Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

46 | SS | கண்ணுக்கு புழப்படா உயிரொன்று

கண்ணுக்கு புழப்படா உயிரொன்று

உயிர்கள் பல பறிக்குது

இரத்தங்கள் சிந்தாமல் வடுவது படியாமல்

அகிம்சை யுத்தமொன்று நிகழுது


நீர் வழி வந்ததோ ?

நில வழி வந்ததோ ?

மழை போலே வான்வழிதான் வந்ததோ ?

எவ்வழி வந்தாலென்ன 

உயிர்பழி வாங்கிட

நம் நாட்டுக்குள்ளும் வந்தது


தலை வலி வந்தாலும்

உடல் சோர்வு வந்தாலும் காய்சலது வந்தாலும் 

நம் நாட்டுக்குள்ளே

நமக்குள்ளே தொற்றின் அறிகுறி காட்டுது

உயிர் பயத்தை கூட்டுது


பீசியார் கணக்கது

தொற்றின் எண்ணிக்கையை கூட்டுது

தொற்றது கூடவே

உயிர் பழியும் கூடுது

சற்றென சலனமாய்

பதுங்கி கிடக்குது

பதுங்கி பாயும் போது

துடிக்கும் இதயமும்

துடிப்பதை நிறுத்துது


ஊரடங்கு போட்டாலும் நடமாட்டங்கள் வழமைதான்

பொருள் விலை கூடவே 

பசியென்ன குறையுமா?


பஞ்சம் வருமுன்னே

பட்டினி சாவும் நிகழுமோ ?

நம் நாடு அடுத்த சோமாலியா என்று பெயர் வாங்குமோ?


தடுப்பூசி வழங்கும் பேச்சி ஒரு புறம்

அதன் பக்கவிளைவை சொல்லி பயமுறுத்தும் கூட்டமும் மறு புறம்

எது என்ன நடந்தாலும்

ஆர்பாட்டமும் 

எதிர் புறம்


ஏற்றுமதியில்லை

இறக்குமதியில்லை.

மதி கொண்டு

சிக்கல் தீர்ப்பார் யாரென்று 

நம் நாட்டில் தெரியவில்லை


யாரெங்கு போனாலும்

யாரென்ன செய்தாலும்

கொரோனா 

காலம் இதில்

நரிகள் சில கொழுத்தன

பாமர மந்தைகள் பல மடிந்தன


இதுவும் கடந்து போகும் என்றதிலே

கொரோனா இருலும் நம் நாட்டை 

கடந்திடுமே  தொற்றது தொற்றாமலே நமை நாமே காத்திடுவோம்

கொரானா நம் நாட்டை நீங்கும்வரை 

காத்திருப்போம்

by S. Steeven


149


Comments

Post a Comment

Popular posts from this blog

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச...

16 | YS | மாற்றத்தை நோக்கி....

அரும் பெரும் வரலாறு கொண்டு ஆசியாவின் அமிர்தமாய் மின்னிக்கொண்டிருந்த தீவொன்று இயற்கை அன்னையின் இருப்பிடமாக ஈழம் எனும் பெயர் கொண்டு தன்னிறைவாய் தாளமிட்ட தீவொன்று மேற்குலக நாடுகள் மெய்சிலிர்த்துப் போகும் மேன்மை வளம் பூத்துக் குலுங்கிய தீவொன்று இப்பார் எனும் பெரும் புள்ளியை கொரானா எனும் சிறு புள்ளி அடக்கியாளும் காலம் தனில் வல்லரசு நாடுகள் வலுவிழந்து நிற்க உலகப் பொருளாதாரம் படுப்பாதாளம் நோக்கி செல்ல எம் ஈழமும் வறுமையின் வாசம் நுகர்ந்து கொண்டிருக்கிறது காலனின் பாசக்கயிறு கணத்து கொண்டு இருக்கிறது எம் தாய் ஈழத்தை கரம் தூக்கி நிமிர்ந்தெழ செய்ய சேயாய் நாம் கரம் நீட்ட வேண்டிய காலமிது விவசாயம் எனும் முதுகெலும்புக்கு போசாக்கு எனும் எழுச்சியூட்டுவோம் சமநிறைவு சமுதாயத்தை சாஸ்திரமாக்குவோம் வருங்கால தலைமுறையை வசந்தமாக்குவோம் தரமான வைத்தியத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்போம் கல்வி எனும் பேராயுதத்தை இளைய தலைமுறைக்கு இனபேதமின்றி ஒளிரச்செய்வோம் நியாயம் எனும் சொல்லுக்கு வலுவூட்டுவோம் எம் ஈழத்தாய் எழுந்து புன்னகையை உதிரவிட புதல்வர்களாய் எம் கடமையை கண்ணியத்துடன் செய்ய களம் காண்போம். by D. Devapragathi

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!