Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

17 | SS | கொஞ்சம் கேளும் கோர அனுபவம்

முகங்களை உயர்த்தி முன்னுரிமை அளித்தவன் - அகங்களை
ஆன்மாவிற்கு சொந்தமானது என அறியாதவனாய்
சொந்தங்களை விட சொத்துக்களை உரிமையாக்க முனைந்தான்....

கொத்துக் கொத்தாய் உணவுக்கு ஊசலாடும் உறவுகள்
தன் உறவுகளிடத்தே ஊமையாக, நிவாரணப் பொதியினிடத்தே ஊணமாக
அகத்தின் அழகு முகத்தில் என இருமாப்புடன் இருந்தோர்,
தனித்து விழித்து வாழ எத்தனிக்கிறான் தனி மனிதன்....

காணாத அளவில் கரைக்கொண்ட கடல் - சுனாமியாய்
உயிர்களை தாண்டவமாடி கரையில் மடிய இது சீற்றமல்ல....
தனித்திரு விழித்திரு காணாத கிருமி என்றீர்.....
மக்கள் வயிற்றை நிரப்ப மணுவோடு மகேஷனை தரிசிக்க
மக்கள் முகம் பாராது மகேஷன் முகத்தை மூடிக்கொண்டு எத்திசை சென்றானோ?????

மதங்கள் மனிதனை மனங்களாக்க எத்தனித்த போது - மனங்களால்
மதங்களை பணத்தால் காவு கொண்டான் மனிதன்....
பாமரனோ பண்டைய வைத்தியத்தை கையிலெடுக்க,
பகுத்தறிவாளனே பரவுதலை தடுக்கின்றான்....

பணத்தால் ஓடிய கால்கள் மனத்தால் ஐம்புலன்களை அடக்கி
அவதரித்த குழந்தையின் பாணியில் படுக்கையில் பொழுதைக் கழித்திட
பங்குகளின் வளர்ச்சியில் நிருவகித்த திட்டங்கள் நிதர்சனமாக நிர்வாணமான முதல் தருணம்....

மைதானங்கள் மந்தமாக மதுசாலைகள் தந்தமாக
பலசரக்கு கடைகள் பாதாள உலகிற்கு செல்லவே...
வியர்வையில் கொந்தளித்த நீர் - கண்ணீரால் வரம்பின்றி வளம் வருமோ????

வேதனையில் ஊரெல்லாம் அடக்க உத்தரவிடும் அரசு...
புலன்களை அடக்கி புனிதத்தை பேணி - சமரசமாய்
சங்கமிக்கும் ஐவலயங்கள் பாரினில் - உலக கோப்பையுடன் உருண்டோடியது.....

உள்ளத்தின் உணர்வுதனை உளமாற இதழ்தனிலே என இருமாப்புடன் இருப்போரே அறிவீர் - ஊகான் என் பிறப்பிடம், அகிலமே என் இருப்பிடம்...... பத்து மாதச்சுமை தட்டுத் தடுமாறி
தள்ளிப்போக, (தூய்மை கொண்ட) திரையரங்குகளே (சூழல்) மாசுகளை தடுத்தோட செய்யும் ஆறுகள்...

by
V. Ragavi



Comments

Post a Comment

Popular posts from this blog

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச...

47 | SS | அன்பிற்கினிய அரசாங்கமே! கேளுங்கள்.

என்னோடு வாழப்பழகும் உமது நாட்டின் அபிவிருத்திக்கு சில வழிகள். போதுமான போசாக்கில் பொல்லாப்பாம் வறுமையை வரம் அளித்தேனாம். அயலான நிலத்திலே ஐந்தாறு பயிரிட்டால் வளம்பெற வழியில்லையோ? வீதி தோறும் விதிகளால் நிரம்பியும், விபத்துகளால் விழுந்து போனீர்கள். என் ஒற்றை ஊரடங்கு விதியால் உதிரத்தை வீதி தானம் பெறலில்லையே... வீட்டில் தூங்கி கிடப்பதால் வீணாய் சண்டை போடும் வீணர்களாக்கினேனாம். நகரை விட்டு நகர்ந்து கிராமத்திலும் உங்கள் காவல்துறை கண்காணிப்பில்லையோ? கல்வியில் தடைசெய்து தொழில் வாய்ப்புகள் பறித்தேனென்றீர்கள். ஏழை மாணவர்களுக்கு எட்டா உம் இணைய கல்வி தீர்வாகிடுமோ? பரீட்சைகள் தள்ளி போயினவாம் பல நாள் படிப்பை பாழாக்கி விட்டேனாம். புத்தக பூச்சிகளாக கிடக்கும் பலரில் புது கண்டுபிடிப்புகள் அறியவில்லையோ? புது மரங்களால் நிரப்ப வேண்டிய சூழலை புகை கொண்டு மறைத்தீர். இயற்கை எனக்கும் அன்னை என அவள் புகார் போக்கினேனே... ஆறாய் > குளமாய் > அருவியாய் > கடலாய் நிரம்பிய நீரில் கொட்டி குவித்தீர் குப்பை கூளங்களை. இந் நடத்தை குறைய உம் நடமாட்டம் குறைத்தேன் என சிந்திக்கவில்லையா? இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டோருக்கு...

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana