Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

17 | SS | கொஞ்சம் கேளும் கோர அனுபவம்

முகங்களை உயர்த்தி முன்னுரிமை அளித்தவன் - அகங்களை
ஆன்மாவிற்கு சொந்தமானது என அறியாதவனாய்
சொந்தங்களை விட சொத்துக்களை உரிமையாக்க முனைந்தான்....

கொத்துக் கொத்தாய் உணவுக்கு ஊசலாடும் உறவுகள்
தன் உறவுகளிடத்தே ஊமையாக, நிவாரணப் பொதியினிடத்தே ஊணமாக
அகத்தின் அழகு முகத்தில் என இருமாப்புடன் இருந்தோர்,
தனித்து விழித்து வாழ எத்தனிக்கிறான் தனி மனிதன்....

காணாத அளவில் கரைக்கொண்ட கடல் - சுனாமியாய்
உயிர்களை தாண்டவமாடி கரையில் மடிய இது சீற்றமல்ல....
தனித்திரு விழித்திரு காணாத கிருமி என்றீர்.....
மக்கள் வயிற்றை நிரப்ப மணுவோடு மகேஷனை தரிசிக்க
மக்கள் முகம் பாராது மகேஷன் முகத்தை மூடிக்கொண்டு எத்திசை சென்றானோ?????

மதங்கள் மனிதனை மனங்களாக்க எத்தனித்த போது - மனங்களால்
மதங்களை பணத்தால் காவு கொண்டான் மனிதன்....
பாமரனோ பண்டைய வைத்தியத்தை கையிலெடுக்க,
பகுத்தறிவாளனே பரவுதலை தடுக்கின்றான்....

பணத்தால் ஓடிய கால்கள் மனத்தால் ஐம்புலன்களை அடக்கி
அவதரித்த குழந்தையின் பாணியில் படுக்கையில் பொழுதைக் கழித்திட
பங்குகளின் வளர்ச்சியில் நிருவகித்த திட்டங்கள் நிதர்சனமாக நிர்வாணமான முதல் தருணம்....

மைதானங்கள் மந்தமாக மதுசாலைகள் தந்தமாக
பலசரக்கு கடைகள் பாதாள உலகிற்கு செல்லவே...
வியர்வையில் கொந்தளித்த நீர் - கண்ணீரால் வரம்பின்றி வளம் வருமோ????

வேதனையில் ஊரெல்லாம் அடக்க உத்தரவிடும் அரசு...
புலன்களை அடக்கி புனிதத்தை பேணி - சமரசமாய்
சங்கமிக்கும் ஐவலயங்கள் பாரினில் - உலக கோப்பையுடன் உருண்டோடியது.....

உள்ளத்தின் உணர்வுதனை உளமாற இதழ்தனிலே என இருமாப்புடன் இருப்போரே அறிவீர் - ஊகான் என் பிறப்பிடம், அகிலமே என் இருப்பிடம்...... பத்து மாதச்சுமை தட்டுத் தடுமாறி
தள்ளிப்போக, (தூய்மை கொண்ட) திரையரங்குகளே (சூழல்) மாசுகளை தடுத்தோட செய்யும் ஆறுகள்...

by
V. Ragavi



Comments

Post a Comment

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana

25 | YS | சீரழிக்கும் கொரோனாவும் … கல்வி நிலையும்…

வகுப்பறை மறந்ததே ! கனவுகள் சிதைந்ததே ! எங்கள் கல்வி நம்பிக்கை கத்தி முனையில் தொக்கி நிக்கின்றதே ! கற்கும் மணம் தளர்வடைந்தது.  விடா முயற்சி உன் வருகையினால் சிறகடித்து ஓரிடம் ஒடிங்கிவிட்டது கோரோனாவே ! கற்பவரின் வாழ்வுக்கு கேள்விக்குறி சமமாக  பரவலடைந்த பாடசாலை கல்விக்கு முற்றுப்புள்ளி   பாலகரோ அரிச்சுவடி மறந்தனர் ! சுதந்திரக் கல்வி மணித்தியாலங்களாக சிறைப்பட்டு நிகல்நிலை கல்வி வாழ்வு கோலமாக வடித்தெடுக்கப்படுகின்றது. “கொடிய கால மாற்றம்  கல்விக்கு பாரிய ஏமாற்றம் “! தற்போதைய கல்வி மாணவரிடையே தொட்டிலில் உறங்கி சொப்பணம் காண்கின்றது .  நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம் ! அடியோடு மாற்றம் ! பண்புதரமான பயிற்சியில்  தொழிநுட்ப வசதியில் ஆளுமைகள் மேம்பட கல்வி இன்று எம் மத்தியில் அரசாங்கத்தின் முழு வகிபாகத்திற்குள் இலவச கல்வியை தொழிநுட்ப மாற்றதிற்குள் உற்புகுத்தியது சூழ்நிலை மாற்றக்களாக  வசதி வாய்ப்புக்கள் சம பங்கெடுப்பாக  மாணவர்களுக்கு கிடைத்த்தாள் நிகழ் நிலை கல்வியும் வெற்றிகரம்  குவிக்கும் ! எழுத்தறிவு வீத மகத்துவம் பாதிக்கப்பட்டது இளைஞர் > யுவதிகள் பாடசாலை ...