய கல்வி தீர்வாகிடுமோ? பரீட்சைகள் தள்ளி போயினவாம் பல நாள் படிப்பை பாழாக்கி விட்டேனாம். புத்தக பூச்சிகளாக கிடக்கும் பலரில் புது கண்டுபிடிப்புகள் அறியவில்லையோ? புது மரங்களால் நிரப்ப வேண்டிய சூழலை புகை கொண்டு மறைத்தீர். இயற்கை எனக்கும் அன்னை என அவள் புகார் போக்கினேனே... ஆறாய் > குளமாய் > அருவியாய் > கடலாய் நிரம்பிய நீரில் கொட்டி குவித்தீர் குப்பை கூளங்களை. இந் நடத்தை குறைய உம் நடமாட்டம் குறைத்தேன் என சிந்திக்கவில்லையா? இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டோருக்கு...

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana